Sunday, October 29, 2006

பூவும் சூரியனும்

ஆங்கில கவிஞன் டென்னிசன் ஒரு நாள் தம் நண்பருடன் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார்.நண்பர் அவரைப்பார்த்து ,"கிறிஸ்துவைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்குக் கிறிஸ்து எப்படிப் பட்டவராக இருக்கிறார்?"என்று கேட்டார்.

டென்னிசன் சற்று அமைதியாக உலாவினார்,

பின்பு,"அதோபாருங்கள்,"என்று ஒரு மலரைச் சுட்டி காட்டினார்.

`அது ஒரு அழகான புஷ்பம்` என்றார் நண்பர்.

அப்பூவிற்குச் சூரியன் எப்படியோ அப்படியே கிறிஸ்துவும் எனக்கு என்றாராம்.

கிறிஸ்து உங்களுக்கு எப்படிப்பட்டவர்?

ஓசியா (Hosea):14:8
"நான் பச்சையான தேவதாரு விருட்சம்போலிருக்கிறேன்; என்னாலே உன் கனியுண்டாயிற்று"
"I am like a green fir tree. From me is thy fruit found."

யோவான் (John) :15:4
"என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்"
"Abide in me, and I in you."

பிலிப்பியர் (Philippians):1:21
21. கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.
"For to me to live is Christ, and to die is gain."


இதுவல்லவோ இரண்டறக்கலந்த வாழ்வு?

1 comment:

  1. என் தேவன் எனக்கு அடைக்கலமும் ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமனவர்.

    ReplyDelete