Showing posts with label Tracts. Show all posts
Showing posts with label Tracts. Show all posts

Thursday, April 12, 2018

ரொம்ப தாமதமாகிவிடாதே


Thursday, April 26, 2012

எல்லாரையும் மதம் மாற்றுவது எங்கள் திட்டம் அல்ல

இந்த கட்டுரைகளை படிக்கும் போது உங்கள் எண்ணத்தில் உங்களையோ அல்லது இந்த உலகத்தையோ கிறிஸ்தவமயமாக்கும் எண்ணத்தில் நாங்கள் இருப்பது போல உங்களுக்கு தோன்றினால் அதனால் கவலைப்படாதிருங்கள். ஏனென்றால் எல்லோரையும் கிறிஸ்தவர்களாக்கி பார்ப்பது எங்கள் குறிக்கோள் அல்ல. புனித வேதாகமத்தின் ஒரு புத்தகமான மத்தேயு அத்தியாயம் 7, வசனம் 13-ல் இயேசு கிறிஸ்து இவ்வாறாக கூறினார் “இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” கடவுளால் மட்டுமே நரகத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும். ஜனங்களை இரட்சிப்பது இறைவனின் செயல், மேலும் எல்லோரும் இரட்சிக்கப்படுவது என்பது கூடாத காரியம் என மேலே நாம் சொன்ன வசனத்திலிருந்து தெரிகிறது. எங்கள் இலக்கு அனைத்து ஜாதி மத இனங்களுக்கும் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை அறிவிப்பதும் அதன் மூலம் அனைத்து ஜாதி மத இனங்களிலும் இருந்து ஒரு சில பேரையாவது இயேசுவுக்கு சீடர்களாக உருவாக்குவதும் ஆகும். எனினும் தேவன் தான் முன்குறித்து தெரிந்தெடுத்தவர்களை மட்டுமே இரட்சிக்கிறார். அவர்களை கிறிஸ்துவின் அடியானாக மாற்றுகிறார்.

இன்று, பூமியில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிறிஸ்தவ தேவாலயங்கள் இல்லை. கிறிஸ்தவர்கள் மிகக் குறைவாக இருக்கும் இடங்களில் கூட பெரும்பாலும் ஒரு பழங்கால திருச்சபை ஒன்று இன்னும் சில அங்கத்தினர்களோடு இருப்பதை காணலாம். சில இடங்களில் மக்களின் பூர்வீகத்தை விட திருச்சபையின் சரித்திரம் மிகப்பழமையானதாக இருப்பதை உணரலாம்.  பெரும்பாலான நாடுகளில் அந்நாட்டு தற்போதைய அரசாங்கத்தை விட கிறிஸ்தவ அமைப்புகள் மிகப் பழமையானவையாக இருக்கும்.

பைபிளை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் எல்லோரும் ஆளும் அரசாங்கத்துக்கும் சட்ட திட்டங்களுக்கும் கீழ்படிந்து நடக்கவும் சமூகத்தில் பல நற்பணிகளை செய்யவும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். முன்பு பொட்டல் காடாய் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்த இடங்களில் எத்தனை பள்ளிகளும், கல்லூரிகளும் மருத்துவமனைகளும் அந்த காலத்திலேயே கிறிஸ்தவ மிஷனரிமார்கள் நிறுவியிருக்கிறார்கள் என பாருங்கள்.எந்த உள்ளூர் கிறிஸ்தவனையும் கேட்டுப்பாருங்கள், யாருமே எல்லோரையும் கிறிஸ்தவராக மாற்றுவதே தங்கள் இலட்சியம் என கூறமாட்டார்கள். மாறாக, கிறிஸ்தவர் தாங்கள் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையை பிறரும் தெரிந்து கொள்ளவேண்டும் என மட்டுமே விரும்புவார்கள். அதனால் மற்றவர்கள் தங்கள் விருப்ப வெறுப்புகளை தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு மிதவாத முயற்சி மட்டுமே. பிற மார்க்கங்களை பற்றி மேலும் அறிய, அதனை தொடர்ந்து தங்களின் தனிப்பட்ட நம்பிக்கையை தெரிவு செய்து கொள்ள இது ஒரு மத சுதந்திரத்தை கொடுக்கிறது.

II பேதுரு 3:9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

Wednesday, January 25, 2012

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை ஓர் இணையற்ற வரலாறு

குறிப்பு:வரலாற்று உண்மைகளைச் சரிவர ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத சில நண்பர்கள், இயேசு கிறிஸ்து என்று ஒருவர் பிறந்தது கூட இல்லையென இந்நாட்களில் பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் எழுதி, உலகத்தை ஏமாற்றப் பார்க்கின்றனர்.
“இயேசு கிறிஸ்து பிறந்ததாகக் கூறப்படும் காலத்திலும், வரலாற்று ஆசிரியர்கள் (Historians) வாழ்ந்திருந்தார்களே, அவர்களில் யாராவது இயேசு கிறிஸ்துவைப் பற்றி யாதேனும் எழுதியதுண்டா?” என்பதே அவர்கள் கேட்கும் குதர்க்கமான கேள்வி. இக்கேள்விக்குப் பதிலளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்)

ரோமப் பேரரசரான ஜூலியஸ் சீஸர், கால் (Gaul) நாட்டின் மீது படையெடுத்த வரலாற்றினை விளக்கும் மூலப்பிரதிகள் பத்திற்கும் குறைவானவை. அவற்றுள் மிகப் பழமையான பிரதி, சீஸர் இறந்து 900 ஆண்டுகளுக்குப் பின்னரே எழுதப்பட்டது. ஆயினும் இவை வரலாற்றிற்கு அடிப்படையான ஆதாரங்களாகவே கருதப்படுகின்றன.

இந்திய வரலாற்றில் இடம்பெற்றுள்ள எத்தனையோ முக்கிய நிகழ்ச்சிகளுக்குக் கூட அடிப்படையான ஆதாரங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. அத்துடன் சில மன்னர்கள் வாழ்ந்த காலம், அவர்களது வரிசை ஆகியவற்றை நிர்ணயிப்பதிலும் பல சிக்கல்களும் சிரமங்களும் ஏற்படுகின்றன.

அரும்பெரும் ஆதாரங்கள் :
இயேசு கிறிஸ்துவின் வரலாறு நூற்றுக்கு நூறு உண்மையானது என்பதற்கு எழுந்த ஆதாரங்கள் எண்ணில் அடங்கா.

இயேசு கிறிஸ்துவின் அற்புத வாழ்க்கையைச் சுமந்து நிற்கும் புதிய ஏற்பாட்டின் முதல் பக்கமே அவரது வம்ச வரலாற்றை வரிசை தவறாமல் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

இயேசு கிறிஸ்து தாமே உலக வரலாற்றைக் கிறிஸ்துவுக்கு முன் என்றும், கிறிஸ்துவுக்குப் பின் என்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்து, ஒருபோதும் அணையாத ஒளிவிளக்காய்த் திகழ்கின்றார்.

நாம் இன்று நமது இல்லங்களிலும், அலுவலகங்களிலும் பயன்படுத்தும் நாட்காட்டியும் (Calander) அவரது பிறப்பிற்கோர் ஆதாரமாகவே அமைந்துள்ளது.

அருள்நாதர் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை, அவர் வாழ்ந்த அதே நூற்றாண்டைச் சார்ந்தவர்களும், அவரோடு நெருங்கிப் பழகியவர்களுமான அவருடைய சீடர்களும், சுவிசேஷகர்களுமே எழுதி உலகிற்கு அளித்துள்ளனர். அவரைப் பற்றி விளக்கமாய்க் கூறும் புதிய ஏற்பாட்டிற்கு (New Testament) முக்கிய அடிப்படையாய் நமது கரங்களிலிருக்கும் மூலப்பிரதிகள் 5000-க்கும் அதிகமானவை. இவை மூல மொழியான கிரேக்க மொழியில் எழுதப்பட்டவை. நமக்குக் கிடைக்கப்பட்ட இப்பிரதிகள் கி.பி.2-ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இருந்து எழுதப்பட்டவை.

மேற்கூறிய மூலப்பிரதிகளைத் தவிர ஆயிரக்கணக்கான பழமை மிக்க பல மொழித் திருப்புதல் பிரதிகளும் (Ancient versions) கி.பி.1-ஆம் நூற்றாண்டிலும் அதற்குச் சற்று பின்னரும் வாழ்ந்த இக்னாசியஸ், பபியாஸ், பர்னபாஸ், டாட்டியன், ஜஸ்டின் மார்ட்டியர், இரானியஸ், யூசிபியஸ், ஆரிஜன் போன்ற பல திருச்சபைப் பிதாக்கள் இயேசுவைப் பற்றியும் திருச்சபையைப் பற்றியும் எழுதிய ஆதாரக் குறிப்புகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இஸ்ரேல் நாட்டில் ஒவ்வொரு நாளிலும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பார்த்துப் பரவசமடையும் இயேசு நாதரின் திறக்கப்பட்ட கல்லறையும், அவரது சரித்திரம் உண்மையானதென்பதற்கொரு சாட்சியாய் இருக்கிறது.

மேலும் ஆரம்ப நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்த புற மதத்தைச் சார்ந்த வரலாற்று ஆசிரியர்களும், கிறிஸ்து மார்க்கத்திற்கு எதிராக எழுந்த தேசத் தலைவர்களும் கூட இயேசு நாதரின் வாழ்க்கைச் சரித்திரம் மெய்யென்பதற்குரிய ஆதாரங்கள் பலவற்றைத் தந்துள்ளனர், அவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.

1.பிளினி (Pliny):
இவர் பிதினியா நாட்டின் (சின்ன ஆசியா) அதிபர். இவர் கி.பி.110-ல் டிராஜன் (Trajan) மன்னனுக்கு எழுதிய கடிதத்தில், கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கும் பொருட்டுத் தாம் கையாடிய கொடுஞ்செயல்களை விளக்கி எழுதியுள்ளார். (Colin Chapman எழுதிய Christianity on Trial, பக்கம் 422,423)

2.டாசிட்டஸ் (Tacitus):
இவர் ரோம வரலாற்று ஆசிரியர். இவர் கி.பி.115-ஆம் ஆண்டில் தாம் எழுதிய வரலாற்று நூலில் (Annals), நீரோ மன்னன் கிறிஸ்தவர்களை கொன்று குவித்ததைக் குறித்து தெளிவாக எழுதியுள்ளார். மேலும், கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களே கிறிஸ்தவர்களென்றும், டைபீரியஸ் மன்னனின் ஆட்சியில், பொந்திப் பிலாத்து என்னும் ஆளுநரால் கிறிஸ்து கொலை செய்யப்பட்டார் என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார். Christus, from whom their (Charistians`) name is derived was executed at the hands of the Procurator Pontius Pilate in the reign of Tiberius" (Christianity on Trial பக்கம் 423,424)

3.சூட்டோனியஸ் (Suetonius):
இவர் ஒரு ரோம சரித்திர ஆசிரியர். கி.பி.120-ஆம் ஆண்டில் தாம் எழுதிய “கிளாடியஸ் மன்னனின் வாழ்க்கை வரலாறு” என்னும் நூலில், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய கிறிஸ்தவர்கள் கிளாடியஸ் மன்னரால் ஏன் ரோமாபுரியிலிருந்து நாடுகடத்தப்பட்டனர் என்பதற்குரிய விளக்கம் அளித்துள்ளார். (Christianity on Trial, பக்கம் 424)

4.ஜோசபஸ் (Josephus):
இவர் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த யூத வரலாற்று ஆசிரியர். இவர் கி.பி.93 ஆம் ஆண்டில், “யூதரின் தொன்மை” (The Antiquities of the Jews) என்னும் நூலில், இயேசு நாதர் ஞானமிக்கவர் என்றும் அற்புதங்கள் பல புரிந்தார் என்றும், மக்களுக்குப் பல போதனைகள் அளித்தார் என்றும், பல புறமதத்தவரையும், யூதரையும் தம்பால் இழுத்துக்கொண்டார் என்றும், அவரைப் பிலாத்து சிலுவை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தார் என்றும், அதன்பின் அவர் மூன்றாம் நாளில் தம்மிடம் அன்பு செலுத்தியவருக்கு உயிருடன் காட்சியளித்தார் என்றும் எழுதியுள்ளார். (Christianity on Trial,பக்கம் 424,425)




யாரிந்த லூவோலேஸ்? (Lew Wallace)
இவர் இங்கர்சால் என்னும் நாத்திகரின் உற்ற நண்பர். ஆளுநராய் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் இயேசு கிறிஸ்துஎன்று ஒருவர் வாழ்ந்ததே இல்லை என்று எழுதத் துணிந்தார். அதற்கு போதுமான ஆதாரங்கள் திரட்ட தமது செல்வத்தில் பெரும்பகுதியைச் செலவளித்தார். புத்தகத்தை எழுதத் தொடங்கினார். ஆனால் ஒரு சில வரிகளுக்கு மேல் அவரால் எழுதவே
முடியவில்லை.ஏனெனில் அவருக்கு கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே இயேசு கிறிஸ்து பிறந்தது,வாழ்ந்த்து அற்புதங்கள் புரிந்தது, சிலுவையில் மாண்டது, மூன்றாம் நாள் உயிரோடெழுந்தது ஆகிய அனைத்தும் உண்மையென்றே உரைத்தன. இவர் மனந்திரும்பி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனை மீட்க மனிதனாய்ப் பிறந்து, பாவமற்றப் புனிதராய் வாழ்ந்தார் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்ட “பென்ஹர்” (Ben Hur) என்னும் சிறந்த நூலை இயற்றினார்.

யாரிந்த கில்பர்ட்? (Gilbert)
இவர் மேல்நாட்டைச் சார்ந்த ஒரு வேதவிரோதி. லார்ட் லிட்டில் டன் (1709-1773) (Lord Little Ton) என்பவரோடு சேர்ந்து இவர் இயேசு கிறிஸ்து உயிரோடெழுந்தது ஒரு கட்டுக்கதை என்றார். தம்மால் அதை நிரூபித்துகாட்ட முடியும் என்று நீதி மன்றத்தில் சவால் விடுத்தார். எனவே நீதிமன்றம் அதற்கென நாளொன்றை தீர்மானித்தது. குறிப்பிட்ட அந்த நாள் வந்தபோது இவ்விருவரும் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்டனர். அங்கே அவர்கள், தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்கள் அனைத்தையும் ஆராய்ந்ததின் விளைவாகத் தாங்கள் இயேசு கிறிஸ்து உயிரோடெழும்பியது உண்மை என்று கண்டுகொண்டதாக அறிக்கையிட்டனர்.

தீர்க்கதரிசிகள்:
இவர்கள் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கும் பல நூற்றாண்டுகளுக்க் முன்னரே, அவர் யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் சிற்றூரில் ஒரு கன்னியின் வயிற்றில் பரிசுத்த ஆவியினால் உற்பவித்துத் தோன்றுவார் என்று மொழிந்தனர்.மேலும் அவரது தூயவாழ்க்கை, பாடு, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றைக் குறித்தும் தீர்க்கதரிசிகள் முன்னுரைத்தவற்றை வேதத்தில் காணலாம். அவையாவும் ஆண்டவரது அற்புத வாழ்க்கையில் அப்படியே நிறைவேறின.

எனக்கு மிகவும் பிரியமானவர்களே,
இந்த இயேசு கிறிஸ்துவைப் போல் வேறொருவரை நாம் இந்த உலகில் காணமுடியுமா? இவரே உயிர்த்தெழுந்த உண்மையான தெய்வம்.

Monday, January 16, 2012

Tuesday, April 19, 2011

இதுவல்லவா உன் வாழ்க்கை!

Title

Page 2

Page 3

Page 4

Page 5

Page 6

Page 7

Page 8

Page 9

Page 10

Page 11

Page 12

Page 13

Page 14

Page 15

Page 16

Page 17

Page 18

Page 19

Page 20

Page 21

Page 22

Page 23
"இதுவல்லவா உன் வாழ்க்கை!" "This Was Your Life" tract in tamil by Chick

Wednesday, March 30, 2011

இருதயத்தில் சமாதானம்

உம்மை உறுதியாய்ப் பற்றி கொண்ட மனதையுடையவன், உம்மையே நம்பியிருக்கிறபடியால் நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக் கொள்வீர் (ஏசா.26:3) சமாதானத்தை தர வல்லமையுள்ளவர் ஒருவரே. அவர்தான் சமாதான பிரபுவாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்கு கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம், கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக. (யோவா.14:27) உலகத்தில் எங்கு பார்த்தாலும் சமாதானம் இல்லை. வியாதிகள், வறுமைகள், கொலைகள், கொள்ளைகள் யாவையும் பார்க்கும் போது மனிதர்களாகிய நமக்கு சமாதானம் இல்லை. என்றைக்கு எப்பொழுது யாருக்கு எது நடக்கும் என்ற கேள்விக்குறியோடு மனுக்குலம் வாழ்கிறது. இவைகள் எல்லாவற்றிலும் சமாதானத்தைக் கொடுக்கும் தேவன் நமக்கு உண்டு. எந்த சூழ்நிலையிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவரை உறுதியாய் பற்றிக் கொண்டவர்கள் பூரண சமாதானத்துடன் வாழ முடியும். அருமையான மகனே, மகளே உனக்கு சமாதானம் இல்லையா, வாழ்க்கையில் கைவிடப்பட்டவளாக கலங்குகிறாயா, பிள்ளைகள் உன்னை கைவிட்டுவிட்டனரா, பள்ளி பாடங்களை படிக்கும்போது சரியாக படிக்க முடியவில்லையே என கலங்குகிறாயா வீட்டுக்குப் போனாலும் நிம்மதி இல்லை, வேலையிலும் நிம்மதி இல்லை, பிள்ளைகளின் வியாதி, வியாபாரத்தில் தோல்வி, எவ்வளவோ ஆண்டு ஆகியும் குழந்தை செல்வம் இல்லை என்று ஏங்குகிறாய் அல்லவா, இதினிமித்தம் உனக்குள் ஒரு கலக்கம் ஏற்படுகிறது அல்லவா, அந்த கலக்கங்களை மாற்றி இயேசு கிறிஸ்து உனக்கு சமாதானத்தை தருவார். உனக்கு சமாதானத்தைத் தருவதற்காகவே கல்வாரி சிலுவையில் தன்னுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தினார். இன்று மகனே, மகளே நான் உன்னை நேசிக்கிறேன், உன்னை தாயின் வயிற்றிலே நீ உருவாகும் போதே உன்னை எனக்கென்று வேறு பிரித்தேன். நீ என்னுடையவன்(யவள்) எனவே இயேசு கிறிஸ்துவாகிய என்னை உன் இருதயத்தில் ஏற்றுக்கொள். நீ என்னை நம்பு என்று அழைக்கிறார். உன்னுடைய கலக்கத்தை மாற்றுவார்.
அருமையான தேவனுடைய பிள்ளையே கர்த்தரிடம் உன் பாவத்தை அறிக்கை செய்து விட்டுவிடு. இனி பாவம் செய்யாதே. பாவம் செய்யும் போது நமக்கு அந்த பாவம் தற்பொழுது சிறிது சமாதானம் இருப்பது போல் காணப்படும். ஆனால் சிறிது நேரத்தில் அந்த பாவம் நமக்கு சமாதானத்தையும், சந்தோஷத்தையும் தருவதில்லை. அதினிமித்தம் நம் இருதயம் கிலேசப்படும், எனவே கர்த்தராகிய இயேசுவை விசுவாசி, நீ எப்படிபட்ட வனாகவும்(வளாகவும்) காணப்பட்டாலும் கர்த்தராகிய இயேசு உன்னை நேசிக்கிறார். உனக்கு சமாதானத்தை தருவார். இன்றே கர்த்தரிடம் வருவாயாகில் கீழே கொடுக்கப்பட்ட ஜெபத்தை விசுவாசத்தோடு இயேசுவிடம் சொல்லி ஜெபி.

ஜெபம் :
அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே நான் (உங்கள் பெயரை சொல்லவும்) வந்திருக்கிறேன். என்னுடைய எல்லா பாவங்களையும் மன்னியும். என்னை ஏற்றுக் கொள்ளும். இன்று முதல் நான் உம்முடைய பிள்ளை, எனக்கு சமாதானத்தை தாரும், நான் கையிட்டுச் செய்கிற எல்லாவற்றையும் ஆசீர்வதியும், வியாதிகளை மாற்றும், தோல்விகளை ஜெயமாய் மாற்றும், என் பிள்ளைகளுக்கு ஞானம் தாரும், சமாதானத்தின் தேவன் என்னை ஆட்கொண்டு வழி நடத்தும்படி ஜெபிக்கிறேன். ஆமென்.

Tuesday, March 22, 2011

நீ எங்கே செல்கிறாய்?


இந்த உலகமாகிய யாத்திரை பயணத்தில் நாம் எங்கோ ஓரிடத்திற்கு சென்று கொண்டு இருக்கிறோம். எனவே தான் நாம் துரிதமாக எல்லாக் காரியங்களையும் செய்கிறோம். உயிர் நம் உடலில் இருக்கும் வரை அங்கும், இங்குமாக செல்வோம். ஆனால் நம் (உயிர்) ஆவி தன்னை தந்த தேவனிடத்திற்கு போகும் போது நாம் எங்கே செல்வோம், மோட்சமா? நரகமா? நிச்சயமாக இந்த உலகம் நாம் நினைக்கிறபடி மோட்சமோ, நரகமோ கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலக வாழ்க்கையில் கஷ்டத்தை அனுபவிக்கும் போது நாம் நரகத்தில் இருக்கிறோம் என்றும், சந்தோஷத்தை அனுபவிக்கும்போது மோட்சத்தில் இருக்கிறோம் என்றும் சிந்தனை செய்வது தவறு.மோட்சம்,நரகம் என்று ஒன்று உண்டு.

வானத்தையும், பூமியையும் உண்டாக்கின சர்வ வல்லமையுள்ள கர்த்தர் மீண்டுமாக இந்த உலகத்தில் வந்து துன்மார்க்கனையும், நீதிமான்களையும் வெவ்வேறாக பிரித்து அவர், அவர்கள் செல்ல வேண்டிய வழியை அவர்களுக்கு தெரிவிப்பார். இது தான் உண்மை. இந்த பூமியிலே நாம் இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமற்ற பாவங்களை செய்து வாழ்ந்தோமானால் நாம் துன்மார்க்கர். இயேசு கிறிஸ்து மரித்தோரிடத்திலிருந்து எழுந்தார் என்றும், மீண்டுமாக நம்மை சேர்க்க வருவார் என்றும், என்னுடைய பாவங்களுக்காகத்தான் கல்வாரி சிலுவையில் மரித்தார் என்றும் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறவனே நீதிமான்.

நரகம் எப்படி இருக்கும் என்றால், அங்கே புழு சாகாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும் (மாற்.9:44) புழுக்களே படுக்கை பூச்சிகளே போர்வை, நரகம் பாதாளம், இருள், நரகத்தில் அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கிறதான புறம்பான இருள். மோட்சத்துக்கும், நரகத்திற்கும் நடுவே பெரும் பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கும். நரகம் பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினி. ஆனால் மோட்சமோ தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம் (11 கொரி.5:1) பரலோகத்திற்கு வெளிச்சங்கொடுக்க சூரியனும், சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை. தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது. ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. நீதிமான்கள் அதன் வெளிச்சத்திலே நடப்பார்கள்.

எனவே அருமையான சகோதரனே, சகோதரியே இன்றே சிந்தனை செய்யுங்கள். நாம் செல்லும் வழி எது, நம்மை அறியாமலே நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோமா? மோட்சத்திற்கு செல்ல நாம் செய்ய வேண்டியது, தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வு அடையமாட்டான், அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் (நீதி.28:13) உன்னுடைய பாவங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் சொல்லி விடுதலையை பெற்றுக் கொள். மீண்டும் பாவம் செய்யாதபடி உன்னைக் காத்துக் கொள். இப்படி செய்வதை விட்டுவிட்டு தேவன் இல்லை, மோட்சம் இல்லை, நரகம் இல்லை, நியாயத்தீர்ப்பு இல்லை என்றும் சொல்லி உன்னை தேற்றிக் கொள்வாயானால் என்றென்றைக்கும் அழியாத நித்திய, நித்தியமான நரகத்துக்கு உரியவர்களாகவே மாறிவிடுவோம். இதுவே இரட்சண்ய நாள், இன்றைக்கு மீட்பை பெற்றுக்கொண்டு பரம சந்தோஷத்தை அடைவீர்களாக.
Interactive Picture

Tuesday, June 27, 2006

*பாவ மன்னிப்பு*

தீயணைக்கும் (இஞ்சின்) வண்டிவரும் மணியோசையைக் கேட்டு மகிழ்ச்சியுடன் தன் படுக்கையிலிருந்தது எழுந்தான் பென்னி! கால்களை இழந்து ஊன்றுகோலின் துணையுடன் நடந்துவந்த பென்னி,மகிழ்ச்சி உந்த,பக்கத்து ஜன்னலைத் திறந்து பார்வையை வீதியில் உலவ விட்டான்!

அவன் இருந்தது,அந்த வீட்டின் நான்காவது மாடி பகுதி!

ஜன்னலைத் திறந்தவன் திடுகிட்டான்.மூன்றாம் மாடி வரை தன் பசியைத் தீர்த்துவந்த தீப்பிழம்புகள்,நான்காம் மாடியையும் முற்றுகையிட வேகமாய் வந்து கொண்டிருந்தது.!
செய்வதறியாது திகைத்த பென்னி, கூக்குரலிட்டான்!புகைமண்டலம்,பின் புறச்சன்னல் வழியாக,அவன் அறைக்குள்ளும் நுழைந்தது.அவனால் கம்பு ஊன்றி கீழே இறங்கமுடியாத பரிதாப நிலை!

"உதவி செய்யுங்கள்" "காப்பாற்றுங்கள்" என்று அபயக்குரலிட்டான்.

கீழே,தீயணைக்கும் வண்டியிலிருந்து ஏணியொன்று,மேலுயர்த்தப்பட்டது.அதில் ஏறிசென்ற ஒருவன்,"தம்பி! உடனே கீழே குதித்துவிடு;கீழே சில வீரர்கள் உன்னை காப்பாற்ற தங்கள் கைகளில் அகன்ற வலையை விரித்து காத்து நிற்பதை பார்" என்றான்.

"ஐயோ,அவர்களால் என்னைப் பிடித்துக்கொள்ள முடியாது! வேறு வழியில் உதவுங்கள் என்று மேலும் கூக்குரலிட்டான் பென்னி.

அவனிருந்த அறையின் பின்புற சன்னல் தீக்கிரையானது!

"தம்பி!பயப்படாதே! வலையும் பெரிது,அதை பிடித்து நிற்கும் எம் வீரர்களின் ஊக்கமும் பெரிதே!ஆகவே,நம்பிக்கையுடன் கீழே குதி!என்று மீண்டும் ஏணியில் நிற்பவன் கூறினான்.

பென்னி பின்னால் பார்க்கிறான்! இன்னும் சிறிது நேரத்தில் அவன் தீயில் மடிவது உறுதி!ஆகவே அவன் தன் வலிமையெல்லாம் கூட்டி கீழே குதித்தான்!

இறுதியில் தீயணைக்கும் படையினரின் வலையில் அவன் விழுந்து காப்பாற்றப்பட்டான்!

நீங்களும் இன்னும் எவ்வளவு காலம் அபாயக் கட்டத்திலேயே தரித்திருக்கப் போகிறீர்கள்? படைத்த இறைவனுக்கு முன்பாக நாம் பாவம் செய்து மாமிசத்தில் பலவீனப்பட்டுள்ளோம்.நாம் பாவத் தீயிலிருந்து காப்பாற்றப்பட வேண்டாமா!?.....

உன்னால் உன்னைக் காப்பாற்றக் கூடுமா? நிச்சயமாக முடியாது! ஏனெனில் நீயும் பென்னியைப்போலவே காணப்படுகிறாய். ஆகவே உன்னை நீயே காப்பாற்ற முடியாது.இயேசு கிறிஸ்துவால் மட்டுமே உன்னைக் காப்பாற்ற முடியும்!

இயேசு கிறிஸ்து உனக்காக பாவநிவிர்த்திப் பலியானார்! அவர் முற்று முடிய உனக்காக தன்னையே அளித்து,உன் பாவக் கடனைத் தீர்த்தார்.

நீ செய்ய வேண்டியதென்ன? அவரை விசுவாசி.பென்னி செய்ததைப்போல்,எந்த வித துணையும் அற்ற நிலையில்,அவன் வலையில் குதித்து நிலையான வாழ்வினை மீண்டும் பெற்றது போல் நீயும் உன்னைக் காப்பாற்ற முயற்சி செய்.கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவால் உன்னைக் காப்பாற்ற முடியும் என நம்பி,அவரிடம் பாவ மன்னிப்பை வேண்டி பெற்றுக்கொள்.

அப்போஸ்தலர்:16:31
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்