Showing posts with label Short Answers. Show all posts
Showing posts with label Short Answers. Show all posts

Saturday, February 23, 2013

கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.

உங்க‌ளுக்குத் தெரியுமா?
தேவ‌ன் அன்பாக‌வே இருக்கிறார்.
ஆனால் சில‌ காரிய‌ங்க‌ள் அவ‌ருக்கு அருவருப்பானவைகள்.
1.மேட்டிமையான கண்.
2.பொய்நாவு.
3.குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை.
4.துராலோசனையைப் பிணைக்கும் இருதயம்.
5.தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால்.
6.அபத்தம் பேசும் பொய்ச்சாட்சி.
7.சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டு பண்ணுதல்.
நீதிமொழிக‌ள்:6:16-19


Tuesday, August 21, 2012

பிற மதத்தவருடன் வாக்குவாதம் செய்யலாமா? - குறும்பதில்கள்


விளக்கம் கொடுப்பது என்பது வேறு, வாக்குவாதம் செய்வது என்பது வேறு. எனவே இரு விதமான ஜனங்கள் இருக்கிறார்கள். சிலர் உண்மையாகவே ஆத்துமாவில் தாகம் கொண்டு சில பல கேள்விகளை கேட்டு விளக்கம் கேட்பார்கள். இவர்கள் கேள்விகளிலும் குரலிலும் அவர்கள் தாகமும் ஏக்கமும் தெரியும். இது போன்றவர்களுக்கு ஜெபத்துடன் பதில் அளிப்பதில் தவறேதும் இல்லை. அதை விட்டு விட்டு நேருக்கு நேர் வருகிறாயா? ஒரே மேடையில் விவாதிக்கலாமா என சவாலிடும் நபர்களிடமிருந்து விலகியிருப்பதே நல்லது. ஏனென்றால் வேதம் சொல்லுகிறது பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.(மத்தேயு 7:6) இப்படி உங்களையும் பீறிப்போடும் அபாயம் இருப்பதால் நீங்கள் நீங்கி இருப்பதே உத்தமம்.

தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர் (சங்கீதம் 51:17) இளகிய மனதும் நொறுங்குண்ட மனதும் உள்ளவர்கள் தேவனைத் தேடி கண்டு கொள்வார்கள். வாக்குவாதம் செய்பவர்கள் மனது ஏற்கனவே கடினப்பட்டு இருப்பதால் எத்தனை தான் மழைபெய்தாலும் அவர்கள் இதயம் நீர்த்துபோவதில்லை. மேலும் வேதம் சொல்லுகிறது ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன் (I கொரிந்தியர்:11:16) என்று.

தெரியாதவன் கேள்வி கேட்டால் அவனுக்கு பதில் அளிக்கலாம். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதவன் கேள்வி கேட்டால் நாமும் முட்டளாக்கப்படுவோம். வாக்குவாதம் செய்பவனுக்கு பதில் கூறக்கூடாது. காரணம், ஒத்துக் கொள்ள மனதில்லாததால்தான் அவன் வாக்குவாதத்தில் இறங்குகிறான் நாம் அவனிடம் பேசி பிரயோஜனமில்லை.எனவே கிறிஸ்தவர்கள் வாக்குவாதம் செய்யக்கூடாது.

1 கொரி 1:18.சிலுவைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது. இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது.

மேலும் விவரங்கள்

Thursday, July 19, 2012

இயேசு இந்தியா வந்தாரா? - குறும்பதில்கள்

கேள்வி: இயேசு தன்னுடைய கடைசி காலத்தில் இந்தியாவிற்கு வந்ததாகவும் சிலுவையில் அறையப்பட்டவர் அவர் அல்லவென்றும், இயேசுவின் கல்லறை காஷ்மீரி›ல் இருக்கிறதென்றும் சிலர் சொல்கிறார்களே? அதுபற்றி உங்கள் விளக்கம் என்ன?

பதில்: இப்படியொரு கருத்து பல காலமாக சொல்லப்பட்டு வருவது உண்மை தான். இயேசு இந்தியாவிற்கு வந்தார். காஷ்மீரி›ல் போய் சமாதியாகி விட்டார் என்று சொல்பவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதாரமாக கொள்வது பர்னபாவின் சுவிசேஷம் என்ற நூலைத்தான் (Gospel of Barnabas). இந்த பர்னபாவின் சுவிசேஷம் இயேசுவின் மரணம் பற்றி என்ன சொல்கிறது? ரோமவீரர்கள் இயேசுவைக்கைது செய்ய அனுப்பப்பட்டபோது கர்த்தர் குறுக்கிட்டு தேவ தூதர்களை அனுப்பி இயேசுவைத் தூக்கிக் கொண்டு வரச் சொல்லிவிடுகிறார். இயேசுவைக் கைது செய்ய வந்த வீரர்கள் இயேசுவை உருவத்தில் ஒத்திருந்த யூதாஸை இயேசு என்று கருதி கைது செய்து கொண்டு போய்விடுகிறார்கள். யூதாஸ், தான் அவனி›ல்லை என்று எத்தனையோ மன்றாடியும் பாவம் அவனை சிலுவையிலறைந்து விடுகிறார்கள். நீர் அழைத்தீர் என்பதினாலே தானே ஊழியத்திற்கே வந்தேன். கடைசியில் இப்படி ஏன் கைவிட்டீர்' என்று கதறியதாக சொல்லப்பட்டுள்ளது. (பாவம் யூதாஸ்).சரி. தேவதூதர்களால் தூக்கிச் செல்லப்பட்ட இயேசு என்னவானாராம்? அவரை அவர்கள் பரலோகத்திற்கு கொண்டு செல்லாமல் எருசலே•முக்கு வெளியிலிருந்த வனாந்திரம் ஒன்றில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்களாம். தனக்கு விதிக்கப்பட்ட சிலுவை தண்டனை யூதாஸிடத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டதை அறிந்து கொண்ட இயேசு இரகசியமாக அவருடைய தாயாரையும், சீடர்களையும் காண வந்தாராம். அதைத்தான் அவர்கள் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டதாக சொன்னார்களாம். தொடர்ந்து தான் எருசலேமில் தங்க •முடியாது என்ற மு•டிவுக்கு வந்த இயேசு அங்குமிங்கும் சுற்றித்தி›ரிந்து கடைசியில் காஷ்மீருக்கு வந்து சேர்ந்துவிட்டாராம். அங்கே அந்த நாட்களில் தீவிரவாதிகள் இல்லாததினால் அங்கேயே தொடர்ந்து தங்கிவிட்டு ஒரு கல்யாணத்தையும் பண்ணிக்கொண்டு குடும்பமாய் வாழ்ந்துவிட்டு கடைசியில் காஷ்மீ›ரிலேயே மரி›த்தும் போய்விட்டாராம் என்று அள்ள அளவில்லாமல் கற்பனைகளை அள்ளித்தெளித்திருக்கிறது அந்த பர்னபாவின் சுவிசேஷத்தில்.

இதையொட்டி எழுதப்பட்ட புத்தகங்களுள் பேபர் கெய்சர் (Faber Kaiser) என்பவர் 1977ல் வெளியிட்ட "Jesus Christ Died in Kashmir' என்ற புத்தகத்தில் ""இயேசு உண்மையில் ம›ரிக்கவில்லை. அவர் கோமா நிலையிலிருந்தார். அவர் ம›ரித்துவிட்டார் என்று தவறாக கருதி அவரை கல்லறையில் வைத்து விட்டார்கள். இரண்டுநாள் மயக்கநிலையிலிருந்து விட்டு பின்னர் விழிப்புத்தட்ட, இயேசு எழுந்து பார்த்துவிட்டு கல்லறையின் கல்லை தாமாகவே புரட்டி வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி காஷ்மீருக்கு வந்துவிட்டார். அவர் கல்லறை இன்னமு•ம் அங்கே இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். அப்படியா கல்லறையை காட்டுங்கள் என்று கேட்டால் மலைகளுக்கிடையில் இருக்கும் ஒரு நீண்ட கல்லறையை காட்டுகிறார். கொஞ்சம் நெருங்கிப் பார்க்கலாம் என்றால் தொந்தரவு பண்ணாதீர்கள் இயேசு தூங்கட்டும் என்கிறார். இவர்தவிர, பஞ்சாபில் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிர்சா குலாம் அகமது (Mirza Ghulam Ahmad) என்கிற இஸ்லாமிய அறிஞர் இயேசு இந்தியாவிற்கு வந்தார் என்று சொல்லுகிறார். விளக்கம் கேட்டால் மத்திய பஞ்சாபில் இயங்கிவந்த பழைய ஊழிய நிறுவனம் ஒன்றை காட்டுகிறார். விளக்கம் பு›ரியாமல் நீங்கள் அவரைப் பார்த்தீர்களேயானால் உடனே ஆமாம் தம்பி... இயேசு இந்தியா வந்திருந்தபோது அவர் தான் இதை ஆரம்பித்து நடத்திக்கொண்டிருந்தார் என்பார். சரி›, இவைகளுக்கான விளக்கம்தான் என்ன? பர்னபா ஏன் அப்படியொரு சுவிசேஷம் எழுதினார்? காஷ்மீரி›ல் இவர்கள் காட்டும் கல்லறை யாருடையது? என்ற கேள்விகளுக்கு கொஞ்சம் பதில் பார்ப்போம்.

மு•தலில் பர்னபாவின் சுவிசேஷம். இது நீங்கள் நினைக்கிற மாதி›ரி பவுலுடன் ஊழியம் செய்த பர்னபா எழுதியதல்ல. வேறுயாரோ ஒரு டுபாக்கூர் பர்னபா. இது எழுதப்பட்ட காலம் கி.பி. 1349ல். அதாவது இயேசுவின் மரணத்திற்கு பின்பாக ஏறத்தாழ 1200 ஆண்டுகளுக்கு பிறகு. அப்படியானால் இது வேதத்தில் காட்டப்படும் பர்னபாவினுடையது அல்ல. எனவே இது நம்பகமானது அல்ல. இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு மரணம் பற்றி அவருடனே இருந்தவர்கள் அல்லது அவர்காலத்தில் வாழ்ந்தவர்களின் சாட்சிகளைத்தான் நம்பகமானதாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இயேசுவைப் பற்றி அவருடனே வாழ்ந்த அல்லது அவர்காலத்திலேயே வாழ்ந்த மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் போன்றவர்கள் எழுதிவைத்த சுவிசேஷங்கள் தான் நம்பகமானவை. காரணம், இவையாவும் மு•தல் நூற்றாண்டிலேயே அதாவது இயேசுவின் நினைவுகள் எல்லார் மனதிலும் பசுமையாக இருக்கும்போதே எழுதப்பட்டவை. மாத்திரமல்ல, இவைகளில் காணப்படும் நிகழ்ச்சிகளுக்கும், இயேசுவின் சிலுவை மரணத்திற்கும் ரோம சாம்ராஜ்யத்தின் ஆவணங்கள் மற்றும் குறிப்பேடுகளில் அக்காலத்தில் ஆண்ட ஆளுநர்களின் கையெழுத்துடன் ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பர்னபாவின் சுவிசேஷம் எழுதின பர்னபா யார் என்பதற்கே ஆதாரங்கள் இல்லை. இரண்டாவது மிர்சா குலாம் அகமதுவின் கூற்று பற்றியது. இந்த மீர்சா குலாம் துவக்கத்தில் இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்து கடைசியில் தன்னை இறுதிக்கால நபி என்று பிரகடனம் செய்து கொண்டார். பைபிள் மாத்திரமல்ல. குர் ஆனைப்பற்றியும் நிறைய தாறுமாறான கருத்துக்களை சொல்லியுள்ளார். இவரை இதனால் ஒரு கூட்டம் ஜனங்கள் தவிர யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்பற்றியவர்கள் அகமதியர்கள் (Ahmadiyya) எனப்பட்டனர். எனவே, இவரது சாட்சியும் நம்பகமானதல்ல. கெய்ச›ன் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல இயேசு சரி›யாக மரி›க்கவில்லை. கோமாவில் கிடந்தார் என்பதெல்லாம் கடைந்தெடுத்த கற்பனை ரகங்கள். ரோம வீரர்கள் சிலுவை தண்டனை நிறைவேற்றுவதில் மாஸ்டர் பட்டம் பெற்றவர்கள். ஒரு நாளைக்கு இது மாதிரி› பலபேரை சிலுவையில் அறைந்து கொல்லும் புரபஷனல் கொலைகாரர்கள். அவர்கள் இயேசு மரி›த்ததை உறுதி செய்யத்தான் அவர் விலாவிலே குத்தினார்கள். சரி›யாக மரி›க்கவில்லையென்றால் உடனடியாக கண்டுபிடித்துவிடுவார்கள். அதுவும் தவிர இயேசு கல்லறையில் வைக்கப்பட்ட போது இயேசுவின் சரீŸரத்தை அவர் சீடர்கள் ஒளித்து வைத்துவிட்டு அவர் உயிர்த்தெழுந்தார் என்று சொல்லிடுவார்கள் என்று மனுச்செய்துதான் யூதர்கள் அவர்கள் கல்லறையை காவல் செய்ய உத்தரவு பெற்றனர். அதன்படி ரோம அரசாங்கம் அவர் கல்லறையை காவல் செய்ய வீரர்களை நியமித்திருந்தது. இயேசு கோமா தெளிந்து எழுந்து தன்னிஷ்டப்படியெல்லாம் இந்த வீரர்களை தாண்டி வெளியே போய்விட மு•டியாது. அதுவும் தவிர, கோமாவில் கிடந்த ஒரு மனிதர் எழுந்தவுடன் அவர் நடக்க •முடியாது. அப்படியே நடக்கவேண்டுமானாலும் நாலைந்து பே›ரின் உதவியுடன் தான் செய்ய மு•டியும். இங்கே கெய்சர் புத்தகத்தில் சிலுவையிலறையப்பட்டு கோமாவில் கிடந்த இயேசு எழுந்து பார்த்து கல்லைத் தாமே புரட்டிப்போட்டு விட்டு (கல்லறைக்கல் என்பது பெ›ரிய பாறை) ஹாயாக நடந்து போயிருப்பது தமிழ் சினிமாக்களில் கூட பார்க்க• முடியாத கற்பனை ரகம். ச›ரி. இவர் காட்டும் காஷ்மீர் கல்லறை பின்னே யாருடையது? •முதலாம் நூற்றாண்டில் கிரேக்க, ரோமானிய உலகில் பெரும்புகழ் பெற்றிருந்தவர் அபோலநிபஸ் என்பவர். இவர் நம்‰மூர் சித்தர்கள் மாதிரி› பல அமானுஷ்ய செயல்களை நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்ததாக சொல்லப்படுகிறது. பின்வந்த, நூற்றாண்டுகளில் ஏகப்பட்ட கால இடைவெளியில் மக்கள் இயேசுவையும் அகோ லிநிபஸையும் ஒன்று என்று ஜனங்கள் கருதியிருக்கலாம். எனவே காஷ்மீரி›ல் கெய்சர் காட்டுவது இயேசுவின் கல்லறையல்ல. மாத்திரமல்ல. இயேசுவுக்கு எங்குமே கல்லறை இல்லை. அவர் மரி›த்தபோது அவரை வைத்திருந்த இடம் தான் இருக்கிறது. கல்லறை என்றால் அதனுள்ளே ம›ரித்தவர் இருக்கவேண்டும். இயேசு உயிர்த்ததினால் அவர் அங்கே இல்லை. பின்னர் இதுமாதிரி› கதைகள் ஏன் கிளப்பிவிடப்படுகின்றன? இயேசுவின் மரணத்தை ஒத்துக் கொள்ள •முடியாத சிலர் அவர் மீது வைத்திருந்த அழுத்தமான நம்பிக்கை காரணமாகத்தான் இறைவன் மனிதனாக அவதரி›த்து இவ்வளவு மோசமான மரணத்தை அடைந்திருக்க மு•டியாது என்று கருதி இதுபோல கற்பனை செய்துகொண்டு புத்தக•ம் எழுதிவிடுகிறார்கள்.(இயேசுவின் தொனி மார்ச் 08)

 அப்போஸ்தலனாகிய யோவானை தவிர , மற்ற 12 அப்போஸ்தலர்களும், பவுல், மற்றும் யூதாசுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியாஸ் உட்பட அனைவருமே இரத்த சாட்சிகளாக கொலை செய்யப்பட்டு கிறிஸ்துவுக்காக மரித்தார்கள். ஒரு பொய்க்காக ஏன் இவர்கள் அனைவரும் தங்கள் உயிரை அப்படி மாய்த்திருக்க வேண்டும்? சிந்தித்துப் பாருங்கள். உண்மையில், எந்த புத்தகமும் இந்த அளவு ஆழமாய் ஆராயப்பட்டதில்லை. இந்த 2000 ஆண்டுகளில் பைபிளில் குறைகண்டு அதை எப்படியாவது அழிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஏராளம்.ஆனால் வேதாகமமோ இன்னமும் இருக்கின்றது. அநேகருடைய வாழ்க்கையை இன்னும் மாற்றிய படி இருக்கின்றது. இயேசு கிறிஸ்துவை பற்றிய நற்செய்தியை உலகுக்கு பறைசாற்றியபடி உள்ளது. 

ஏசாயா:40:8. புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்

Thursday, April 26, 2012

எல்லாரையும் மதம் மாற்றுவது எங்கள் திட்டம் அல்ல

இந்த கட்டுரைகளை படிக்கும் போது உங்கள் எண்ணத்தில் உங்களையோ அல்லது இந்த உலகத்தையோ கிறிஸ்தவமயமாக்கும் எண்ணத்தில் நாங்கள் இருப்பது போல உங்களுக்கு தோன்றினால் அதனால் கவலைப்படாதிருங்கள். ஏனென்றால் எல்லோரையும் கிறிஸ்தவர்களாக்கி பார்ப்பது எங்கள் குறிக்கோள் அல்ல. புனித வேதாகமத்தின் ஒரு புத்தகமான மத்தேயு அத்தியாயம் 7, வசனம் 13-ல் இயேசு கிறிஸ்து இவ்வாறாக கூறினார் “இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” கடவுளால் மட்டுமே நரகத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும். ஜனங்களை இரட்சிப்பது இறைவனின் செயல், மேலும் எல்லோரும் இரட்சிக்கப்படுவது என்பது கூடாத காரியம் என மேலே நாம் சொன்ன வசனத்திலிருந்து தெரிகிறது. எங்கள் இலக்கு அனைத்து ஜாதி மத இனங்களுக்கும் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை அறிவிப்பதும் அதன் மூலம் அனைத்து ஜாதி மத இனங்களிலும் இருந்து ஒரு சில பேரையாவது இயேசுவுக்கு சீடர்களாக உருவாக்குவதும் ஆகும். எனினும் தேவன் தான் முன்குறித்து தெரிந்தெடுத்தவர்களை மட்டுமே இரட்சிக்கிறார். அவர்களை கிறிஸ்துவின் அடியானாக மாற்றுகிறார்.

இன்று, பூமியில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிறிஸ்தவ தேவாலயங்கள் இல்லை. கிறிஸ்தவர்கள் மிகக் குறைவாக இருக்கும் இடங்களில் கூட பெரும்பாலும் ஒரு பழங்கால திருச்சபை ஒன்று இன்னும் சில அங்கத்தினர்களோடு இருப்பதை காணலாம். சில இடங்களில் மக்களின் பூர்வீகத்தை விட திருச்சபையின் சரித்திரம் மிகப்பழமையானதாக இருப்பதை உணரலாம்.  பெரும்பாலான நாடுகளில் அந்நாட்டு தற்போதைய அரசாங்கத்தை விட கிறிஸ்தவ அமைப்புகள் மிகப் பழமையானவையாக இருக்கும்.

பைபிளை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் எல்லோரும் ஆளும் அரசாங்கத்துக்கும் சட்ட திட்டங்களுக்கும் கீழ்படிந்து நடக்கவும் சமூகத்தில் பல நற்பணிகளை செய்யவும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். முன்பு பொட்டல் காடாய் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்த இடங்களில் எத்தனை பள்ளிகளும், கல்லூரிகளும் மருத்துவமனைகளும் அந்த காலத்திலேயே கிறிஸ்தவ மிஷனரிமார்கள் நிறுவியிருக்கிறார்கள் என பாருங்கள்.எந்த உள்ளூர் கிறிஸ்தவனையும் கேட்டுப்பாருங்கள், யாருமே எல்லோரையும் கிறிஸ்தவராக மாற்றுவதே தங்கள் இலட்சியம் என கூறமாட்டார்கள். மாறாக, கிறிஸ்தவர் தாங்கள் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையை பிறரும் தெரிந்து கொள்ளவேண்டும் என மட்டுமே விரும்புவார்கள். அதனால் மற்றவர்கள் தங்கள் விருப்ப வெறுப்புகளை தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு மிதவாத முயற்சி மட்டுமே. பிற மார்க்கங்களை பற்றி மேலும் அறிய, அதனை தொடர்ந்து தங்களின் தனிப்பட்ட நம்பிக்கையை தெரிவு செய்து கொள்ள இது ஒரு மத சுதந்திரத்தை கொடுக்கிறது.

II பேதுரு 3:9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

Thursday, November 17, 2011

ஆவி, ஆத்துமா,சரீரம் விளக்கம் தரவும் - குறும்பதில்கள்

Dear Bro in Christ,
I have some Doubt in Spiritual.Please give explanation for below this in tamil.
God Bless You and Your Ministries.
ஆவி, ஆத்துமா,சரீரம் விளக்கம் தரவும்.


வேத பண்டிதனல்ல நான். ஆகிலும் எனது சிறிய அறிவுக்கு எட்டிய அளவில் விளக்கம் தர முயற்சிக்கிறேன்.
முதலில் ஆவி, ஆத்துமா,சரீரம் இவற்றின் தோற்றத்தை பார்க்கலாம்.
தேவன் தனது சொந்த கரம் கொண்டு பூமியின் மண்ணினாலே மனிதனை உருவாக்கினார். இது சரீரத்தின் தோற்றம்.
இச்சரீரம் இன்னும் உயிர் பெறவில்லை. தேவன் தனது சுவாசத்தை அந்த சரீரத்தின் நாசியிலே ஊத ஆவி உள் புகுகிறது. அவன் ஜீவ ஆத்துமாவானான்.
இந்த ஆத்துமாவானது பாவம் செய்வதன் மூலம் மரணம் அடைகிறது.
இதுதான் பாவத்தின் சம்பளம் மரணம் என்பது. இது முதலாம் மரணம்.(ரோம 6:23)
எல்லாருமே முதலாம் மரணம் அடைகின்றோம்.
எனவே தான் நாம் ஒவ்வொருவரும் மறுபடியும் பிறக்க வேண்டியுள்ளது.(யோவா 3:3)
மறுபடியும் பிறந்த ஆத்துமாவுக்கு இனி மரணமேயில்லை.
இப்படி மறுபடியும் பிறந்த ஒவ்வொரு ஆத்துமாவும் இறுதியில் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்கிறது.
பாவம் செய்து முதலாம் மரணம் அடைந்து மறுபடியும் பிறவாத ஆத்துமா
இறுதியில் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்குபெறும்.(வெளி 21:8)
சரீரத்துக்கும் ஆவிக்கும் இறுதியில் என்ன நேரிடும்?
"சரீர மரணத்துக்கு" பின் சரீரம் மண்ணுக்கும் (ஆதி 3:19), ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கும் திரும்பும்.(பிர 12:7)
முடிக்கும் முன் ஒரு விசயம் கூட சொல்லிவிடுகிறேன்.
தேவன் தம்முடைய சாயலாகவே மனிதனை படைத்தார் என்று பார்க்கிறோம்.(ஆதி 1:26)
எனவே நாம் நம் சாயலை தெரிந்து கொள்ள அவரையே பார்க்கலாம்.
அவரைப் போலவே நாமும் நம்மில் மூன்றாயும் ஒன்றாயும் இருக்கிறோம்.
அவரில் பிதா குமாரன் பரிசுத்தாவி.
நம்மில் ஆத்துமா சரீரம் ஆவி.
நாம் அவரின் பிரதிபலிப்பு.

Monday, November 14, 2011

"இந்தச் சந்ததி" யார்? - குறும்பதில்கள்

Dear Brother in Christ,
Praise the lord, I am KS. Bro i have one doubt in bible plz send ans for me மத்தேயு 24 : 34 "இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."இங்கு கூறப்பட்டுள்ள "இந்தச் சந்ததி" யார்?


கிறிஸ்துவில் பிரியமான சகோதரர் அவர்களுக்கு,
எனக்கு தெரிந்த வகையிலும் புரிந்த வகையிலுமான பதிலை இங்கே உங்களுக்கு தந்துள்ளேன். மாற்று கருத்துக்கள் இருப்பின் அவைகள் வரவேற்க்கப்படுகின்றன. வேதத்தின் ஆழங்களை அறிவது அத்தனை சுலபமல்லவே.

சிலர் “இந்த சந்ததியை” இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் இருந்த சந்ததி என்று குறிப்பிடுவர். அக்கருத்துபடி பார்த்தால் எருசலேம் தேவாலய அழிவை அவர் இருந்த கால ஜனங்கள் பார்த்தார்களே ஒழிய மேலும் அவர் அந்த 24-ம் அதிகாரத்தில் கூறிய இரண்டாம் வருகை சம்பவங்களை அவர் இருந்த கால ஜனங்கள் பார்க்கவில்லை. எனவே இக்கருத்தை நாம் தவறான கருத்தாக கொள்ளலாம்.

வேறு சிலரோ அதே அதிகாரத்தில் குறிப்பிடப்படும் அத்திமரம் துளிவிடும் காலத்தில் அதாவது இஸ்ரேல் தேசம் மீண்டும் உருவாகும் காலத்தில் வாழும் சந்ததியினரே இயேசுவானவர் குறிப்பிடுகிறார் என்கிறார்கள். அதாவது 1948-ம் ஆண்டு முதல் 70 ஆண்டுகள் (1 சந்ததி) அதாவது 2018 வரையான காலத்தில் வாழும் மக்கள் தான் அந்த "இந்தச் சந்ததி"யாம். எனக்கு ஏனோ இந்த கணக்கீட்டிலும் உடன்பாடு இல்லை. ஆனால் அதனை நம்புவோர் தொடந்து அதனையே நம்பிக்கொண்டிருக்க வேண்டுகிறேன்.

எனது கணிப்பு அவர் "இந்தச் சந்ததி” என குறிப்பிட்டது யூத சந்ததியை அதாவது யூத வம்சத்தை. ஒரு தேசத்தை அல்லது ஒரு குல ஜனங்களை கூட குறிப்பிட இந்த ஜெனரேசன் அல்லது சந்ததி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதை நாம் மத்தேயு:12:39 மற்றும் மத்தேயு:23:36 போன்ற வசனங்களில் காணலாம். கிறிஸ்துவின் காலத்துக்குப் பின் எருசலேமில் ரோமர்களின் படையெடுப்பு அதையடுத்து யூதர்கள் உலகமெங்கும் சிதறடிக்கப்படல், சிறைப்பிடிக்கப்படல் நடந்தது. இவ்வாறு சொந்த வீட்டை இழந்து நாட்டை இழந்து உலகமெங்கும் சிதறியபோதும் "இந்தச் சந்ததி” ஒழிந்துபோகாதென்று, அதாவது யூத இனம் ஒழிந்து போகாது வேதத்தில் கூறப்பட்டுள்ள இயேசுவின் இரண்டாம் வருகை சம்பவங்கள் அனைத்தையும் பார்க்க அந்த ஜனம் கண்டிப்பாக இருக்கும் என்ற அர்த்தத்தில் கூறப்பட்டதாகவே நான் நினைக்கிறேன்.எப்படி உங்கள் கருத்து?