Sunday, August 30, 2009

இத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்


இத்ரதோளம் யேகோவா சகாயுச்சு இத்ரதோளம் தெய்வம் என்னே நடத்தி பாடல்
ithratholam yehova sahayuchu ithrathoolam theivam enne nadathi malayalam song

Thursday, August 27, 2009

குறுகாமல் பெருகவேண்டும்


நம் அருமை இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கும் நாம் இந்த கடைசி நிமிடங்களில் வீடுகளைக் கட்டி தோப்புத் துறவுகளோடு கார் பங்களாக்களோடு வாழலாமா? அவர் தான் சீக்கிரம் வரப்போகிறாரே? திருமணம் செய்யத்தான் வேண்டுமா? இப்போது இந்த கடைசி நொடிகளில் போய் குழந்தைகளை பெற்றுக்கொள்வதா? என் படிப்பில், வேலையில் அல்லது தொழிலில் கவனம் செலுத்தவா வேண்டாமா? இன்னும் ஒரு வருடத்தில் அவர் வந்து விட்டால் எல்லா முயற்சிகளும் வீணாகிப் போய்விடுமே? அவர் சீக்கிரம் வருவது போல் தெரிவதால் இருப்பதையெல்லாம் விற்று தின்றுவிட்டு அவருக்காக காத்திருந்தால் என்ன? என கேட்பவர்களுக்கெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் அறிவிப்பது என்னவென்றால் ”நீங்கள் வீடுகளைக் கட்டி, குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள். நீங்கள் பெண்களை விவாகம்பண்ணி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்று, உங்கள் குமாரருக்குப் பெண்களைக்கொண்டு, உங்கள் குமாரத்திகளைப் புருஷருக்குக் கொடுங்கள்; இவர்களும் குமாரரையும் குமாரத்திகளையும் பெறட்டும்; நீங்கள் அங்கே குறுகாமல் பெருக வேண்டும்” என்கிறார்.(எரே:29:5,6)


இருப்பது பாபிலோனில், நிலமையோ அடிமை நிலை, அனைவரும் சிறைப்பட்டு போயிருக்கிறார்கள். ஆகினும் நீங்கள் குறுகக் கூடாது. போயிருக்ககூடிய இடத்தில் நீங்கள் பெருகவேண்டும் என்பது தான் தேவனின் விருப்பம். எருசலேமில் மட்டும்தான் வாழ்ந்திருக்க வேண்டுமென்றில்லை. போகுமிடமெல்லாம் நீங்கள் செழித்திருக்க வேண்டும். பாபிலோனிலும் நீங்கள் வாழ்ந்திருக்க வேண்டும். அதன் மூலம் கர்த்தரின் நாமம் மகிமைப் பட வேண்டும். உன் தேவன் ஜீவனுள்ள தேவன், அவர் உன்னோடிருக்கிறார். சிங்கங்களுக்கு அவர் உன்னைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். எந்த கடினமான சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் உனக்கு வெளிப்படுத்த அவர் வல்லவராயிருக்கிறார் ஆமேன் அவரே உன் ஜீவனுள்ள கர்த்தர் உன்னோடிருப்பவர் வல்லவர் என உலகம் சாட்சி பகர வேண்டும்.


ஆகையால் இந்த இறுதிநாட்களில் எல்லாம் நெறிகெட்டு தறிகெட்டு செல்லும் போது வாய்ப்பே இல்லை வழிகளெல்லாம் அடைபட்டுக்கொண்டிருக்கின்றன இருள் மிகு காலங்கள் மட்டுமே நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன என்கிற போதும் உலகத்தின் சமாதானத்துக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்கிறார் தேவன். அப்போது உங்களுக்கும் சமாதானம் உண்டாயிருக்கும். (நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும்.(எரே:29:7)) நடப்பது எல்லாம் அவரைத் தெரிந்தே நடக்கிறது. தயாராவனவெல்லாம் அவர் வருகைக்கென தயாராகிக்கொண்டிருக்கின்றன. நாம் எதையும் மாற்றவோ சீர்திருத்தவோ முடியாது. இதெல்லாம் கடவுளின் முன் கூட்டிய திட்டங்களே. You can never give him a surprise.

Wednesday, August 26, 2009

யேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்


யேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்
Yesuve Ratchaga Ninne naan snehikum malayalam song

Monday, August 24, 2009

அனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்


அனுதினம் ஜெபிப்பதால் (நீ) சாத்தானின் எதிராளி
ஜெபிப்பதை மறந்து விட்டால் சாத்தானின் கூட்டாளி
கூட்டாளியா நீ? எதிராளியா நீ?
யோசித்துப்பார் நீ யோசித்துப்பார் பாடல்
Anuthinam jebibathaal nee saathaanin ethiraali tamil video song

Monday, August 17, 2009

கண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்


கண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்
Kannuneer ennu maarumo vethanakal ennu theerumo malayalam song

Lyrics in english

Kannuneer ennu maarumo...vedanakal ennu theerumoo..
Kastapaadin kaalangalil rekshippanayi nee varene...[2] [kannuneer ennu..]

Ehattil onnum ellayee...neediyathellam midthyaye...
Paratheshi aanu ulahil...evidennum anyan aallo...[2] [kannuneer ennnu..]

Parane visrama naattil njan...ettuvaan vembal kollunne...
Lesham thaamasam vekkalle...nilppan shakti thellum ellaye...[2] [kannuneer ennu..]

Friday, August 07, 2009

எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?


எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
அவரவர் தொழுகைகளுக்கென வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்களும், சனிக்கிழமை யூதர்களும், ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்களும் என கூடும் படுபிசியான நகரம் ஜெருசலேம். வார இறுதிகளில் ஜனக்கூட்டம் நிரம்பிவழியும். மூன்று மதத்தவரும் இந்நகரத்தை சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனால் தேவனாகிய கர்த்தரோ ”என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமை... தெரிந்துகொண்டேன் (II நாளா:6:6) என கர்த்தர் அக்காலத்திலேயே அந்நகரத்தை சொந்தம் கொண்டாடிவிட்டார். யாரும் அவரிடமிருந்து அதை பிடுங்கமுடியாது. அது அவருக்கு பிடித்தமானதொரு piece of real estate on planet earth.வேதத்தில் மட்டும் 811 முறை இந்த எருசலேம் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு இடங்களில் இது சாலேம் எனவும் (சங்:76:2) 152 இடங்களில் இது சீயோன் எனவும் அழைக்கப்பட்டுள்ளது. பரிசுத்த நகரம், தேவனுடைய நகரம், மகாராஜாவின் நகரம் என இன்னும் பிற பெயர்களிலும் இது பல இடங்களில் அறியப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு ராஜாவாயிருந்த சாலோமான் எருசலேமிலே தேவாலயம் கட்டி முடித்த உடன் கர்த்தர் அவனுக்கு தரிசனமாகி “என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் அதைத் தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும்.” என்றார். (II நாளா:7:16) இப்படியாக இருக்கும் தேவனுடைய பரிசுத்த நகரத்தை துண்டாடும் முயற்சியில் மனிதர்கள் இன்றைக்கு ஈடுபட்டுள்ளார்கள். தனது தலைநகராக இஸ்ரேல் வைத்திருக்கும் அதேவேளையில் பாலஸ்தீனர்களும் two-state solution-ல் தங்கள் தலைநகராக அதை கேட்கிறார்கள். உலகின் பெரும்தலைகள் எருசலேமை இரண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் அல்லது அதுதான் தான் சரியான தீர்வாக கருதுகின்றனர்.

இன்றைக்கு ஜெருசலேமில் இருக்கும் இஸ்லாமியரின் தங்கமசூதி (Dome of the Rock) தொடப்படாமல் பக்கத்திலேயே யூதர்களில் தேவாலயம் கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தங்க மசூதியின் வடமேற்கே 330 அடி தள்ளியே பழைய தேவாலயம் இருந்ததாக கண்டுபிடித்துள்ளார்கள். அதாவது புதிதாக கட்டப்படவிருக்கும் தேவாலயத்தின் புறம்பே இருக்கிற பிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும். பாருங்கள் வெளி:11:1,2 சொல்வதை கவனியுங்கள். "பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒருஅளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி:நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும் அதில் தொழுது கொள்ளுகிறவர்களையும் அளந்துபார். ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிறபிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்."

இந்த வசனத்தின் படி எருசலேம் நகரம் இரண்டாக்கப்படலாம் என்றே தோன்றுகிறது. குறைந்தது மூன்றரை ஆண்டுகள் இந்நகரம் துண்டாடப்பட்டிருக்கும். அதற்கு வரப்போகும் கள்ளத்தீக்கதரிசி கள்ளதீர்க்கதரிசனங்களை சொல்லி யூதர்களை மனம் மாற்றுவான். அந்திகிறிஸ்து அச்செயலுக்கு தலைவனாய் இருந்து சமாதான பிரபு போல தோன்றுவான். எருசலேமிலே யூதர்களும் புறஜாதியாரும் சேர்ந்து ஒன்றாக இருப்பார்கள். சமாதானமும் சவுக்கியமும் உண்டாயிருக்கும்.

அப்புறம் என்னவாகும்? I தெசலோ 5:3 சொல்லுகிறது. சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.

ஜெருசலேமை இரண்டாக்க முயல்பவர்களின் கதி என்னவாகும்? கர்த்தர் சொல்லுகிறார்.
சகரியா 12 9. அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன்.

கட்டப்படும் பலிபீடம்

வெளி:11:1-ல் சொல்லப்பட்டுள்ள பலிபீடத்தைக் கட்டும் பணி கடந்த ஜூலை 9-ம் தியதி தொடக்கப்பட்டுள்ளது. தானியேல் 11:31-ல் சொல்லப்பட்டுள்ள அன்றாட பலியும் இங்கே தான் நடைபெறும். இதை Temple Institute எனும் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதே நாள்தான் (Tisha B’av) சரியாக 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு பரிசுத்த தேவாலயம் இடிக்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த பலிபீடம் 3 அடி நீளமும் 3 அடி உயரமும் 2 அடி அகலமுமாயிருக்கும். இதற்கான கற்கள் மனிதரால் தொடப்படாதவையாய் இருக்க வேண்டு மென்பதற்காக சவக்கடலின் ஆழத்திலிருந்து எடுக்கப்பட்டதாம். மேலும் தேவாலயத்துக்கு தேவையான பாத்திரங்கள், பேழை ,குத்துவிளக்குகள் எல்லாம் ஏற்கனவே இவர்கள் தயார் செய்து ரெடியாக வைத்துள்ளார்கள்.

Saturday, August 01, 2009

யெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்


யெகோவா யீரே தந்தையாம் தெய்வம் நீர் மாத்திரம் போதும் எனக்கு பாடல்
Yehova yirea thanthaiyaam theyvam tamil christian song

யேகோவா யீரே தந்தையாம் தெய்வம் Lyrics


1. யேகோவா யீரே தந்தையாம் தெய்வம்
நீர் மாத்ரம் போதும் எனக்கு
யேகோவா ரப்பா சுகம் தரும் தெய்வம்
உம் தழும்புகளால் சுகமானோம்
யேகோவா ஷம்மா என்கூட இருப்பீர்
என் தேவை எல்லாம் சந்திப்பீர்

நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும்
நீர் மாத்ரம் போதும் எனக்கு (2)

2. யேகோவா ஏலோயீம் சிருஷ்டிப்பின் தேவனே
உம் வார்த்தையால் உருவாக்கினீர்
யேகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே
உம்மைப் போல் வேறு தேவன் இல்லை
யேகோவா ஷாலோம் உம் சமாதானம்
தந்தீர் என் உள்ளத்தில்

நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும்
நீர் மாத்ரம் போதும் எனக்கு (2)

3. இயேசுவே நீரே என் ஆத்ம நேசர்
என் மேல் எவ்வள வன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க உம்மையே தந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே
என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்

நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும்
நீர் மாத்ரம் போதும் எனக்கு (2)


யேகோவாவின் நாமங்கள்

யேகோவா
அர்த்தம் : நித்தியமானவர்,அழிவில்லாதவர்,சர்வ வல்லமையுள்ள தேவன்,இருக்கிறவராகவே இருக்கிறவர்.
இருப்பிடம்: யாத்திராகமம் : 6 :2,3; 3:13,14;, சங்கீதம் : 83 : 17;, ஏசாயா : 12:2 ;26:4;, ஆதியாகமம் : 21:33;

யேகோவா நாமங்களாவன...

1.யேகோவா ஏலோஹீம்
அர்த்தம் : நித்தியமான சிருஷ்டிகர்,தன்னிறையுள்ள தேவன்
இருப்பிடம்: ஆதியாகமம் :2 :4-25
தேவனாகிய கர்த்தர் என்று வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது

2.யேகோவா அடோனாய்
அர்த்தம் : எல்லாவற்றிர்க்கும் மேலானவர்
இருப்பிடம்:ஆதியாகமம் :15:2,8;
கர்த்தராகிய ஆண்டவர் என்று வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது

3.யேகோவா யீரே
அர்த்தம் : எல்லாவற்றையும் பரர்த்துக்கொள்ளக்கூடியவர்
இருப்பிடம்: ஆதியாகமம் :22:14;

4.யேகோவா நிசி
அர்த்தம் : கர்த்தர் எங்கள் ஜெயக்கொடி
இருப்பிடம்: யாத்திராகமம் :17:15;

5.யேகோவா ரப்பா அல்லது யேகோவா ரபேக்கா
அர்த்தம் : பரிகாரியாகிய கர்த்தர்,குணமாக்கிற கர்த்தர்
இருப்பிடம்: யாத்திராகமம் : 15:26;

6.யேகோவா ஷாலோம்
அர்த்தம் : கர்த்தர் நம் சமாதானம்
இருப்பிடம்: நியாதிபதிகள் : 6:24;

7.யேகோவா சிக்கேனு
அர்த்தம் : நிதியின் கர்த்தர்
இருப்பிடம்:ஏரேமியா :23: 6;

8.யேகோவா மெக்காதீஸ்
அர்த்தம் : பரிசுத்தமாக்குகிற கர்த்தர்
இருப்பிடம்: யாத்திராகமம் : 31:13; லேவியராகமம் : 20 : 8; ஆதியாகமம் :20 : 30;21:8;22:9,16; எசேக்கியேல் :20:12;

9.யேகோவா சபயத்
அர்த்தம் : சேனைகளின் கர்த்தர்
இருப்பிடம் : 1 சாமுவேல் 1:3;

10.யேகோவா ஷம்மா
அர்த்தம் : உடன் இருக்கிற கர்த்தர்
இருபபிடம் : எசேக்கியேல்: 48:35;

11.யேகோவா ஏலியோன்
அர்த்தம் : உன்னதமான கர்த்தர்
இருப்பிடம் : சங்கீதம் :7:17;47:35;

12.யேகோவா ரோகி அல்லது யேகோவா ரூவா
அர்த்தம் : கர்த்தர் என் மேய்ப்பர்
இருப்பிடம் : சங்கீதம் : 23:1;

13.யேகோவா ஓசேனு
அர்த்தம் : உண்டாக்குகிற கர்த்தர்,உருவாக்குகிற கர்த்தர்
இருப்பிடம் : சங்கீதம் : 45:6;

14.யேகோவா ஏலோகேனு
அர்த்தம் : நம்முடைய தேவனாகிய கர்த்தர்
இருப்பிடம் : சங்கீதம் : 8:9;99:5;

15.யேகோவா ஏலோகேக்கா
அர்த்தம் : உன் தேவனாகிய கர்த்தர்
இருப்பிடம் : யாத்திராகமம் : 20:2,7;5:9;

16.யேகோவா ஏலோகே
அர்த்தம் : உன் தேவனாகிய கர்த்தர்
இருப்பிடம் :சகரியா : 14:5;