Friday, November 20, 2009

மல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்


மல்ப்ரியனே என்னேசு நாயகனே எப்போள் வரும் மலையாளம் வீடியோ பாடல்
Malpriyane enyesu naayaganee eppool varum malayalam christian song

Lyrics:

Malpriyane aennesu nayakane
Aeppol varum
Aen kanneer thudacheeduvan
Angaye asleshippan
Aennessuve vana meghe vegam
Vannedane (2)

Malpriyane aennesu …

Madyakase swargeeya dootharumay
Vanneedumbol (2)
Ennikkay murivettatham
Aa ponmugham mutthuvan
Vellathinay kezhunna
Vezambel pol
Vanchikunne (2)

Malpriyane aennesu …

Venma vasthram dharichuyarttha
Visuddha sangamathil
Chernnu nin savidhe vannu
Halleluya paaduvan
Budhiyulla nirmala
Kanyeke pol
Orungunne (2)

Malpriyane aennesu …


Soorya chandran thaarangale kadannu
Swarga nattil (2)
Aa palunku nadhee theerae
Jeeva vrikshathin thanalil
En swarga veettil aetthuvaan
Kothicheedunne
En manila (2)

Malpriyane aennesu …

Wednesday, November 18, 2009

கழுகுக்குச் சமானமாய்

கழுகுகளைப்போல நாமும் வாழப் பழக வேண்டும்.
பறவைகளிலேயே கழுகுகளின் கதை மிகச் சுவாரஸ்யமானது. மிக அதிக நாட்கள் உயிர்வாழும் பறவைகள் இனம் இவைகள் தாம். இவைகளால் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியுமாம். ஆனால் அந்த எழுபது வயதுவரை எட்ட அவை சில மிக கடினமான முடிவுகளை எடுக்கவேண்டி இருக்கும்.

கழுகுகள் தனது 40 வயதுகளை எட்டும் போது அவைகளால் எளிதில் தனது நீண்ட வளைந்து கொடுக்கும் நகங்களால் இரைகளை கொத்தி எடுத்துச்செல்லமுடியாது.
அவைகளின் நீண்ட கூர்மையான அலகுகளும் வளைந்து போய்விடும். வயதான அதன் கனமான இறகுகள் அதன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு அதை பறக்க இயலாமல் செய்துவிடும். இந்நிலையில் அவைகளுக்கு இரண்டே வழிகள் தான் மிஞ்சும். ஒன்று அப்படியே செத்துப்போவது அல்லது அந்த 150 நாட்கள் நீடிக்கும் மிகக்கடினமான அவர்கள் வாழ்க்கை நிகழ்ச்சியை கடந்து போவது. இதற்காக அவை மலை உச்சியில் தாங்கள் கட்டியிருக்கும் கூடுகளில் போய் தங்கி இருக்கும். தனது பழைய அலகை பாறைகளில் கொத்தி கொத்தி அதை பிடிங்கிப்போட்டு அவை தங்களுக்கு புது அலகுகள் வர காத்திருக்கும். அது போலவே அவைகளின் பழைய நகங்களும் பிடுங்கப்பட்டு புது நகங்கள் முளைக்கத் தொடங்கும். புது நகங்கள் வளரத்தொடங்கியவுடன் அவை தனது பழைய இறகுகளையும் பிடிங்கிப்போட்டுவிடும். ஐந்து மாதங்கள் கடந்ததும் அவை மீண்டும் புத்துயிர்பெற்று திரும்பவும் இன்னும் 30 ஆண்டுகள் உயிர்வாழ பூமிக்கு திரும்பி வரும்.

சிலசமயங்களில் மாற்றங்கள் நமக்கும் அவசியம்.பலசமயங்களில் நாம் உயிர்தப்பி வாழ நம்மில் பலமாற்றங்களை செய்யவேண்டியுள்ளது. பழைய நினைவுகள், பழைய பழக்கவழக்கங்கள், பழைய மூடநம்பிக்கைகளை என பலவற்றை விட்டொழிக்கவேண்டியுள்ளது. பழைய சுமைகளிலிருந்து விடுபடுதலே நமக்கு புதிய வாழ்க்கை அமைய எளிய வழியாகும்.

ஏசாயா 40:31 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

சங்கீதம் 103:5 நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது.

Wednesday, November 11, 2009

ஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி



இயேசு விடுவிக்கிறார் வழங்கும் விடுதலைப் பெருவிழா 19.04.2009 மார்த்தாண்டம் எல் சாய் EL CHAY ஜீவனுள்ள தேவன் தேவ செய்தி சகோ.மோகன் சி.லாசரஸ்
Yesu viduvikirar Viduthalai Peruvizha Bro.Mohan C Lazarus Message "The living God" at Marthandam

Saturday, October 31, 2009

செயற்கை ஒளி

தமிழ்முரசு 5/29/2008 மகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்...
Magara Vilakku is artificial made light. Sabarimalai priest says.




யோவான் 8:12 மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

யோவான் 9:5 நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்.

யோவான் 12:46 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.

Sunday, October 25, 2009

இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்

பாழாய்க்கிடந்த ஒரு தேசம் ஏதேன் தோட்டம் போலாகிக் கொண்டிருக்கும் கதை உங்களுக்குத் தெரியுமா? அத்தேசத்தின் செழிப்பின் ரகசியத்தை தெரிந்துகொள்ள தமிழக விவசாயிகள் குழு அத்தேசத்திற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். எசேக்கியேல் 36ம் அதிகாரத்தின் 35ம் வசனம் சொல்கிறது.”பாழாய்க்கிடந்த இத்தேசம், ஏதேன் தோட்டத்தைப் போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றும் சொல்லுவார்கள்.

இக்குழுவினரை சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பிவைத்த வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது:

இஸ்ரேல் நாட்டில் ஒரே ஒரு நீர்த்தேக்கம் மட்டுமே உள்ளது. அந்த நாட்டில் கடும் தண்ணீர் பஞ்சம் உள்ளது. ஆனால், அங்குள்ள விவசாயிகள் தோட்ட பயிற்சி மற்றும் விவசாய பயிர்களை பயிரிடுவதில் பெரும் சாதனை படைத்து, உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இதற்கு காரணம் அங்குள்ள விவசாயிகள் உயர் தொழில்நுட்ப நவீன கருவிகளை பயன்படுத்தி விவசாயம் செய்வதுதான்.

இருக்கும் தண்ணீரில் ஒரு சொட்டு நீரைக்கூட வீணடிக்காமல், பயிர்களுக்கு பயன்படுத்தி இப்புரட்சியை செய்துள்ளனர். தமிழகத்திலும் இதுபோன்ற விவசாய புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார். அதை நிறைவேற்றும் வகையில், உலக வங்கி உதவியுடன் தமிழக விவசாயிகள் ஒரு வார பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

செய்முறை பயிற்சி மட்டுமின்றி பல்வேறு விவசாய பண்ணைகளுக்கு சென்று, அங்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களையும் தெரிந்து கொள்வர். தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தேர்ந்தெடுக்கப் பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வறட்சி காலங்களில் விவசாயம் செய்வது தொடர்பான தொழில்நுட்ப பயிற்சி பெறுவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு வார பயணமாக இஸ்ரேலுக்கு நேற்றிரவு புறப்பட்டுச் சென்றனர்.

வறட்சி காலங்களில் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி லாபகரமாக விவசாயம் நடத்துவது தொடர்பான நவீன தொழில்நுட்பத்தை தமிழக விவசாயிகள் தெரிந்து கொள்ள உலக வங்கி ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, விவசாயிகள் நலவாரிய தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் 21 பேர் கொண்ட விவசாயிகள் குழு நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை வழியாக இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றனர்.

நீர் ஆதாரம் இல்லாத இஸ்ரேல் நாட்டில் நடந்து வரும் விவசாயப் புரட்சி குறித்து அறிந்துகொள்ள, உலக வங்கியின் ஏற்பாட்டில் தமிழக விவசாயிகள் 21 பேர், இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றனர்.

இஸ்ரேல் நாட்டில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைகளில் நடைமுறையில் உள்ள சொட்டுநீர் பாசனம், தெளிப்புநீர் பாசனம், சொட்டுநீர் மூலம் உரமிடல், பசுமைக் குடில்கள் அமைத்தல் போன்ற நவீன தொழில்நுட்பங்களை அறிந்துவர 8 நாள் பயணமாக 17.10.2009 அன்று தோட்டக் கலைத் துறை மூலம் தமிழக விவசாயிகள் இஸ்ரேல் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த விவசாயிகள் குழுவில் பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நல மேம்பாட்டு வாரியத் தலைவர் கே.பி. இராமலிங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நல மேம்பாட்டு வாரியத் துணைத் தலைவர் கே. செல்லமுத்து, தமிழ்நாடு இரயில்வே மண்டல உபயோகிப்பாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ப. கௌசிக பூபதி உள்ளிட்ட 21 விவசாயிகளை வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், இரவு 8.00 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தார்.

இவர்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 21 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

எசேக்கியேல் 36ம் அதிகாரத்தின் 30-ம் வசனம் இப்படியாக சொல்கிறது ”நீங்கள் இனிமேல் ஜாதிகளுக்குள்ளே பஞ்சத்தினாலுண்டாகும் நிந்தையை அடையாதபடிக்கு, விருட்சத்தின் கனிகளையும் வயலின் பலன்களையும் பெருகப்பண்ணுவேன்”
இதுதான் இரகசியம்.

மூலங்கள்
http://www.makkalmurasu.com/index.php?mod=article&cat=Chennai&article=13353
http://www.newindianews.com/view.php?2e3C0cA20aeY4DD32edSYOJd2ccdQoOKc4d4AOMogcb34RlYmad43fVm43a002c4C60e
http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18020