Showing posts with label Pictures. Show all posts
Showing posts with label Pictures. Show all posts

Thursday, May 15, 2014

உலகிலேயே மிகப் பெரிய பத்து கட்டளைகள்


உலகிலேயே மிகப் பெரிதாக பத்து கட்டளைகள் எழுதப்பட்டுள்ள இடம் அமெரிக்காவில் நார்த் கரோலினாவில் The Fields of the Woods Bible Park (Murphy, NC ) எனும் இடத்தில் உள்ளது. இங்கு ஒரு அழகிய பசுமையான குன்றின் சரிவில் மிகப்பெரிய எழுத்துக்களில் பத்து கட்டளைகளை அழகாக எழுதி வைத்துள்ளார்கள். ஒவ்வொரு எழுத்துக்களும் சுமார் 5 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்டதாகும். இந்த குன்றில் ஏறக்குறைய‌ 350 படிகள் உள்ளன. இதன் வழியாக ஏறி உச்சிக்கு சென்றால் அங்கே திறந்த நிலையில் இருக்கும் மிகப்பெரிய பரிசுத்த வேதாகமத்தை காணலாம். 1945‍ ம் ஆண்டில் இந்த பூங்கா நிறுவப்பட்டதாம். இது தவிர எதிரே ஒரு அழகிய‌ ஜெபமலை, வேத சத்தியங்கள் செதுக்கப்பட்ட தலைக்கற்கள், இயேசுவின் கல்லறையின் ஒரு நிஜ நிலை மாதிரி வடிவம், கொல்கொதா மலைமேட்டின் ஒரு நிஜ நிலை மாதிரி வடிவம், புற்களால் "JESUS DIED FOR OUR SINS." என அழகாக செதுக்கி எழுதப்பட்ட ஒரு பூங்கா, அந்த கால மிஷனெரிமார்கள் பயன்படுத்திய ஒரு குட்டி விமானம் என நாம் காண பல விசேஷ‌ங்கள் அங்கு இருக்கின்றன‌. ஆமாங்க‌ அதெல்லாம் அந்த காலம். அமெரிக்கா அமெரிக்காவாக இருந்த காலம். இப்போது பத்து கட்டளைகளையும் உடைத்து தள்ளிவிட்டு சோதோம் காலத்துக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். இந்த பூங்கா கூட சீக்கிரத்தில் பூட்டப்பட்டு விடலாம். யார் அங்கு போவது? எதற்காக போவது? உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும்.(லூக்கா 19:42)
http://fieldsofthewoodbiblepark.com/

Friday, February 22, 2013

விண்ணில் தோன்றிய‌ மின்ன‌ல்


போப் பென‌டிக்ட் அவ‌ர்க‌ள் த‌ன‌து ராஜினாமாவை அறிவித்த‌ சில‌ ம‌ணிநேர‌ங்க‌ளிலேயே ரோமாபுரி வானில் தோன்றிய‌ ஒரு அற்புத‌மான‌ மின்ன‌ல் இ‌து. அதை அப்ப‌டியே த‌‌ன‌து கேம‌ராவில் சிறைபிடித்துள்ளார் ஒரு இத்தாலிய‌ போட்டோகிராப‌ர். மின்ன‌ல் சொல்ல‌ வ‌ருவ‌து என்ன‌மோ?

சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். லூக்கா 10:18

மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய (இயேசு கிறிஸ்துவினுடைய‌) வருகையும் இருக்கும். மத்தேயு 24:27
இதோ, சீக்கிரமாய் வருகிறேன் - இயேசு கிறிஸ்து

Tuesday, January 08, 2013

ம‌ற‌க்க‌ முடியுமா இப்பாட‌ல்க‌ளை?




Monday, December 17, 2012

அழுகிறவர்களுடனே அழுங்கள்

துக்க‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு ஆறுத‌லும் தேறுத‌லும் அளிப்ப‌து தேவ‌ வ‌ச‌ன‌ங்க‌ளே என்றால் அது மிகையாகாது‌. அமெரிக்க‌ ஜ‌னாதிப‌தி ஒபாமா கூட‌ நேற்று க‌னேட்டிக‌ட்டில் த‌ங்க‌ள் சிறும‌ல‌ர்க‌ளை துப்பாக்கி சூட்டில் இழ‌ந்து‌ த‌விக்கும் குடும்ப‌ங்க‌ளின் ம‌த்தியில் பேசும் போது வேத‌ வ‌ச‌ன‌ங்க‌ளை மேற்கோள்காட்டி அவ‌ர்க‌ளுக்கு ஆறுத‌ல் கூறினார். அவ‌ர் கூறும் போது....
"நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.மேலும் காணப்படுகிற வைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்."....(11கொரி:4:16-18,11கொரி:5:1) ....

"சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது" என்று இயேசு சொன்னார்."....(ம‌த்:19:14) ..."

தேவ‌ன் த‌ம‌து வீட்டுக்கு அவர்க‌ளையெல்லாம் அழைத்துக்கொண்டார்.மீந்திருக்கும் நாமும் ந‌ம்மை பெல‌ப்ப‌டுத்திக்கொண்டு அவ‌ர்க‌ள் நினைவில் ந‌ம் தேச‌த்தை த‌குதிப்ப‌டுத்துவோம்‌. நம்மை பிரிந்த‌‌வ‌ர்க‌ளை க‌ட‌வுள் ஆசீர்வ‌தித்து அவ‌ர்க‌ளை உன்ன‌த‌த்தில் சேர்த்துக் கொள்வாராக‌.அவ‌ர் த‌ம‌து இர‌க்க‌த்தால் இங்கிருக்கும் ந‌ம்மை ப‌ரிசுத்த‌மாய் அர‌வ‌ணைத்துக் கொள்வாராக‌.இப் ப‌குதியையும் ந‌ம் தேச‌த்தையும் பாதுகாத்து ந‌ம்மை ஆசீர்வ‌தித்த‌ருள்வாராக‌"
என்று பேசினார்.

சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.ரோமர் 12:15

Source: http://global.christianpost.com/news/obama-sandy-hook-prayer-vigil-speech-transcript-newtown-full-text-video-86758/

Tuesday, October 23, 2012

பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்போம்

படத்தில் நீங்கள் காணும் இந்த புகழ்பெற்ற “பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்போம்” சிற்பமானது ("Let us beat swords into plowshares") நியூயார்க் மாநகரத்திலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ளது. மனிதனை அழிக்கும் போர்க்கருவியான பட்டயங்களையெல்லாம் மனிதனுக்கு பயனாகும் கருவியான மண்வெட்டிகளாக மாற்றுவோம் என்பது தான் இந்த சிற்பம் சொல்லும் நீதி. இந்த அற்புதமான கருத்து எதிலிருந்து எடுக்கப்பட்டது தெரியுமா? நமது வேதத்தின் ஏசாயா:2:2-டிலிருந்து தான். “அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்குவிரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” என்பது தான் அந்த வசனம். இந்த சிலையை ஐநாவுக்கு பரிசாக 1959-ல் வழங்கியது சோவியத் யூனியன் என்பது இன்னொரு ஆச்சரியமான உண்மை. யுத்தங்களே இல்லாத இப்படியான ஒரு பொற்காலம் இயேசுகிறிஸ்துவின் ஆயிரவருட அரசாட்சியின் காலத்தில் மட்டுமே சாத்தியமாகும் என்பது யாருமே ஒத்துக்கொள்ளாத ஆனால் நிச்சயம் நடைபெறப்போகும் ஒரு சம்பவமாகும். 

ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.(சங்:72:8 ) தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள். (வெளி 20:6) சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.(சங்:72:11.)

Saturday, September 01, 2012

2000 ஆண்டுகால திருச்சபை வரலாறு


வீடியோ செய்தி


மேலும் விவரங்கள்
பல பெயர்களில் சபைகள் எப்படி தோன்றின?
கத்தோலிக்க சபை ஆரம்பமானது எப்படி?
ஆங்கிலிக்கன் (எபிஸ்கோபல்) சபையின் ஆரம்பம்
மெத்தடிஸ்ட் சபை- முரண்பாடுகள்
 பாப்டிஸ்ட்களின் வரலாறு

மத்தேயு 16:18 இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.

Monday, July 23, 2012

திருமண அழைப்பிதழ்



ஜெபதொனி ஜூலை 2012
JebaThoni July 2012

Tuesday, July 03, 2012

சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ளுங்கள்

சர்வாயுதவர்க்கங்களாவன  Whole full armor of God
1.சத்தியம் என்னும் கச்சை - The Belt of Truth
2.நீதியென்னும் மார்க்கவசம் - The Breastplate of Righteousness
3.சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை - The Shoes of the Gospel of Peace
4.விசுவாசமென்னும் கேடகம் - The shield of faith
5.இரட்சணியமென்னும் தலைச்சீரா - The Helmet Of Salvation
6.தேவவசனமாகிய ஆவியின் பட்டயம் - The Sword of the Spirit,The Word of God.



எபேசியர்:6

11. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
12. ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
13. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
14. சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;
15. சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்,
16. பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
17. இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
18. எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.

சர்வாயுதவர்க்கங்கள் அடங்கிய ஒரு பாடல்

கிறிஸ்துவின் சேனை வீரர்கள் நாம் என்றும்
கிறிஸ்துவுக்காய் சேவை செய்திடுவோம்
உயர்விலும் தாழ்விலும் காட்டிலும் நாட்டிலும்
உன்னதர் படையில் பணிபுரிவோம்

இறைமகன் இயேசு வாழ்க வாழ்க
அதிசயமானவர் வாழ்க வாழ்க
வல்லமையுள்ளவர் வாழ்க வாழ்க
மரித்துயிர்த் தெழுந்தாரே

சத்திய கச்சையை அரையினில் கட்டியே
நீதியின் மார்க்கவசம் தரிப்போம்
ஆயத்த பாதரட்சையைத் தொடுத்தே
விசுவாச கேடகத்தை பிடிப்போம் – இறைமகன்

ரட்சண்ய தலைசீராவை அணிந்து
வசனத்தின் பட்டயத்தை எடுப்போம்
சர்வாயுதத்தை அணிந்த வீரர் நாம்
இயேசுவுக்காய் யுத்தம் செய்திடுவோம் – இறைமகன்

வாழ்க வாழ்க வாழ்க (2)
வாழ்க நீர் வாழ்க உன் நாமம் வாழ்க
உன் புகழ் வாழ்க என்றென்றும் வாழ்க – இறைமகன்

Sunday, May 06, 2012

ஆவியின் கனி

ஆவியின் கனி ஒன்பது இருப்பினும், ஆவியின் கனிகள் என்று பன்மையில் அழைக்கப்படாமல் ஆவியின் கனி என்று ஒருமையில் அழைக்கப்பட காரணமென்ன? விவரம் தெரிந்தவர்கள் விளக்கம் அளிக்கலாம். நன்றி.

Source
ஆவியின் கனி கோரஸ் பாடல்
ஆவியின் கனியோ ஒன்பதாம்
 அன்பு சந்தோஷம் சமாதானமாம்
நீடியபொறுமை தயவு
நற்குணமும் விசுவாசமாம்
சாந்தம் இச்சையடக்கமாம்
கலாத்தியர் 5-ல் உள்ளதாம்
22,23-ம் வசனங்களிலே உள்ளதாம்.

Fruit of the Spirit
Love
Joy
Peace
Patience
Kindness
Goodness
Faithfulness
Gentleness and
Self-control.
Galatians 5:22-23

Friday, July 29, 2011

வேதாகம கால பூகோள வரைபடங்கள்

படங்களை அழுத்தி பெரிதாக்கி பார்க்கவும்

The Persian Empire Map - பெர்சிய பேரரசு வரைபடம்


The Assyrian Empire Map -அசீரியப் பேரரசு வரைபடம்



The Roman Empire Map - ரோமானிய பேரரசு வரைபடம்


Israel`s Exodus from Egypt and entry into Canaan Map - எகிப்திலிருந்து இஸ்ரவேல் மக்களின் புறப்பாடும் கானான் வருகையும்


The new Babylonian Empire (Nebuchadnezzar) and The kingdom of Egypt Map - புதிய பாபிலோனிய பேரரசு (நேபுகாத்நேச்சார்) மற்றும் எகிப்து


The world of the Old Testament Map - பழைய ஏற்பாடுகாலத்தில் உலகம்


The missionary journeys of the Apostle Paul Map -பவுல் அப்போஸ்தலனின் சுவிசேசம் அறிவித்தல் பயணம்


படங்களை அழுத்தி பெரிதாக்கி பார்க்கவும்

The Division of the 12 tribes;The empire of David and Solomon Map - பன்னிரண்டு கோத்திரங்கள், தாவீது சாலோமோனின் ராஜியம்


Canaan in Old Testament Times Map - பழைய ஏற்பாடுகாலத்தில் கானான்


The Holy Land in New Testament Times Map - புதிய ஏற்பாடுகாலத்தில் இஸ்ரேல்


Jerusalem at the time of Jesus Map - இயேசு கிறிஸ்துவின் காலத்தில் எருசலேம்


படங்களை அழுத்தி பெரிதாக்கி பார்க்கவும்
Physical Map of the Holy Land - இஸ்ரேலின் இயற்கை அமைப்புகள் வரைபடம்


Holy Land Elevation in Bible Times - வேதாகம காலத்தில் இஸ்ரேலின் நில அமைப்பு

படங்களை அழுத்தி பெரிதாக்கி பார்க்கவும்