Showing posts with label Jesus. Show all posts
Showing posts with label Jesus. Show all posts

Saturday, September 25, 2021

முப்பாட்டன் பெயரும் கொள்ளுபாட்டன் பெயரும்.

சிலருக்கு பாட்டன் பெயர் தெரியும். சிலருக்கு முப்பாட்டன் பெயர் தெரியும். சிலருக்கு கொள்ளுபாட்டன் பெயர் கூட‌ தெரியும். ஆனால் எவருக்கும் இயேசுவின் வம்சவரலாறு போன்று ஆதி மனிதனிலிருந்து தான் வரையுள்ள‌ வம்சவரலாறு தெரியாது. உலகின் எந்த மாபெரும் மகானுக்கும் அப்படி தெரியாது. அதுதான் இயேசு கிறிஸ்துவின் விசேஷம்.



இயேசு யோவான் ஸ்நாபகனால் ஞானஸ்நானம் பெற்றதாக கருதப்படும் இடம்.

இயேசு யோவான் ஸ்நாபகனால் ஞானஸ்நானம் பெற்றதாக கருதப்படும் இடம் இது.ஜோர்தான் நாட்டிலுள்ள இந்த இடம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவு சின்னங்கள் பட்டியலில் வருகிறது.



கி.மு கி.பி His Story.

 கிறிஸ்துவின் வாழ்க்கை கதையே (His story) வரலாற்றை கி.மு கி.பி என இரண்டாக பிரிப்பதால் வரலாற்றை History என்றார்கள்.



Wednesday, January 27, 2021

நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். மத்தேயு 7:2

 நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.

மத்தேயு 7:2


Friday, March 30, 2018

"இயேசு கிறிஸ்து மனித குலத்தின் மிகப்பெரிய போதகர்களில் ஒருவர்" . மகாத்மா காந்தி.


Gandhi`s letter about Jesus Christ

சிலுவையில் இயேசு உரைத்த ஏழு வார்த்தைகள்


Saturday, November 15, 2014

தேவனாலே எல்லாம் கூடும்

மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும்.மத்:19:26

Sunday, November 10, 2013

பில்லி கிரஹாம் இறுதி பிரசங்கம் The Cross - Billy Graham's Message To America


எப்படி அழாம‌ல் இருக்க முடியும் அவரால்? அமெரிக்க தேசத்தின் எழுப்புதலையும் பிற்பாடு இப்போதைய பின்னடைவையும் கண்டவரன்றோ அவர். சமீபத்தில் தனது 95 ஆவது வயதை கட‌ந்து ஆனால் இன்னமும் நம்பிக்கையாக அமெரிக்காவுக்காக பரிதபித்து அழுது கொண்டிருக்கும் ஒரு ஜீவன் தான் பில்லி கிரஹாம். ந‌மது கண்முன்னே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சந்ததியின் மாபெரும் தேவ மனிதர். அவரின் பிறந்த நாளையொட்டி அவரது இருதய ஏக்கம் இங்கே அவரது "இறுதி பிரசங்கமாக" வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்து தேவாசீர்வாதம் பெறுங்கள். "இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக" என்ற சங்கீதம் 71:18 வசனப்படி தேவனும் அவரை கைவிடவில்லை. இறுதி அறிவிப்பும் அவர் கொடுத்தாகிவிட்டது. இனி அவர்கள் பாடு.
http://watchbillygraham.com/


Tuesday, November 05, 2013

இயேசு கிறிஸ்து விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்

"யுத்தங்களையும் போராட்டங்களையும் முடிவுக்கு கொண்டு வர இயேசு கிறிஸ்துவின் போதனைகள் உதவும்" துணை ஜனாதிபதி திரு.அன்சாரி பேச்சு.

இந்திய துணை ஜனாதிபதி திரு.ஹமீது அன்சாரி அவர்கள், பெங்களூரிலுள்ள எக்கியுமெனிக்கல் கிறிஸ்டியன் சென்டரில் ஒரு பொன் விழா கொண்டாட்டத்தில் பேசும் போது, “மனித வர்க்கத்தில் மடமைத்தனங்கள் தொடர்வதால், உலகின் பல பகுதிகளிலும் மனித வர்க்கம் வெறுப்புணர்வுகளுக்குள்ளும் மோதல்களுக்குள்ளும் உந்தி தள்ளப்படுகிற நிலையில், இயேசுவின் என்றென்றும் நிலைத்திருக்கும் செய்தியான அன்பு மற்றும் மனதுருக்கம், ஜனங்களுக்கு மீட்பின் வழியை காண்பிக்கிறது. நாம் அப்படியே எழுத்தின் பிரகாரமும் ஆவியின் பிரகாரமும் இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்ததை பின்பற்றுவோமானால், நம்மால் நிச்சயமாக யுத்தங்களையும் போராட்டங்களையும் இந்த‌ உலகத்தை விட்டு நீக்க முடியும். அதன் மூலம் கிடைக்கும் நீடிய‌ சமாதானம் வழியாக மனித சமுதாயத்திற்கு தேவையான முன்னேற்றத்தையும் செழிப்பையும் நாம் ஏற்படுத்த முடியும்" எனக் கூறினார்.   மேலும் அவர் கூறும் போது "சமுதாயத்தில் தாழ்ந்த வறுமை நிலையிலுள்ள‌  மக்களுக்கு கல்வி,ஆரோக்கியம், தொண்டு வழியாகவும் சமூக சீர்திருத்தங்கள் வாயிலாகவும் நம் இந்திய தேசத்திற்கு கிறிஸ்தவ சமுதாயம் ஆற்றிய சேவைகளை இந்திய மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். நானும் கூட, சிம்லாவிலுள்ள ஐரிஸ் சகோதரர்கள் நடத்திய பள்ளியிலும், கொல்கத்தாவைச் சேர்ந்த ஜெசுய்ட்ஸ் நடத்திய கல்லூரியினாலும் உருவாக்கப்பட்டவன் தான்” என்று திரு.அன்சாரி அவர்கள் கிறிஸ்துவைக் குறித்தும் கிறிஸ்தவத்தைக் குறித்தும் பேசினார்.

வேதாகமம் சொல்லுகிறது,இயேசு கிறிஸ்து உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் என்று.கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.இயேசு சொன்னார் "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை.உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக"(யோவா:8:36,IIகொரி:3:17, யோவா:14:27)

Saturday, July 20, 2013

தமிழில் பொறிக்கப்பட்டுள்ள பரமண்டல ஜெபம்



Church of the Pater Noster என்பது எருசலேம் நகரில் ஒலிவமலையின் மேல் அமைந்துள்ள ஓர் ஆலயம். இவ்விடத்தில் தான் இயேசு கிறிஸ்து தமது சீஷர்களுக்கு பரமண்டல ஜெபம் செய்ய கற்றுக்கொடுத்தார் என வேத ஆராய்சியாளர்கள் நம்புகிறார்கள் (மத்:6 9 13).இந்த ஆலயத்தின் சுவர்களில் உலகின் பல்வேறு மொழிகளில்  பரமண்டல ஜெபம் பொறிக்கப்பட்டுள்ளது.மேலே நீங்கள் படத்தில் காண்பது அங்கே நமது தாய்மொழியாம் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டுள்ள பரமண்டல ஜெபம்.
என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.சங் 5:2

Thursday, March 07, 2013

ஹியூகோ சாவேசும் கிறிஸ்துவும்


சில‌ர் இவ‌ரை புர‌ட்சியாள‌ன் என்ப‌ர்.வேறு சில‌ரோ இவ‌ரை ச‌ர்வாதிகாரி என்ப‌ர்.வெனிசுவேலாவின் அதிப‌ர் ஹியூகோ சாவேசின் ம‌ர‌ணம் அந்நாட்டினை மிகுந்த‌ துக்க‌த்தில் ஆழ்த்தியிருக்கிற‌து.ஒரு கால‌த்தில் ஈரானோடு கூட‌ கூட்டு சேர்ந்து கொண்டு அமெரிக்காவையே ஆட்டிப்ப‌டைத்த‌ இவ‌ர் இள‌மையில் ஒரு க‌த்தோலிக்க‌ பாதிரியாராக‌ மாறி சேவை செய்ய‌ விரும்பியிருக்கிறார் என்றால் உங்க‌ளால் ந‌ம்ப‌முடிகிற‌தா?.ம‌ர‌ம் அமைதியாக‌ இருக்க‌ விரும்பினாலும் காற்று விடுகிற‌தில்லையே.
த‌லாளித்துவ‌த்தை சாத்தானின் ச‌தி வேலை என‌ க‌டுமையாக‌ சாடிய‌ அவ‌ர், இயேசு கிறிஸ்துவின் பார்வையில் பொதுவுடைமையே ந‌ல்ல‌ ச‌முதாய‌த்தை உருவாக்க‌ முடியும் என‌ ந‌ம்பினார்."என்னை பொருத்த‌வ‌ரை முத‌ல் சோசிய‌லிஸ்ட் இயேசு கிறிஸ்துவே" என‌ உறுதியாக‌ கூறியிருந்த‌ அவ‌ர் ச‌மீப‌ கால‌மாக‌ புற்று நோயால் வாடியிருந்தார்."நான் இயேசுவோடு கொண்ட‌ உட‌ன்ப‌டிக்கையின் ப‌டி சீக்கிர‌மாக‌ குண்மாகிவிடுவேன்" என‌ ந‌ம்பிக்கையாக‌ கூறியிருந்தார். ஆனாலும் த‌ன‌து 58-ஆவ‌து வ‌ய‌தில் மார்ச் 5 ல் அவ‌ர் கால‌மானார்."நான் சாக‌ விரும்பவில்லை,என்னை சாக‌ விடாதிருங்க‌ள்" என்பதே அவர் பேசிய கடைசி வார்த்தைக‌ளாக‌ அமைந்த‌து.இஸ்ரேலை மிக‌வும் வெறுத்த‌ இவ‌ர், ஈரான் அதிப‌ர் ம‌ஹ்மூத் அக‌ம‌தின‌ஜாத்தின் மிக‌ நெருங்கிய‌ ந‌ண்ப‌ராக‌ இருந்தார். ம‌ஹ்மூத் அக‌ம‌தின‌ஜாத் த‌ன‌து இர‌ங்க‌ல் செய்தியில் "உயித்தெழுத‌ல் நாளில் இயேசு கிறிஸ்துவோடு கூட‌ ஹியூகோ சாவேசும் உயிரோடு எழுந்து பூமியில் ச‌மாதான‌த்தையும்,சாந்த‌த்தையும் நீதியையும் நிலைநாட்டுவார்க‌ள்" என‌ கூறியிருக்கிறார்.

எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள். இயேசு பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்.
(I கொரி:15:52,அப்:17:31)

Friday, September 21, 2012

காத்துக்கிடக்கும் கிழக்கு வாசல்

இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக நீங்கள் காத்திருக்கிறீர்களோ இல்லையோ, ஆனால் இந்த கிழக்கு வாசல் ரொம்பநாட்களாக காத்து கிடக்கிற கதை தெரியுமோ உங்களுக்கு. இந்த வாசல் வழியாகத் தான் யூதருக்கு ராஜாவாக அந்த முதல் குருத்தோலை திருநாளில் கடைசியாக எருசலேமுக்குள் இயேசுகிறிஸ்து நுழைந்தார். இப்போது மீண்டும் அவர் மட்டுமே இந்த வாசல் வழியாக ராஜாவாக நுழையவேண்டும் என்பதற்காக இந்த வாசல் இன்னும் பூட்டப்பட்டிருக்கிறது ஒரு அதிசயகரமான சம்பவம்.அதை பூட்டி வைத்தது ஒரு முகமதிய மன்னனான சுல்தான் சுலைமான் மன்னன்.

வேதம் சொல்லுகிறது”இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப் பட்டிருக்கவேண்டும்.” எசேக்கியேல்:44:2 அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பே எசேக்கியேல் தீர்க்கதரிசி இங்கே ஓசன்னா திருநாளை முன்னுரைத்தான்.

கிறிஸ்துவுக்கு பின் 1543-ல் எகிப்தையும் சிரியாவையும் ஆண்ட சுல்தான் சுலைமான் ஒரு காரணமும் இல்லாமல் இவ்வாசலைக் கற்களால் கட்டி அடைத்தான் என்கிறார்கள். இன்றும் இது மூடப்பட்டிருக்கிறது. “ஒரு கிறிஸ்தவ அரசன் இவ்வழியாய் நுழைந்து எருசலேமைப் பிடித்து அப்புறம் தன் எதிரிகளையெல்லாம் ஜெயித்துவிடுவான்” என்கின்ற பாரம்பரியப் பேச்சு ஒன்று முகமதியருக்குள் வெகுவாக பரவி இருந்தது. அந்நிகழ்வை தடைசெய்ய இவ்வாறு அவன் செய்து இருக்கலாம் என்கிறார்கள்.ஆனால் சுல்தான் சுலைமானோ அவனை அறியாமலே வேதவாக்கியத்தை நிறைவேற்றியிருக்கிறான்.

அப்புறம் எப்போது தான் இந்த வாசல் திறக்கப்படும்? மூன்றாவது வசனத்தை கவனியுங்கள். ”இது அதிபதிக்கே உரியது,  அதிபதி கர்த்தருடைய சந்நிதியில் போஜனம்பண்ணும்படி இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாய்ப்  பிரவேசித்து, மறுபடியும் அதின் வழியாய்ப் புறப்படுவான்.” எசேக்கியேல் 44:3.

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இந்த இரண்டாவது வாக்கியம் நிறைவேறும். ஆமேன். வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா.(சங்கீதம் 24:9,10)

Thursday, September 13, 2012

கிறிஸ்து பற்றி நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை (1888-1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”, ”தமிழன் என்றோர் இனமுன்று தனியே அதற்கோர் குணமுண்டு' 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' 'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' போன்ற இவரது மேற்கோள்கள் பிரபலமானவை.

இவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி பாடிய பாடல்

தூயஞான தேவன்தந்தை பரமன்விட்ட தூதனாய்த்
துன்பம்மிக்க உலகினுக்கே அன்புமார்க்க போதனாய்
மாயமாக வந்துதித்து மறிகள்சேரும் பட்டியில்
மானிடக் குழந்தையாக மேரிகண்ணில் பட்டவன்
ஆயனாக மனிதர்தம்மை அறிவுகாட்டி மேய்த்தவன்
அன்புஎன்ற அமிர்தநீரின் அருவிகாண வாய்த்தவன்
மாயமாக மாந்தர்வாழ நெறிகொடுத்த ஐயனாம்
நித்தமந்த ஏசுநாதன் பக்திசெய்தே உய்குவோம்.

நல்லஆயன்; மந்தைபோக நல்லபாதை காட்டினான்;
நரிசிறுத்தை புலிகளான கோபதாபம் ஓட்டினான்;
கல்லடர்ந்து முள்நிறைந்து கால்நடக்க நொந்திடும்
காடுமேடு யாவும்விட்டுக் கண்கவர்ச்சி தந்திடும்
புல்லடர்ந்து பசுமைமிக்க பூமிகாட்டி மேய்த்தவன்
புத்திசொல்லி மெத்தமெத்தப் பொறுமையோடு காத்தவன்
கொல்லவந்த வேங்கைசிங்கம்கூசநின்ற சாந்தனாம்
குணமலைக்குச் சிகரமான ஏசுதேவ வேந்தனே.

ஏசுநாதன் என்றபேரை எங்கிருந்தே எண்ணினும்
ஏழைமக்கள் தோழனாக அங்குநம்மை நண்ணுமே.
தேசுமிக்க த்யாகமேனி தெய்வதீப ஜோதியாய்த்
தீமையான இருளைநீக்கி வாய்மைஅன்பு நீதியாய்ப்
பாகமாகப் பரிவுகூறிப் பக்கம்வந்து நிற்குமே
பகைவருக்கும் அருள்சுரக்கும் பரமஞானம் ஒக்குமே.
ஈசனோடு வாழவைக்கும் ஏசுபோத இச்சையை
இடைவிடாத யாவருக்கும் எதிலும்வெற்றி நிச்சயம்!

யோவான் 10:11 நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

Reference:
Namakkal kavinjar V. Ramalingam Pillai about Jesus Christ
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0079.html

Tuesday, September 11, 2012

பாவமூட்டையுடன் செல்வேன் என்றார் பேரரசர் அவுரங்கசீப். அப்போ நீங்கள்?

பிரபல தாஜ்மகாலை கட்டிய ஷாஜகான் மன்னரின் வாரிசாக வந்தவர் பேரரசர் அவுரங்கசீப். ஆறாவது முகலாய மன்னராக அரியணைக்கு வந்த இவர் தனது அரசை மேலும் விரிவுபடுத்தி அக்கால பூமியின் மக்கள் தொகையில் நாலின் ஒருபங்கை அரசாண்டு வந்தார்.

ஆனால் பேரரசர் அவுரங்கசீப்பின் இறுதி காலங்களோ பெரும்பாலும் தனிமையிலேயே கழிந்தது. ”நான் என் பேரரசை பாதுகாக்க தவறிவிட்டேன். விலை மதிப்பற்ற என் வாழ்வை நான் வீணாக்கிவிட்டேன்” என சொல்லி தன் மூத்த மகன் அசாமிடம் அவர் புலம்பியிருக்கிறார்.
மரணம் அவரை நெருங்கும் வேளையில் அவுரங்கசீப் இவ்வாறாக தன் இளைய மகன் கம் பாக்ஷ்க்கு கடிதம் எழுதினார்:
"நான் இழைத்த ஒவ்வொரு கொடுமையின், நான் செய்த ஒவ்வொரு பாவத்தின், தவறின் பலனை நான் சுமந்து செல்கிறேன். என்ன விசித்திரம் நான் பிறந்த போது உலகில் சுதந்திரமாக பிறந்தேன். இறக்கும் போதோ பாவமூட்டையுடன் செல்வேன். நான் பார்க்கும் இடமெல்லாம் அல்லா மட்டுமே தெரிகிறார். நான் ஒரு மிக மோசமான பாவி. எனக்கு என்ன தண்டனை காத்திருக்கிறதோ தெரியவில்லை.” 
என எந்த ஒரு நம்பிக்கையும் இன்றி எழுதியிருந்தார். 1707-ல் கிட்டத்தட்ட அவரது தொண்ணூறு வயதில் அவுரங்கசீப் காலமானார்.

ஆனால் கிறிஸ்துவை பின்பற்றுகிற நமக்கோ ஒரு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கின்றது மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என சொல்லுகிறது வேதம். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்தேயு 11:28) என்று சொல்லி இயேசு பாவிகளை அழைக்கிறார். பாவங்களை இயேசு கிறிஸ்து மன்னிக்கிறார். நீங்கள் அவரிடம் வேண்டும் போது உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்ல அவருக்கு அதிகாரம் உண்டு. நாம் சுமக்க வேண்டிய தேவையில்லை.  எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள் (ரோமர் 4:7 ), என்ன அருமையான வேத வசனம் இது.

Reference:
http://www.srichinmoylibrary.com/books/1368/9/8/index.html

Monday, July 23, 2012

திருமண அழைப்பிதழ்



ஜெபதொனி ஜூலை 2012
JebaThoni July 2012

Thursday, July 19, 2012

இயேசு இந்தியா வந்தாரா? - குறும்பதில்கள்

கேள்வி: இயேசு தன்னுடைய கடைசி காலத்தில் இந்தியாவிற்கு வந்ததாகவும் சிலுவையில் அறையப்பட்டவர் அவர் அல்லவென்றும், இயேசுவின் கல்லறை காஷ்மீரி›ல் இருக்கிறதென்றும் சிலர் சொல்கிறார்களே? அதுபற்றி உங்கள் விளக்கம் என்ன?

பதில்: இப்படியொரு கருத்து பல காலமாக சொல்லப்பட்டு வருவது உண்மை தான். இயேசு இந்தியாவிற்கு வந்தார். காஷ்மீரி›ல் போய் சமாதியாகி விட்டார் என்று சொல்பவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதாரமாக கொள்வது பர்னபாவின் சுவிசேஷம் என்ற நூலைத்தான் (Gospel of Barnabas). இந்த பர்னபாவின் சுவிசேஷம் இயேசுவின் மரணம் பற்றி என்ன சொல்கிறது? ரோமவீரர்கள் இயேசுவைக்கைது செய்ய அனுப்பப்பட்டபோது கர்த்தர் குறுக்கிட்டு தேவ தூதர்களை அனுப்பி இயேசுவைத் தூக்கிக் கொண்டு வரச் சொல்லிவிடுகிறார். இயேசுவைக் கைது செய்ய வந்த வீரர்கள் இயேசுவை உருவத்தில் ஒத்திருந்த யூதாஸை இயேசு என்று கருதி கைது செய்து கொண்டு போய்விடுகிறார்கள். யூதாஸ், தான் அவனி›ல்லை என்று எத்தனையோ மன்றாடியும் பாவம் அவனை சிலுவையிலறைந்து விடுகிறார்கள். நீர் அழைத்தீர் என்பதினாலே தானே ஊழியத்திற்கே வந்தேன். கடைசியில் இப்படி ஏன் கைவிட்டீர்' என்று கதறியதாக சொல்லப்பட்டுள்ளது. (பாவம் யூதாஸ்).சரி. தேவதூதர்களால் தூக்கிச் செல்லப்பட்ட இயேசு என்னவானாராம்? அவரை அவர்கள் பரலோகத்திற்கு கொண்டு செல்லாமல் எருசலே•முக்கு வெளியிலிருந்த வனாந்திரம் ஒன்றில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்களாம். தனக்கு விதிக்கப்பட்ட சிலுவை தண்டனை யூதாஸிடத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டதை அறிந்து கொண்ட இயேசு இரகசியமாக அவருடைய தாயாரையும், சீடர்களையும் காண வந்தாராம். அதைத்தான் அவர்கள் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டதாக சொன்னார்களாம். தொடர்ந்து தான் எருசலேமில் தங்க •முடியாது என்ற மு•டிவுக்கு வந்த இயேசு அங்குமிங்கும் சுற்றித்தி›ரிந்து கடைசியில் காஷ்மீருக்கு வந்து சேர்ந்துவிட்டாராம். அங்கே அந்த நாட்களில் தீவிரவாதிகள் இல்லாததினால் அங்கேயே தொடர்ந்து தங்கிவிட்டு ஒரு கல்யாணத்தையும் பண்ணிக்கொண்டு குடும்பமாய் வாழ்ந்துவிட்டு கடைசியில் காஷ்மீ›ரிலேயே மரி›த்தும் போய்விட்டாராம் என்று அள்ள அளவில்லாமல் கற்பனைகளை அள்ளித்தெளித்திருக்கிறது அந்த பர்னபாவின் சுவிசேஷத்தில்.

இதையொட்டி எழுதப்பட்ட புத்தகங்களுள் பேபர் கெய்சர் (Faber Kaiser) என்பவர் 1977ல் வெளியிட்ட "Jesus Christ Died in Kashmir' என்ற புத்தகத்தில் ""இயேசு உண்மையில் ம›ரிக்கவில்லை. அவர் கோமா நிலையிலிருந்தார். அவர் ம›ரித்துவிட்டார் என்று தவறாக கருதி அவரை கல்லறையில் வைத்து விட்டார்கள். இரண்டுநாள் மயக்கநிலையிலிருந்து விட்டு பின்னர் விழிப்புத்தட்ட, இயேசு எழுந்து பார்த்துவிட்டு கல்லறையின் கல்லை தாமாகவே புரட்டி வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி காஷ்மீருக்கு வந்துவிட்டார். அவர் கல்லறை இன்னமு•ம் அங்கே இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். அப்படியா கல்லறையை காட்டுங்கள் என்று கேட்டால் மலைகளுக்கிடையில் இருக்கும் ஒரு நீண்ட கல்லறையை காட்டுகிறார். கொஞ்சம் நெருங்கிப் பார்க்கலாம் என்றால் தொந்தரவு பண்ணாதீர்கள் இயேசு தூங்கட்டும் என்கிறார். இவர்தவிர, பஞ்சாபில் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிர்சா குலாம் அகமது (Mirza Ghulam Ahmad) என்கிற இஸ்லாமிய அறிஞர் இயேசு இந்தியாவிற்கு வந்தார் என்று சொல்லுகிறார். விளக்கம் கேட்டால் மத்திய பஞ்சாபில் இயங்கிவந்த பழைய ஊழிய நிறுவனம் ஒன்றை காட்டுகிறார். விளக்கம் பு›ரியாமல் நீங்கள் அவரைப் பார்த்தீர்களேயானால் உடனே ஆமாம் தம்பி... இயேசு இந்தியா வந்திருந்தபோது அவர் தான் இதை ஆரம்பித்து நடத்திக்கொண்டிருந்தார் என்பார். சரி›, இவைகளுக்கான விளக்கம்தான் என்ன? பர்னபா ஏன் அப்படியொரு சுவிசேஷம் எழுதினார்? காஷ்மீரி›ல் இவர்கள் காட்டும் கல்லறை யாருடையது? என்ற கேள்விகளுக்கு கொஞ்சம் பதில் பார்ப்போம்.

மு•தலில் பர்னபாவின் சுவிசேஷம். இது நீங்கள் நினைக்கிற மாதி›ரி பவுலுடன் ஊழியம் செய்த பர்னபா எழுதியதல்ல. வேறுயாரோ ஒரு டுபாக்கூர் பர்னபா. இது எழுதப்பட்ட காலம் கி.பி. 1349ல். அதாவது இயேசுவின் மரணத்திற்கு பின்பாக ஏறத்தாழ 1200 ஆண்டுகளுக்கு பிறகு. அப்படியானால் இது வேதத்தில் காட்டப்படும் பர்னபாவினுடையது அல்ல. எனவே இது நம்பகமானது அல்ல. இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு மரணம் பற்றி அவருடனே இருந்தவர்கள் அல்லது அவர்காலத்தில் வாழ்ந்தவர்களின் சாட்சிகளைத்தான் நம்பகமானதாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இயேசுவைப் பற்றி அவருடனே வாழ்ந்த அல்லது அவர்காலத்திலேயே வாழ்ந்த மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் போன்றவர்கள் எழுதிவைத்த சுவிசேஷங்கள் தான் நம்பகமானவை. காரணம், இவையாவும் மு•தல் நூற்றாண்டிலேயே அதாவது இயேசுவின் நினைவுகள் எல்லார் மனதிலும் பசுமையாக இருக்கும்போதே எழுதப்பட்டவை. மாத்திரமல்ல, இவைகளில் காணப்படும் நிகழ்ச்சிகளுக்கும், இயேசுவின் சிலுவை மரணத்திற்கும் ரோம சாம்ராஜ்யத்தின் ஆவணங்கள் மற்றும் குறிப்பேடுகளில் அக்காலத்தில் ஆண்ட ஆளுநர்களின் கையெழுத்துடன் ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பர்னபாவின் சுவிசேஷம் எழுதின பர்னபா யார் என்பதற்கே ஆதாரங்கள் இல்லை. இரண்டாவது மிர்சா குலாம் அகமதுவின் கூற்று பற்றியது. இந்த மீர்சா குலாம் துவக்கத்தில் இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்து கடைசியில் தன்னை இறுதிக்கால நபி என்று பிரகடனம் செய்து கொண்டார். பைபிள் மாத்திரமல்ல. குர் ஆனைப்பற்றியும் நிறைய தாறுமாறான கருத்துக்களை சொல்லியுள்ளார். இவரை இதனால் ஒரு கூட்டம் ஜனங்கள் தவிர யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்பற்றியவர்கள் அகமதியர்கள் (Ahmadiyya) எனப்பட்டனர். எனவே, இவரது சாட்சியும் நம்பகமானதல்ல. கெய்ச›ன் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல இயேசு சரி›யாக மரி›க்கவில்லை. கோமாவில் கிடந்தார் என்பதெல்லாம் கடைந்தெடுத்த கற்பனை ரகங்கள். ரோம வீரர்கள் சிலுவை தண்டனை நிறைவேற்றுவதில் மாஸ்டர் பட்டம் பெற்றவர்கள். ஒரு நாளைக்கு இது மாதிரி› பலபேரை சிலுவையில் அறைந்து கொல்லும் புரபஷனல் கொலைகாரர்கள். அவர்கள் இயேசு மரி›த்ததை உறுதி செய்யத்தான் அவர் விலாவிலே குத்தினார்கள். சரி›யாக மரி›க்கவில்லையென்றால் உடனடியாக கண்டுபிடித்துவிடுவார்கள். அதுவும் தவிர இயேசு கல்லறையில் வைக்கப்பட்ட போது இயேசுவின் சரீŸரத்தை அவர் சீடர்கள் ஒளித்து வைத்துவிட்டு அவர் உயிர்த்தெழுந்தார் என்று சொல்லிடுவார்கள் என்று மனுச்செய்துதான் யூதர்கள் அவர்கள் கல்லறையை காவல் செய்ய உத்தரவு பெற்றனர். அதன்படி ரோம அரசாங்கம் அவர் கல்லறையை காவல் செய்ய வீரர்களை நியமித்திருந்தது. இயேசு கோமா தெளிந்து எழுந்து தன்னிஷ்டப்படியெல்லாம் இந்த வீரர்களை தாண்டி வெளியே போய்விட மு•டியாது. அதுவும் தவிர, கோமாவில் கிடந்த ஒரு மனிதர் எழுந்தவுடன் அவர் நடக்க •முடியாது. அப்படியே நடக்கவேண்டுமானாலும் நாலைந்து பே›ரின் உதவியுடன் தான் செய்ய மு•டியும். இங்கே கெய்சர் புத்தகத்தில் சிலுவையிலறையப்பட்டு கோமாவில் கிடந்த இயேசு எழுந்து பார்த்து கல்லைத் தாமே புரட்டிப்போட்டு விட்டு (கல்லறைக்கல் என்பது பெ›ரிய பாறை) ஹாயாக நடந்து போயிருப்பது தமிழ் சினிமாக்களில் கூட பார்க்க• முடியாத கற்பனை ரகம். ச›ரி. இவர் காட்டும் காஷ்மீர் கல்லறை பின்னே யாருடையது? •முதலாம் நூற்றாண்டில் கிரேக்க, ரோமானிய உலகில் பெரும்புகழ் பெற்றிருந்தவர் அபோலநிபஸ் என்பவர். இவர் நம்‰மூர் சித்தர்கள் மாதிரி› பல அமானுஷ்ய செயல்களை நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்ததாக சொல்லப்படுகிறது. பின்வந்த, நூற்றாண்டுகளில் ஏகப்பட்ட கால இடைவெளியில் மக்கள் இயேசுவையும் அகோ லிநிபஸையும் ஒன்று என்று ஜனங்கள் கருதியிருக்கலாம். எனவே காஷ்மீரி›ல் கெய்சர் காட்டுவது இயேசுவின் கல்லறையல்ல. மாத்திரமல்ல. இயேசுவுக்கு எங்குமே கல்லறை இல்லை. அவர் மரி›த்தபோது அவரை வைத்திருந்த இடம் தான் இருக்கிறது. கல்லறை என்றால் அதனுள்ளே ம›ரித்தவர் இருக்கவேண்டும். இயேசு உயிர்த்ததினால் அவர் அங்கே இல்லை. பின்னர் இதுமாதிரி› கதைகள் ஏன் கிளப்பிவிடப்படுகின்றன? இயேசுவின் மரணத்தை ஒத்துக் கொள்ள •முடியாத சிலர் அவர் மீது வைத்திருந்த அழுத்தமான நம்பிக்கை காரணமாகத்தான் இறைவன் மனிதனாக அவதரி›த்து இவ்வளவு மோசமான மரணத்தை அடைந்திருக்க மு•டியாது என்று கருதி இதுபோல கற்பனை செய்துகொண்டு புத்தக•ம் எழுதிவிடுகிறார்கள்.(இயேசுவின் தொனி மார்ச் 08)

 அப்போஸ்தலனாகிய யோவானை தவிர , மற்ற 12 அப்போஸ்தலர்களும், பவுல், மற்றும் யூதாசுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியாஸ் உட்பட அனைவருமே இரத்த சாட்சிகளாக கொலை செய்யப்பட்டு கிறிஸ்துவுக்காக மரித்தார்கள். ஒரு பொய்க்காக ஏன் இவர்கள் அனைவரும் தங்கள் உயிரை அப்படி மாய்த்திருக்க வேண்டும்? சிந்தித்துப் பாருங்கள். உண்மையில், எந்த புத்தகமும் இந்த அளவு ஆழமாய் ஆராயப்பட்டதில்லை. இந்த 2000 ஆண்டுகளில் பைபிளில் குறைகண்டு அதை எப்படியாவது அழிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஏராளம்.ஆனால் வேதாகமமோ இன்னமும் இருக்கின்றது. அநேகருடைய வாழ்க்கையை இன்னும் மாற்றிய படி இருக்கின்றது. இயேசு கிறிஸ்துவை பற்றிய நற்செய்தியை உலகுக்கு பறைசாற்றியபடி உள்ளது. 

ஏசாயா:40:8. புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்

Tuesday, July 10, 2012

உயிர்த்தெழுதல் நடந்ததா?


 இங்கிலாந்து தேசத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஆல்பர்ட் ஹென்றி ராஸ் (Albert Henry Ross,1881-1950). இவர் பிராங்க் மாரிசன் (Frank Morison) என்கின்ற புனைபெயரில் ஆங்கிலத்தில் எழுதிய பல புத்தகங்கள் மிகவும் புகழ்பெற்றவை. கிறிஸ்தவ மதம் என்றாலே எட்டிக்காய் போல வெறுப்பவர். இவர் இயேசுவின் உயிர்தெழுதலே சம்பவிக்கவில்லையென்று ஒரு நூல் எழுதினால் பல கிறிஸ்தவர்களை கிறிஸ்துவை விட்டு பிரித்து விடலாம் என்று திட்டமிட்டார். இதற்கான புத்தகத்தை எழுதுவதற்காக வேதாகமத்தை இரவும் பகலுமாக வாசிக்க ஆரம்பித்தார். புத்தகத்தின் சில பக்கங்களை எழுதவும் துவங்கி விட்டார். இவர் கிறிஸ்துவுக்கு விரோதமாக புத்தகம் எழுதுவதை கேள்விப்பட்ட சில உண்மையான கிறிஸ்தவர்கள் இவருக்காக ஜெபித்தார்கள். இந்நிலையில் வேதம் இவர் மனதில் கிரியை செய்யத் துவங்கியது. முதல் அத்தியாயம் எழுத ஆரம்பித்த சில நாட்களிலேயே கிறிஸ்துவின் விசுவாசியாக மாறினார். கடைசியில் இயேசு மெய்யாகவே உயிர்த்தெழுந்தார் என்று பலமான சாட்சிகளுடன் தன் புத்தகத்தை எழுதி முடித்தார். அவர் எழுதிய நூலின் பெயர் Who moved the stone? 1930ம் ஆண்டில் முதலில் வெளியான இப்புத்தகம் பிற்பாடு 1944, 1955, 1958, 1962, 1977, 1981, 1983, 1987, 1996 மற்றும் 2006 ஆண்டுகளில் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படி இந்த புத்தகம் இலட்சக்கணக்காக விற்பனையாயின. ஆங்கிலத்தில் இயேசுவைப் பற்றிச் சொல்லும் புத்தகங்களில் மிகவும் புகழ்பெற்றது இந்தப் புத்தகம்.


சங்கீதம் 145:18 தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.

Thursday, April 26, 2012

எல்லாரையும் மதம் மாற்றுவது எங்கள் திட்டம் அல்ல

இந்த கட்டுரைகளை படிக்கும் போது உங்கள் எண்ணத்தில் உங்களையோ அல்லது இந்த உலகத்தையோ கிறிஸ்தவமயமாக்கும் எண்ணத்தில் நாங்கள் இருப்பது போல உங்களுக்கு தோன்றினால் அதனால் கவலைப்படாதிருங்கள். ஏனென்றால் எல்லோரையும் கிறிஸ்தவர்களாக்கி பார்ப்பது எங்கள் குறிக்கோள் அல்ல. புனித வேதாகமத்தின் ஒரு புத்தகமான மத்தேயு அத்தியாயம் 7, வசனம் 13-ல் இயேசு கிறிஸ்து இவ்வாறாக கூறினார் “இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” கடவுளால் மட்டுமே நரகத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும். ஜனங்களை இரட்சிப்பது இறைவனின் செயல், மேலும் எல்லோரும் இரட்சிக்கப்படுவது என்பது கூடாத காரியம் என மேலே நாம் சொன்ன வசனத்திலிருந்து தெரிகிறது. எங்கள் இலக்கு அனைத்து ஜாதி மத இனங்களுக்கும் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை அறிவிப்பதும் அதன் மூலம் அனைத்து ஜாதி மத இனங்களிலும் இருந்து ஒரு சில பேரையாவது இயேசுவுக்கு சீடர்களாக உருவாக்குவதும் ஆகும். எனினும் தேவன் தான் முன்குறித்து தெரிந்தெடுத்தவர்களை மட்டுமே இரட்சிக்கிறார். அவர்களை கிறிஸ்துவின் அடியானாக மாற்றுகிறார்.

இன்று, பூமியில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிறிஸ்தவ தேவாலயங்கள் இல்லை. கிறிஸ்தவர்கள் மிகக் குறைவாக இருக்கும் இடங்களில் கூட பெரும்பாலும் ஒரு பழங்கால திருச்சபை ஒன்று இன்னும் சில அங்கத்தினர்களோடு இருப்பதை காணலாம். சில இடங்களில் மக்களின் பூர்வீகத்தை விட திருச்சபையின் சரித்திரம் மிகப்பழமையானதாக இருப்பதை உணரலாம்.  பெரும்பாலான நாடுகளில் அந்நாட்டு தற்போதைய அரசாங்கத்தை விட கிறிஸ்தவ அமைப்புகள் மிகப் பழமையானவையாக இருக்கும்.

பைபிளை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் எல்லோரும் ஆளும் அரசாங்கத்துக்கும் சட்ட திட்டங்களுக்கும் கீழ்படிந்து நடக்கவும் சமூகத்தில் பல நற்பணிகளை செய்யவும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். முன்பு பொட்டல் காடாய் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்த இடங்களில் எத்தனை பள்ளிகளும், கல்லூரிகளும் மருத்துவமனைகளும் அந்த காலத்திலேயே கிறிஸ்தவ மிஷனரிமார்கள் நிறுவியிருக்கிறார்கள் என பாருங்கள்.எந்த உள்ளூர் கிறிஸ்தவனையும் கேட்டுப்பாருங்கள், யாருமே எல்லோரையும் கிறிஸ்தவராக மாற்றுவதே தங்கள் இலட்சியம் என கூறமாட்டார்கள். மாறாக, கிறிஸ்தவர் தாங்கள் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையை பிறரும் தெரிந்து கொள்ளவேண்டும் என மட்டுமே விரும்புவார்கள். அதனால் மற்றவர்கள் தங்கள் விருப்ப வெறுப்புகளை தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு மிதவாத முயற்சி மட்டுமே. பிற மார்க்கங்களை பற்றி மேலும் அறிய, அதனை தொடர்ந்து தங்களின் தனிப்பட்ட நம்பிக்கையை தெரிவு செய்து கொள்ள இது ஒரு மத சுதந்திரத்தை கொடுக்கிறது.

II பேதுரு 3:9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

Wednesday, January 25, 2012

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை ஓர் இணையற்ற வரலாறு

குறிப்பு:வரலாற்று உண்மைகளைச் சரிவர ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத சில நண்பர்கள், இயேசு கிறிஸ்து என்று ஒருவர் பிறந்தது கூட இல்லையென இந்நாட்களில் பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் எழுதி, உலகத்தை ஏமாற்றப் பார்க்கின்றனர்.
“இயேசு கிறிஸ்து பிறந்ததாகக் கூறப்படும் காலத்திலும், வரலாற்று ஆசிரியர்கள் (Historians) வாழ்ந்திருந்தார்களே, அவர்களில் யாராவது இயேசு கிறிஸ்துவைப் பற்றி யாதேனும் எழுதியதுண்டா?” என்பதே அவர்கள் கேட்கும் குதர்க்கமான கேள்வி. இக்கேள்விக்குப் பதிலளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்)

ரோமப் பேரரசரான ஜூலியஸ் சீஸர், கால் (Gaul) நாட்டின் மீது படையெடுத்த வரலாற்றினை விளக்கும் மூலப்பிரதிகள் பத்திற்கும் குறைவானவை. அவற்றுள் மிகப் பழமையான பிரதி, சீஸர் இறந்து 900 ஆண்டுகளுக்குப் பின்னரே எழுதப்பட்டது. ஆயினும் இவை வரலாற்றிற்கு அடிப்படையான ஆதாரங்களாகவே கருதப்படுகின்றன.

இந்திய வரலாற்றில் இடம்பெற்றுள்ள எத்தனையோ முக்கிய நிகழ்ச்சிகளுக்குக் கூட அடிப்படையான ஆதாரங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. அத்துடன் சில மன்னர்கள் வாழ்ந்த காலம், அவர்களது வரிசை ஆகியவற்றை நிர்ணயிப்பதிலும் பல சிக்கல்களும் சிரமங்களும் ஏற்படுகின்றன.

அரும்பெரும் ஆதாரங்கள் :
இயேசு கிறிஸ்துவின் வரலாறு நூற்றுக்கு நூறு உண்மையானது என்பதற்கு எழுந்த ஆதாரங்கள் எண்ணில் அடங்கா.

இயேசு கிறிஸ்துவின் அற்புத வாழ்க்கையைச் சுமந்து நிற்கும் புதிய ஏற்பாட்டின் முதல் பக்கமே அவரது வம்ச வரலாற்றை வரிசை தவறாமல் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

இயேசு கிறிஸ்து தாமே உலக வரலாற்றைக் கிறிஸ்துவுக்கு முன் என்றும், கிறிஸ்துவுக்குப் பின் என்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்து, ஒருபோதும் அணையாத ஒளிவிளக்காய்த் திகழ்கின்றார்.

நாம் இன்று நமது இல்லங்களிலும், அலுவலகங்களிலும் பயன்படுத்தும் நாட்காட்டியும் (Calander) அவரது பிறப்பிற்கோர் ஆதாரமாகவே அமைந்துள்ளது.

அருள்நாதர் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை, அவர் வாழ்ந்த அதே நூற்றாண்டைச் சார்ந்தவர்களும், அவரோடு நெருங்கிப் பழகியவர்களுமான அவருடைய சீடர்களும், சுவிசேஷகர்களுமே எழுதி உலகிற்கு அளித்துள்ளனர். அவரைப் பற்றி விளக்கமாய்க் கூறும் புதிய ஏற்பாட்டிற்கு (New Testament) முக்கிய அடிப்படையாய் நமது கரங்களிலிருக்கும் மூலப்பிரதிகள் 5000-க்கும் அதிகமானவை. இவை மூல மொழியான கிரேக்க மொழியில் எழுதப்பட்டவை. நமக்குக் கிடைக்கப்பட்ட இப்பிரதிகள் கி.பி.2-ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இருந்து எழுதப்பட்டவை.

மேற்கூறிய மூலப்பிரதிகளைத் தவிர ஆயிரக்கணக்கான பழமை மிக்க பல மொழித் திருப்புதல் பிரதிகளும் (Ancient versions) கி.பி.1-ஆம் நூற்றாண்டிலும் அதற்குச் சற்று பின்னரும் வாழ்ந்த இக்னாசியஸ், பபியாஸ், பர்னபாஸ், டாட்டியன், ஜஸ்டின் மார்ட்டியர், இரானியஸ், யூசிபியஸ், ஆரிஜன் போன்ற பல திருச்சபைப் பிதாக்கள் இயேசுவைப் பற்றியும் திருச்சபையைப் பற்றியும் எழுதிய ஆதாரக் குறிப்புகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இஸ்ரேல் நாட்டில் ஒவ்வொரு நாளிலும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பார்த்துப் பரவசமடையும் இயேசு நாதரின் திறக்கப்பட்ட கல்லறையும், அவரது சரித்திரம் உண்மையானதென்பதற்கொரு சாட்சியாய் இருக்கிறது.

மேலும் ஆரம்ப நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்த புற மதத்தைச் சார்ந்த வரலாற்று ஆசிரியர்களும், கிறிஸ்து மார்க்கத்திற்கு எதிராக எழுந்த தேசத் தலைவர்களும் கூட இயேசு நாதரின் வாழ்க்கைச் சரித்திரம் மெய்யென்பதற்குரிய ஆதாரங்கள் பலவற்றைத் தந்துள்ளனர், அவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.

1.பிளினி (Pliny):
இவர் பிதினியா நாட்டின் (சின்ன ஆசியா) அதிபர். இவர் கி.பி.110-ல் டிராஜன் (Trajan) மன்னனுக்கு எழுதிய கடிதத்தில், கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கும் பொருட்டுத் தாம் கையாடிய கொடுஞ்செயல்களை விளக்கி எழுதியுள்ளார். (Colin Chapman எழுதிய Christianity on Trial, பக்கம் 422,423)

2.டாசிட்டஸ் (Tacitus):
இவர் ரோம வரலாற்று ஆசிரியர். இவர் கி.பி.115-ஆம் ஆண்டில் தாம் எழுதிய வரலாற்று நூலில் (Annals), நீரோ மன்னன் கிறிஸ்தவர்களை கொன்று குவித்ததைக் குறித்து தெளிவாக எழுதியுள்ளார். மேலும், கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களே கிறிஸ்தவர்களென்றும், டைபீரியஸ் மன்னனின் ஆட்சியில், பொந்திப் பிலாத்து என்னும் ஆளுநரால் கிறிஸ்து கொலை செய்யப்பட்டார் என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார். Christus, from whom their (Charistians`) name is derived was executed at the hands of the Procurator Pontius Pilate in the reign of Tiberius" (Christianity on Trial பக்கம் 423,424)

3.சூட்டோனியஸ் (Suetonius):
இவர் ஒரு ரோம சரித்திர ஆசிரியர். கி.பி.120-ஆம் ஆண்டில் தாம் எழுதிய “கிளாடியஸ் மன்னனின் வாழ்க்கை வரலாறு” என்னும் நூலில், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய கிறிஸ்தவர்கள் கிளாடியஸ் மன்னரால் ஏன் ரோமாபுரியிலிருந்து நாடுகடத்தப்பட்டனர் என்பதற்குரிய விளக்கம் அளித்துள்ளார். (Christianity on Trial, பக்கம் 424)

4.ஜோசபஸ் (Josephus):
இவர் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த யூத வரலாற்று ஆசிரியர். இவர் கி.பி.93 ஆம் ஆண்டில், “யூதரின் தொன்மை” (The Antiquities of the Jews) என்னும் நூலில், இயேசு நாதர் ஞானமிக்கவர் என்றும் அற்புதங்கள் பல புரிந்தார் என்றும், மக்களுக்குப் பல போதனைகள் அளித்தார் என்றும், பல புறமதத்தவரையும், யூதரையும் தம்பால் இழுத்துக்கொண்டார் என்றும், அவரைப் பிலாத்து சிலுவை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தார் என்றும், அதன்பின் அவர் மூன்றாம் நாளில் தம்மிடம் அன்பு செலுத்தியவருக்கு உயிருடன் காட்சியளித்தார் என்றும் எழுதியுள்ளார். (Christianity on Trial,பக்கம் 424,425)




யாரிந்த லூவோலேஸ்? (Lew Wallace)
இவர் இங்கர்சால் என்னும் நாத்திகரின் உற்ற நண்பர். ஆளுநராய் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் இயேசு கிறிஸ்துஎன்று ஒருவர் வாழ்ந்ததே இல்லை என்று எழுதத் துணிந்தார். அதற்கு போதுமான ஆதாரங்கள் திரட்ட தமது செல்வத்தில் பெரும்பகுதியைச் செலவளித்தார். புத்தகத்தை எழுதத் தொடங்கினார். ஆனால் ஒரு சில வரிகளுக்கு மேல் அவரால் எழுதவே
முடியவில்லை.ஏனெனில் அவருக்கு கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே இயேசு கிறிஸ்து பிறந்தது,வாழ்ந்த்து அற்புதங்கள் புரிந்தது, சிலுவையில் மாண்டது, மூன்றாம் நாள் உயிரோடெழுந்தது ஆகிய அனைத்தும் உண்மையென்றே உரைத்தன. இவர் மனந்திரும்பி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனை மீட்க மனிதனாய்ப் பிறந்து, பாவமற்றப் புனிதராய் வாழ்ந்தார் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்ட “பென்ஹர்” (Ben Hur) என்னும் சிறந்த நூலை இயற்றினார்.

யாரிந்த கில்பர்ட்? (Gilbert)
இவர் மேல்நாட்டைச் சார்ந்த ஒரு வேதவிரோதி. லார்ட் லிட்டில் டன் (1709-1773) (Lord Little Ton) என்பவரோடு சேர்ந்து இவர் இயேசு கிறிஸ்து உயிரோடெழுந்தது ஒரு கட்டுக்கதை என்றார். தம்மால் அதை நிரூபித்துகாட்ட முடியும் என்று நீதி மன்றத்தில் சவால் விடுத்தார். எனவே நீதிமன்றம் அதற்கென நாளொன்றை தீர்மானித்தது. குறிப்பிட்ட அந்த நாள் வந்தபோது இவ்விருவரும் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்டனர். அங்கே அவர்கள், தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்கள் அனைத்தையும் ஆராய்ந்ததின் விளைவாகத் தாங்கள் இயேசு கிறிஸ்து உயிரோடெழும்பியது உண்மை என்று கண்டுகொண்டதாக அறிக்கையிட்டனர்.

தீர்க்கதரிசிகள்:
இவர்கள் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கும் பல நூற்றாண்டுகளுக்க் முன்னரே, அவர் யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் சிற்றூரில் ஒரு கன்னியின் வயிற்றில் பரிசுத்த ஆவியினால் உற்பவித்துத் தோன்றுவார் என்று மொழிந்தனர்.மேலும் அவரது தூயவாழ்க்கை, பாடு, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றைக் குறித்தும் தீர்க்கதரிசிகள் முன்னுரைத்தவற்றை வேதத்தில் காணலாம். அவையாவும் ஆண்டவரது அற்புத வாழ்க்கையில் அப்படியே நிறைவேறின.

எனக்கு மிகவும் பிரியமானவர்களே,
இந்த இயேசு கிறிஸ்துவைப் போல் வேறொருவரை நாம் இந்த உலகில் காணமுடியுமா? இவரே உயிர்த்தெழுந்த உண்மையான தெய்வம்.