Thursday, March 05, 2009

வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.

Revelation Divine Outline.

வேதத்தின் இறுதி புத்தகமான வெளிப்படுத்தின விசேஷம் ஒன்றும் புரிந்துகொள்ளுவதற்கு கடினமான ஒரு புத்தகமல்ல.அதன் சீரான அமைப்பை மட்டும் நாம் அறிந்துகொண்டாலே இன்னும் ஆழமாக அதை நாம் படிக்கலாம்.

வெளிப்படுத்தின விசேஷத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்போஸ்தலனாகிய யோவானுக்கு ”கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும்” காட்டிக்கொடுக்கிறார்.(வெளி:1:19). அதாவது கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் காட்டிக்கொடுக்கிறார்

அவர் கண்டவை என்ன? அவை முதலாம் அதிகாரத்தில் வருகிறது.
சீஷனாகிய யோவான், மரித்து உயிரோடெழுந்த இயேசுவை அவர் மகிமையிலும் வல்லமையிலும் காண்கிறார்.இது கடந்தகாலம்.

இருக்கிறவை என்ன? அவை இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகாரத்தில் வருகிறது.போதகரான யோவான் தன் சபைகளுக்கு கடிதங்களை எழுதுகிறார். இது சபையின் காலம்.ஏறத்தாழ கிபி 33ல் தொடங்கி இன்றுவரைக்கும் அது நீடிக்கிறது. சபை இரகசிய வருகையிலே எடுத்துக்கொள்ளப்படும் வரை அது தொடரும்.இது நிகழ்காலம்.

இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கப்போகிறவை என்ன?
நான்காம் மற்றும் ஐந்தாம் அதிகாரத்தில் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்ட சபையை நாம் பரலோகத்திலே காணலாம். ஏழு வருட காலம் இது நீடிக்கும்.

அதே வேளை பூமியிலே முதல் மூன்றரை வருட உபத்திரவ காலமும் பின்பு இன்னும் மூன்றரை வருட மகா உபத்திரவகாலமும் நடைபெறும்.அதுவே அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்காலம்.இதை ஆறாம் அதிகாரம் முதல் பத்தொன்பதாம் அதிகாரம் வரை நாம் காணலாம்.

அந்த ஏழு வருட முடிவில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நடைபெறும். இஸ்ரேலுக்கு எதிராக வரும் அர்மகெதோன் யுத்தத்தில் கர்த்தர் வெற்றி சிறப்பார், சாத்தான் பாதாளத்திலே அடைக்கப்படுவான். இயேசுகிறிஸ்து பூமியிலே ஆயிரம் வருடம் அரசாட்சியை செய்வார். இதை இருபதாம் அதிகாரத்தில் காணலாம்.

ஆயிர வருட முடிவில் சாத்தான் பாதாளத்திலிருந்து வெளியே விடப்படுவான். அவன் உலக ஜாதிகளையெல்லாம் கூட்டிக்கொண்டு வர கோகு மாகோகு எனும் இறுதி யுத்தம் நடைபெறும். சாத்தான் எரிகிற நரகத்திலே தள்ளப்படுவான். இந்த பழைய வானமும் பூமியும் ஒழிந்துபோம்.

இருபத்தி ஒன்று மற்றும் இருபத்தி இரண்டாம் அதிகாரத்தில் புதிய வானம் புதிய பூமி உருவாக இனி அங்கே மரணமில்லை. கண்ணீர் இல்லை. என்றென்றும் கர்த்தரோடே கூட இருப்போம்.ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.

2 comments:

  1. யெசு கிருஷ்துவே என் பாவத்தை மன்னியும்.

    ReplyDelete
  2. amen...He is coming very soon.

    ReplyDelete