Thursday, November 20, 2008

ஆமேன் கர்த்தாவே வாரும்

பிரசவ வேதனையில் துடிக்கும் ஒரு பெண்ணின் மனநிலையில் இருக்கிறது பூமி . எப்போது குழந்தை பிறக்கும் எப்போது நான் கையிலெடுத்து அதை கொஞ்சுவேன் என அவள் மனம் துடித்துக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு கிறிஸ்துவின் பிள்ளையின் மனநிலையும் அப்படியே. இவ்வுலக பாடுகளெல்லாம் வரப்போகும் மகிமைமுன் தூசியும் குப்பையுமே.

வெளிப்படுத்தல் 21-ம் அதிகாரம் நாம் ஒவ்வொருவரும் பெறப்போகும் ஒரு புதிய அனுபவத்தைப்பற்றி பேசுகிறது.
இதோ நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. மனுஷர்களிடத்திலே தேவன் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின;

என்ன ஒரு அனுபவம்! ஆமேன் கர்த்தாவே சீக்கிரமாய் வாரும்

1 comment:

  1. i think, it will done very very....shortly

    ReplyDelete