Thursday, March 19, 2009

எது கோவில்? - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2


What is temple kovil
Saiva samayam and Bible - Saadhu Chellappaa
Watch on iPod/iPhone/PSP
சைவ சமயமும் வேதாகமும் எது கோவில்? - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி

Saturday, March 14, 2009

எது கோவில்?- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1


What is temple kovil
Saiva samayam and Bible - Saadhu Chellappaa
Watch on iPod/iPhone/PSP
சைவ சமயமும் வேதாகமும் எது கோவில்? - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி

Wednesday, March 11, 2009

இராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ


Mahaan - Robert Caldwell history movie tamil christian
Watch on iPod/iPhone/PSP
மகான் - இராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ

Sunday, March 08, 2009

எந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்


enthan jebavelai umai theadi vanthean tamil christian song

Download as MP3
http://www.tamilbiblestudy.com/thewayofsalvation/index.php?dir=Deva%20Prasanam/

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே [2]

எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன் -[2] -எந்தன்

சோராது ஜெபித்திட ஜெபஆவி வரம் தாருமே
தடை யாவும் அகற்றிடுமே
தயை வேண்டி உம்பாதம் வந்தேன்-[2] -எந்தன்

உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை
கேட்டிட காத்திருப்பேனே -[2] -எந்தன்

Saturday, March 07, 2009

இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்


முதலாம் ஆதாமிற்கு அயர்ந்த நித்திரையை வரச்செய்து அவன் விலா எலும்பிலிருந்து தேவன் அவனுக்கு ஒரு துணையை உண்டாக்கினார்.இப்படியாக ஏவாள் ஆதாமின் சரீரத்திலிருந்து உருவாக்கப்பட்டாள். வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவானவர் இரண்டாம் ஆதாமாக அறியப்படுகிறார்.இயேசு சிலுவையிலே அறையப்பட்டபோது அவர் மரணத்தை உறுதிசெய்ய ஒரு சேவகன் அவர் விலாவிலே ஈட்டியால் உருவ குத்த அவர் சரீரத்திலிருந்து இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.ஒரு கர்ப்பவதி குழந்தையை பிரசவிக்கும் போது அவள் சரீரத்திலிருந்து இரத்தமும் தண்ணீரும் புறப்படும்.இயேசு கிறிஸ்துவின் சரீரத்திலிருந்து இப்படியாக இரத்தமும் தண்ணீரும் வர அவர் மணவாட்டியாகிய சபை பிறந்தது. எருசலேம் தேவாலத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழாக இரண்டாக கிழிய அதுவரை நடைபெற்று வந்த "நியாயபிரமாணத்தின் காலம்" முடிவுக்கு வந்தது.

சபையின் காலம் அலலது கிருபையின் காலம் அடுத்ததாக தொடங்கியது. தேவனின் பார்வை இஸ்ரவேல் ஜனங்களிடத்திலிருந்து திரும்பி சபையின் பக்கம் வந்தது. பரிசுத்த ஆவியானவர் சபையிலே உலாவரத்தொடங்கினார்.தேவ சபையின் இறுதி மனிதன் இரட்சிக்கப்படும் வரை இந்த சபையின் காலம் தொடரும். என்றைக்கு கிறிஸ்துவின் சரீரத்தின் கடைசி மனிதன் இரட்சிக்கப்பட்டு மணவாட்டி சபை முழுமை பெறுகிறதோ அன்றைக்கே இயேசுவின் இரகசிய வருகை இருக்கும்.இயேசு கிறிஸ்துவானவர் மத்திய வானிலே வர சபையானது பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். அன்றே சபையின் காலம் அலலது கிருபையின் காலம் முடிவடைந்து மீண்டுமாய் நியாயபிரமாணத்தின் காலம் துவங்கும்.தேவனின் பார்வை மீண்டும் இஸ்ரவேல் ஜனங்களின் பக்கம் திரும்பும்.இதுவரை தடைசெய்துகொண்டிருந்த பரிசுத்த ஆவியானவரோடு சபையும் பூமியை விட்டு போய்விடுவதால் பூமியில் ஒரு வெற்றிடம் உண்டாக அது அந்திகிறிஸ்துவினால் நிரபப்படும்.ஆகையால் சபை பூமியிலிருக்கும் வரை அந்திகிறிஸ்து பூமியில் தலை காட்ட வாய்பேயில்லை.சபை எடுத்து கொள்ளப்பட்ட பின் நியாயபிரமாணத்தின் காலம் மீண்டும் தொடங்கியதால் இஸ்ரவேல் ஜனங்கள் எருசலேம் தேவாலயத்தை கட்டத்தொடங்குவார்கள். மோசேயினால் உரைக்கப்பட்ட படியான தூப ஆராதனையும் பலி இடுதலும் தேவாலயத்திலே ஆரம்பிக்கும்.முதல் மூன்றரை வருடங்கள் அந்திக்கிறிஸ்து யூத ஜனக்களுக்கு மிக ஆதரவாக இருப்பான்.அதேவேளை பாலஸ்தீன அராபிய ஜனங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றி ஒரு சமாதான உடன்படிக்கையை செய்திருப்பான்.இஸ்ரவேல் ஜனங்களும் பாலஸ்தீன அராபிய ஜனங்களும் சுகமாக சவுக்கியமாக இருப்பார்கள்.மூன்றரை வருட முடிவில் அந்திகிறிதுவின் சுயரூபம் வெளிப்படும். எருசலேம் தேவாலயத்தை அவன் தீட்டு படுத்துவான். யூதர்கள் அப்போது அவன் தாங்கள் எதிர்பார்த்த மேசியாவல்ல என அறிந்துகொள்ள உண்மையான மேசியாவை அவர்கள் சிலுவையில் அறைந்ததை உணர்ந்து கதறி அழுவார்கள்.இரண்டு சாட்சிகள் அப்போது பூமியில் வல்லமையாக ஊழியம் செய்வதால் இஸ்ரவேலின் ஜனங்களில் அப்போது அநேகமாயிரம் பேர் இரட்சிக்கப்படுவார்கள்.அப்போது அந்திகிறிஸ்துவுக்கு பயந்து யூதர்கள் மலைகளுக்கு ஓடிப்போவார்கள்.அடுத்த மூன்றரைவருடகாலம் மகா உபத்திரவகாலமாக அமையும். இதை வேதாகமம் "யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்" என்கிறது.

"ஐயோ! அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்."
(எரேமியா:30:7)

Thursday, March 05, 2009

வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.

Revelation Divine Outline.

வேதத்தின் இறுதி புத்தகமான வெளிப்படுத்தின விசேஷம் ஒன்றும் புரிந்துகொள்ளுவதற்கு கடினமான ஒரு புத்தகமல்ல.அதன் சீரான அமைப்பை மட்டும் நாம் அறிந்துகொண்டாலே இன்னும் ஆழமாக அதை நாம் படிக்கலாம்.

வெளிப்படுத்தின விசேஷத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்போஸ்தலனாகிய யோவானுக்கு ”கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும்” காட்டிக்கொடுக்கிறார்.(வெளி:1:19). அதாவது கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் காட்டிக்கொடுக்கிறார்

அவர் கண்டவை என்ன? அவை முதலாம் அதிகாரத்தில் வருகிறது.
சீஷனாகிய யோவான், மரித்து உயிரோடெழுந்த இயேசுவை அவர் மகிமையிலும் வல்லமையிலும் காண்கிறார்.இது கடந்தகாலம்.

இருக்கிறவை என்ன? அவை இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகாரத்தில் வருகிறது.போதகரான யோவான் தன் சபைகளுக்கு கடிதங்களை எழுதுகிறார். இது சபையின் காலம்.ஏறத்தாழ கிபி 33ல் தொடங்கி இன்றுவரைக்கும் அது நீடிக்கிறது. சபை இரகசிய வருகையிலே எடுத்துக்கொள்ளப்படும் வரை அது தொடரும்.இது நிகழ்காலம்.

இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கப்போகிறவை என்ன?
நான்காம் மற்றும் ஐந்தாம் அதிகாரத்தில் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்ட சபையை நாம் பரலோகத்திலே காணலாம். ஏழு வருட காலம் இது நீடிக்கும்.

அதே வேளை பூமியிலே முதல் மூன்றரை வருட உபத்திரவ காலமும் பின்பு இன்னும் மூன்றரை வருட மகா உபத்திரவகாலமும் நடைபெறும்.அதுவே அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்காலம்.இதை ஆறாம் அதிகாரம் முதல் பத்தொன்பதாம் அதிகாரம் வரை நாம் காணலாம்.

அந்த ஏழு வருட முடிவில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நடைபெறும். இஸ்ரேலுக்கு எதிராக வரும் அர்மகெதோன் யுத்தத்தில் கர்த்தர் வெற்றி சிறப்பார், சாத்தான் பாதாளத்திலே அடைக்கப்படுவான். இயேசுகிறிஸ்து பூமியிலே ஆயிரம் வருடம் அரசாட்சியை செய்வார். இதை இருபதாம் அதிகாரத்தில் காணலாம்.

ஆயிர வருட முடிவில் சாத்தான் பாதாளத்திலிருந்து வெளியே விடப்படுவான். அவன் உலக ஜாதிகளையெல்லாம் கூட்டிக்கொண்டு வர கோகு மாகோகு எனும் இறுதி யுத்தம் நடைபெறும். சாத்தான் எரிகிற நரகத்திலே தள்ளப்படுவான். இந்த பழைய வானமும் பூமியும் ஒழிந்துபோம்.

இருபத்தி ஒன்று மற்றும் இருபத்தி இரண்டாம் அதிகாரத்தில் புதிய வானம் புதிய பூமி உருவாக இனி அங்கே மரணமில்லை. கண்ணீர் இல்லை. என்றென்றும் கர்த்தரோடே கூட இருப்போம்.ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.

Tuesday, March 03, 2009

வில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ


”Candle in the dark”
Missionary William Carey history movie tamil christian
Watch on iPod/iPhone/PSP
மெழுகுவர்த்தி - வில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ

Monday, March 02, 2009

"இறைவாக்கினர் எரேமியா" Tamil Movie


Prophet Jeremiah tamil christian bible story
Watch on iPod/iPhone/PSP