Showing posts with label Geography. Show all posts
Showing posts with label Geography. Show all posts

Thursday, June 10, 2021

மோசே பாலம்.நெதர்லாந்து.

 மோசே பாலம்.நெதர்லாந்து.



Thursday, January 07, 2021

இன்றைக்கும் இருக்கும் பைபிளில் குறிப்பிட்டுள்ள‌ தெரு.

பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு தெரு சிரியா தேச‌த்தில் டமாஸ்கஸ் நகரில் உள்ள நேர்தெரு. பைபிளில் அப்போஸ்தலர் 9:11 ல் "அப்பொழுது கர்த்தர்: நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தெருவானது இன்றைக்கும் டமாஸ்கசில் அப்படியே உள்ளது பைபிள் எத்தனை உண்மை என்பதற்கு சான்றாக உள்ளது.



Monday, January 04, 2021

இன்றைக்கும் கருகியிருக்கும் சீனாய் மலை.

அரபிதேசத்திலுள்ளது சீனாய்மலை (கலாத்தியர் 4:25). மோசே காலத்தில் கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது,அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று (யாத்திராகமம் 19:18) என்று பைபிள் குறிப்பிடுகின்றது. அது போலவே இன்றைக்கும் சவுதி அரேபியாவிலுள்ள ஜெபெல் எல் லாஸ் (Jebel El Lawz) எனும் மலையின் உச்சி கருத்து கருகிப்போய் இருப்பதை காணலாம். தற்போது இந்த இடம் சவுதிஅரேபியா அரசாங்கத்தால் வேலி அடைத்து பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.


Friday, April 27, 2018

மழை உருவாகும் விஞ்ஞானம் வேதாகமத்தில்


கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே உள்ள முடிவிலி தூரம்


Thursday, April 19, 2018

பூமியின் உள்ளமைப்பு குறித்து வேதாகமம்


ரிபன் டவுன்ஹால் சொல்லும் பைபிள் வசனம்


Wednesday, April 18, 2018

இன்றைக்கும் நிற்கும் அப்சலோம் தூண்


Thursday, April 12, 2018

பைபிள் இடம்பெற்றுள்ள ஒரே தேசியக்கொடி

Bible in a national flag

Wednesday, November 19, 2014

பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்

உங்களுக்கு ஒன்று தெரியுமோ?

நிலவில் ஒரு பகல் பொழுது 
327 மணிநேரங்கள் நீட்டிக்குமாம்.
அடுத்து தூங்கப்போனாலும் 
327 மணிநேரங்கள் தொடர்ச்சியாக‌ தூங்க வேண்டுமாம்.
என்னவாவது.

ஆனால்
புவியில் இறைவன் அருமையாக தந்திருக்கின்றான்.
8 மணி நேரம் தூங்க
8 மணிநேரம் உழைக்க
8 மணிநேரம் களிக்க என
24 மணிநேரங்கள்.
இதிலிருந்தே தெரியவில்லையா அன்பர்களே
இறைவனின் கைவண்ணமும் அவன் மாட்சியும்.

மனிதன் அனுபவிக்கவும் வேண்டும், அதேவேளை
அவன் ஓய்வு எடுக்கவும் வேண்டும் என
அக்கரை அக்கரையாக
பார்த்து பார்த்து படைக்கப்பட்டது தான் இப்பூமி.
அது மனிதனுக்காகவே படைக்கப்பட்டது.

அதனாலேயே வேதம் சொல்லுகிறது
வானங்கள் கர்த்தருடையவைகள்;
பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார் என்று.
சங்கீதம்:115:16

நன்றி தகப்பனே!
நீர் தந்த இந்த அழகிய பூமிக்காக‌!!

Saturday, November 15, 2014

தேவனாலே எல்லாம் கூடும்

மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும்.மத்:19:26

Monday, August 25, 2014

இந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் நிலநடுக்கங்கள் எத்தனை எத்தனை?

இயேசுவிடம் ஒரு கேள்வி: உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?
இயேசுவின் பதில்: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும், பஞ்சங்களும் கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்.
இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார் இயேசு.
இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு நீங்கள் தயாரா நண்பரே? (லூக்கா 21:28)

                                                      இந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் நிலநடுக்கங்கள்

Tuesday, June 10, 2014

அந்தரங்கத்தில் தொங்கும் பூமி

20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நன்கறியப்பட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான 'பெர்ட்ரான்ட் ரஸ்ஸெல்' என்பவர் பொது மக்கள் முன்னிலையில் உரையாற்றிய போது பூமி சூரியனைச் சுற்றி வருகிறதெனவும் சூரியன் அது அமைந்துள்ள பால்வெளி அண்டத்தின் மையத்தை அதிலுள்ள ஏனைய பல மில்லியன் நட்சத்திரங்களுடன் சேர்ந்து சுற்றி வருவதாகவும் விளக்கினார். இவர் தனது விரிவுரையை முடித்த போது கூட்டத்தின் ஒரு மூலையில் இருந்த பெண்மணி ஒருவர் எழும்பி பின்வருமாறு கூறினார். 'நீங்கள் இதுவரை சொன்னதெல்லாம் வெறும் குப்பை. உண்மை என்னவெனில் உலகம் ஒரு மிகப் பெரிய ஆமையின் ஓட்டில் அமைந்துள்ள ஒரு வட்டமான தட்டு.'விஞ்ஞானி உடனே அந்தப் பெண்மணியைப் பார்த்து விநோதமாகப் புன்னகைத்த பின் ஒரு கேள்வியை எழுப்பினார். 'நீங்கள் கூறும் ஆமை எதன்மேல் அமர்ந்துள்ளது?' அந்தப் பெண்மணி ஒரு கணம் திகைத்துப் போய் விட்டார். மேலும் விஞ்ஞானியைப் பார்த்து நீங்கள் மிகவும் புத்திசாலி என்று வாழ்த்தினார். இப்படி பூமியின் அமைப்பு குறித்து தவறான‌ பல்வேறு மூடநம்பிக்கைகள் முன்பு உலக முழுவதும் இருந்தன. ஆனால் வேதாகமம் 3500 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது 
தேவன் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார் என்று (யோபு 26:7).
He stretches out the north over empty space And hangs the earth on nothing. Job 26:7

Thursday, May 15, 2014

உலகிலேயே மிகப் பெரிய பத்து கட்டளைகள்


உலகிலேயே மிகப் பெரிதாக பத்து கட்டளைகள் எழுதப்பட்டுள்ள இடம் அமெரிக்காவில் நார்த் கரோலினாவில் The Fields of the Woods Bible Park (Murphy, NC ) எனும் இடத்தில் உள்ளது. இங்கு ஒரு அழகிய பசுமையான குன்றின் சரிவில் மிகப்பெரிய எழுத்துக்களில் பத்து கட்டளைகளை அழகாக எழுதி வைத்துள்ளார்கள். ஒவ்வொரு எழுத்துக்களும் சுமார் 5 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்டதாகும். இந்த குன்றில் ஏறக்குறைய‌ 350 படிகள் உள்ளன. இதன் வழியாக ஏறி உச்சிக்கு சென்றால் அங்கே திறந்த நிலையில் இருக்கும் மிகப்பெரிய பரிசுத்த வேதாகமத்தை காணலாம். 1945‍ ம் ஆண்டில் இந்த பூங்கா நிறுவப்பட்டதாம். இது தவிர எதிரே ஒரு அழகிய‌ ஜெபமலை, வேத சத்தியங்கள் செதுக்கப்பட்ட தலைக்கற்கள், இயேசுவின் கல்லறையின் ஒரு நிஜ நிலை மாதிரி வடிவம், கொல்கொதா மலைமேட்டின் ஒரு நிஜ நிலை மாதிரி வடிவம், புற்களால் "JESUS DIED FOR OUR SINS." என அழகாக செதுக்கி எழுதப்பட்ட ஒரு பூங்கா, அந்த கால மிஷனெரிமார்கள் பயன்படுத்திய ஒரு குட்டி விமானம் என நாம் காண பல விசேஷ‌ங்கள் அங்கு இருக்கின்றன‌. ஆமாங்க‌ அதெல்லாம் அந்த காலம். அமெரிக்கா அமெரிக்காவாக இருந்த காலம். இப்போது பத்து கட்டளைகளையும் உடைத்து தள்ளிவிட்டு சோதோம் காலத்துக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். இந்த பூங்கா கூட சீக்கிரத்தில் பூட்டப்பட்டு விடலாம். யார் அங்கு போவது? எதற்காக போவது? உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும்.(லூக்கா 19:42)
http://fieldsofthewoodbiblepark.com/

Sunday, September 01, 2013

கடல் வழிகளை உலகுக்கு காட்டிய சங்கீத புத்தகம்

"நவீன கால‌ கடல் வழிகளின் தந்தை" என அழைக்க‌ப்படும் மேத்யூ மவுரிக்கே (Matthew Fontaine Maury (1806 – 1873)) அவர் சமுத்திரத்தின் வழிகளை கண்டுபிடிக்க‌ ஒரு உந்துகோலாக அமைந்தது வேதபுத்தகம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? வேதாகமத்தை மிகவும் நேசித்த ஒரு நபர் அவர். ஆரம்ப காலத்தில் அமெரிக்க கடற்படையில் பணிபுரிந்த போது அவர் ஒரு விபத்தில் அகப்பட்டு தன் இடது காலை இழந்துவிட படுக்கையியேலே வெகுகாலம் கழித்தார். மேத்யூ மவுரி அவ்வாறு படுக்கையில் இருந்த போது வேதபுத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். அப்போது சங்கீத புத்தகம் 8‍‍ம் அதிகாரத்தில் "Paths of the Seas" என இருப்பதை அவர் படிக்க நேரிட்டது. ("The fowl of the air, and the fish of the sea, and whatsoever passeth through the paths of the seas" Psalms 8:8 ). அப்படியானால் சமுத்திரங்களிலும் வழிகள் இருக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். அவர் முற்றிலும் குணமடைந்த‌ பின்பு கடல் வழிகளை பற்றி பல ஆய்வுகள் செய்து அதில் மிகப்பெரிய வல்லுனர் ஆனார். அதனால் அவரை "Pathfinder of the Seas" என்றும் "Father of Modern Oceanography and Naval Meteorology" என்றும் , "Scientist of the Seas" என்றும் அழைப்பர். The Physical Geography of the Sea (1855) எனும் புகழ்பெற்ற நூலை எழுதினார். இன்றைக்கும் விர்ஜீனியாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அவர் வடிவ‌ சிலையை ஒரு வேதாகமத்தின் கூட‌வே சேர்த்து வடிவமைத்துள்ளனர். அவ்வளவாய் அவர் வேதாகமத்தை நேசித்தார்.உலகத்துக்கும் ஆசீர்வாதமாய் அமைந்தார். தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது... ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளிலிருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும். தானியேல் 2:20-22


Saturday, July 20, 2013

தமிழில் பொறிக்கப்பட்டுள்ள பரமண்டல ஜெபம்



Church of the Pater Noster என்பது எருசலேம் நகரில் ஒலிவமலையின் மேல் அமைந்துள்ள ஓர் ஆலயம். இவ்விடத்தில் தான் இயேசு கிறிஸ்து தமது சீஷர்களுக்கு பரமண்டல ஜெபம் செய்ய கற்றுக்கொடுத்தார் என வேத ஆராய்சியாளர்கள் நம்புகிறார்கள் (மத்:6 9 13).இந்த ஆலயத்தின் சுவர்களில் உலகின் பல்வேறு மொழிகளில்  பரமண்டல ஜெபம் பொறிக்கப்பட்டுள்ளது.மேலே நீங்கள் படத்தில் காண்பது அங்கே நமது தாய்மொழியாம் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டுள்ள பரமண்டல ஜெபம்.
என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.சங் 5:2

Thursday, April 04, 2013

ஆழ்க‌ட‌லில் எறிந்துவிட்டார்




உலக‌ ச‌முத்திர‌ங்க‌ளிலேயே மிக‌ ஆழ‌மான‌ ப‌குதி எதுவென்று தெரியுமா? ஜ‌ப்பானுக்கு அ‌ருகே ப‌சுபிக் பெருங்க‌ட‌லிலுள்ள‌ ம‌ரியானாஸ் டிரெஞ்ச் ‌என்ப‌து தான் அது.இத‌ன் ஆழ‌ம் 35,827 அடிக‌ள். அதாவ‌து இந்த‌ ஆழ‌த்தில் எவ‌ரெஸ்ட் சிக‌ர‌த்தையே அலாக்காக‌ தூக்கி போட்டு விட‌லாமாம். ஏனென்றால் எவ‌ரெஸ்டின் உய‌ர‌ம் வெறும் 29,035 அடிக‌ள் ம‌ட்டுமே. உல‌க‌ம‌கா சிக‌ர‌த்தையே விழுங்கிக் கொண்டு அத‌ற்கான‌ அடையாள‌மே இல்லாம‌ல் அமைதியாக‌ கிட‌க்கும் இந்த‌ ம‌ரியானாஸ் ஆழ‌ம். 


அன்ப‌ரே! உங்க‌ள் பாவ‌ங்க‌ள் எவெரெஸ்ட் ம‌லைய‌த்த‌னையாய் குவிந்திருக்கிற‌தே என‌ வ‌ருந்துகிறீர்க‌ளா? வேதாகம‌ம் மீகா:7:19 ல் சொல்லுகிற‌து க‌ட‌வுள் "நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்" என்று. உங்க‌ள் பாவ‌ங்க‌ளும் அக்கிர‌ம‌ங்க‌ளும் எவெர‌ஸ்ட் சிக‌ர‌ம் போல் குவிந்திருந்தாலும் அதை சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டு காணாம‌ல் போக‌ச்செய்ய‌ கர்த்த‌ர் ஒருவ‌ரால் ம‌ட்டுமே முடியும். அவ‌ர‌ண்டை அண்டிக்கொள்வாயா? அவ‌ர் அருளும் ச‌மாதான‌த்தை பெற்றுக்கொள்வாயா?

Thursday, March 28, 2013

ஒபாமா பார்த்து பிர‌மித்த‌ பெட்ரா


ஒபாமா பார்த்து பிர‌மித்த‌ பெட்ரா
வேதாக‌ம‌த்தில் ஏதோம் என்றொரு நாடு குறிப்பிட‌ப்ப‌டுவ‌துண்டு.
இந்த‌ நாட்டின் பிர‌தான‌ ந‌க‌ர‌மாக‌ இருந்த‌து தான் பெட்ரா. இப்ப‌டி
ஒரு‌ நாடே கிடையாது.இது ஒரு க‌ற்ப‌னை பிர‌தேச‌ம்.
இதிலிருந்தே வேதாக‌ம‌ம் ஒரு பொய் என‌ தெரிகிற‌து என‌
ஒரு கூட்ட‌த்தார் ஒரு கால‌த்தில் வேத‌த்தை அவ‌தூறு செய்து
கொண்டிருந்தார்க‌ள். புதைந்து போய் கிட‌ந்த‌ இந்த‌ பெட்ரா
ந‌க‌ர‌த்தை 1812ல் சுவீட‌னை சேர்ந்த‌ ஒரு யாத்ரீக‌ர் Johann Burckhardt
என்ப‌வ‌ர் க‌ண்டுபிடித்தார்.அத‌ன் பிற‌கு அவ‌ர்க‌ள் எல்லோரும்
வாய் அடைத்துப்போயின‌ர்.வேதாக‌ம‌ம் சொல்வ‌தெல்லாம் உண்மை
என‌ மீண்டும் ஒரு முறை நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த பெட்ரா நக‌ர‌ம்
முழுக்க‌ முழுக்க‌ பாறைக‌ளை குடைந்தே செதுக்கி க‌ட்ட‌ப்ப‌ட்ட‌து.
ப‌ல‌ ஆச்ச‌ரிய‌ அதிச‌ய‌ங்க‌ளை உள்ள‌ட‌க்கிய‌து. ஆனால் வேதாக‌ம‌ம்
முன்னுரைத்த‌ப‌டி இந்ந‌க‌ர‌ம் பாழாய்போன‌து.

எரேமியா:49:17 சொல்கிற‌து "ஏதோம் பாழாகும்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் ...பிரமித்து" ‌.ஆமாங்க‌ய்யா..ஒபாமா கூட‌ பார்த்து பிர‌மித்துப்போனார்.

Edom shall be a desolation: every one that goeth by it shall be astonished. Jeremiah 49:17

Friday, September 21, 2012

காத்துக்கிடக்கும் கிழக்கு வாசல்

இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக நீங்கள் காத்திருக்கிறீர்களோ இல்லையோ, ஆனால் இந்த கிழக்கு வாசல் ரொம்பநாட்களாக காத்து கிடக்கிற கதை தெரியுமோ உங்களுக்கு. இந்த வாசல் வழியாகத் தான் யூதருக்கு ராஜாவாக அந்த முதல் குருத்தோலை திருநாளில் கடைசியாக எருசலேமுக்குள் இயேசுகிறிஸ்து நுழைந்தார். இப்போது மீண்டும் அவர் மட்டுமே இந்த வாசல் வழியாக ராஜாவாக நுழையவேண்டும் என்பதற்காக இந்த வாசல் இன்னும் பூட்டப்பட்டிருக்கிறது ஒரு அதிசயகரமான சம்பவம்.அதை பூட்டி வைத்தது ஒரு முகமதிய மன்னனான சுல்தான் சுலைமான் மன்னன்.

வேதம் சொல்லுகிறது”இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப் பட்டிருக்கவேண்டும்.” எசேக்கியேல்:44:2 அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பே எசேக்கியேல் தீர்க்கதரிசி இங்கே ஓசன்னா திருநாளை முன்னுரைத்தான்.

கிறிஸ்துவுக்கு பின் 1543-ல் எகிப்தையும் சிரியாவையும் ஆண்ட சுல்தான் சுலைமான் ஒரு காரணமும் இல்லாமல் இவ்வாசலைக் கற்களால் கட்டி அடைத்தான் என்கிறார்கள். இன்றும் இது மூடப்பட்டிருக்கிறது. “ஒரு கிறிஸ்தவ அரசன் இவ்வழியாய் நுழைந்து எருசலேமைப் பிடித்து அப்புறம் தன் எதிரிகளையெல்லாம் ஜெயித்துவிடுவான்” என்கின்ற பாரம்பரியப் பேச்சு ஒன்று முகமதியருக்குள் வெகுவாக பரவி இருந்தது. அந்நிகழ்வை தடைசெய்ய இவ்வாறு அவன் செய்து இருக்கலாம் என்கிறார்கள்.ஆனால் சுல்தான் சுலைமானோ அவனை அறியாமலே வேதவாக்கியத்தை நிறைவேற்றியிருக்கிறான்.

அப்புறம் எப்போது தான் இந்த வாசல் திறக்கப்படும்? மூன்றாவது வசனத்தை கவனியுங்கள். ”இது அதிபதிக்கே உரியது,  அதிபதி கர்த்தருடைய சந்நிதியில் போஜனம்பண்ணும்படி இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாய்ப்  பிரவேசித்து, மறுபடியும் அதின் வழியாய்ப் புறப்படுவான்.” எசேக்கியேல் 44:3.

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இந்த இரண்டாவது வாக்கியம் நிறைவேறும். ஆமேன். வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா.(சங்கீதம் 24:9,10)

Tuesday, January 17, 2012

இந்தியா கிறிஸ்துவுக்கு சொந்தமாகுமா?


Credit goes to ஜீவஊற்று-சகோ.D.விமலன்.