இந்த கடைசி காலத்தில் தமிழ் திரைப்பட உலகின் மத்தியிலும் கர்த்தர் பெரிதான காரியங்களை செய்துவருகிறார். கர்த்தருக்கே மகிமை. கிறிஸ்துவின் வல்லமையை தமிழ் திரைஉலகினர் ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டு அனைவரும் அவர் அன்பிற்குள் வர நாமெல்லாரும் ஜெபிக்க வேண்டும். ஒருவரையும் புறம்பே தள்ளுகிற தேவன் நம் தேவன் அல்லவே.
http://www.youtube.com/watch?v=o7wS85Fp_to
http://www.youtube.com/watch?v=VODfw5RB1lA
http://www.youtube.com/watch?v=oPJtfu9U_1I
மத்தேயு 20:15 என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா.
யோவான் 6:37 பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.
Wednesday, August 01, 2012
தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
Labels:
Bro.Mohan.C.Lazarus,
Interview,
Tamil Nadu,
Testimony
Monday, July 23, 2012
திருமண அழைப்பிதழ்
Labels:
Bible Prophecy,
Bible Study,
End Time News,
Jesus,
Pictures,
Rapture,
Revelation,
Second Coming
Thursday, July 19, 2012
இயேசு இந்தியா வந்தாரா? - குறும்பதில்கள்
கேள்வி: இயேசு தன்னுடைய கடைசி காலத்தில் இந்தியாவிற்கு வந்ததாகவும் சிலுவையில் அறையப்பட்டவர் அவர் அல்லவென்றும், இயேசுவின் கல்லறை காஷ்மீரில் இருக்கிறதென்றும் சிலர் சொல்கிறார்களே? அதுபற்றி உங்கள் விளக்கம் என்ன?
பதில்: இப்படியொரு கருத்து பல காலமாக சொல்லப்பட்டு வருவது உண்மை தான். இயேசு இந்தியாவிற்கு வந்தார். காஷ்மீரில் போய் சமாதியாகி விட்டார் என்று சொல்பவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதாரமாக கொள்வது பர்னபாவின் சுவிசேஷம் என்ற நூலைத்தான் (Gospel of Barnabas). இந்த பர்னபாவின் சுவிசேஷம் இயேசுவின் மரணம் பற்றி என்ன சொல்கிறது? ரோமவீரர்கள் இயேசுவைக்கைது செய்ய அனுப்பப்பட்டபோது கர்த்தர் குறுக்கிட்டு தேவ தூதர்களை அனுப்பி இயேசுவைத் தூக்கிக் கொண்டு வரச் சொல்லிவிடுகிறார். இயேசுவைக் கைது செய்ய வந்த வீரர்கள் இயேசுவை உருவத்தில் ஒத்திருந்த யூதாஸை இயேசு என்று கருதி கைது செய்து கொண்டு போய்விடுகிறார்கள். யூதாஸ், தான் அவனில்லை என்று எத்தனையோ மன்றாடியும் பாவம் அவனை சிலுவையிலறைந்து விடுகிறார்கள். நீர் அழைத்தீர் என்பதினாலே தானே ஊழியத்திற்கே வந்தேன். கடைசியில் இப்படி ஏன் கைவிட்டீர்' என்று கதறியதாக சொல்லப்பட்டுள்ளது. (பாவம் யூதாஸ்).சரி. தேவதூதர்களால் தூக்கிச் செல்லப்பட்ட இயேசு என்னவானாராம்? அவரை அவர்கள் பரலோகத்திற்கு கொண்டு செல்லாமல் எருசலேமுக்கு வெளியிலிருந்த வனாந்திரம் ஒன்றில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்களாம். தனக்கு விதிக்கப்பட்ட சிலுவை தண்டனை யூதாஸிடத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டதை அறிந்து கொண்ட இயேசு இரகசியமாக அவருடைய தாயாரையும், சீடர்களையும் காண வந்தாராம். அதைத்தான் அவர்கள் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டதாக சொன்னார்களாம். தொடர்ந்து தான் எருசலேமில் தங்க முடியாது என்ற முடிவுக்கு வந்த இயேசு அங்குமிங்கும் சுற்றித்திரிந்து கடைசியில் காஷ்மீருக்கு வந்து சேர்ந்துவிட்டாராம். அங்கே அந்த நாட்களில் தீவிரவாதிகள் இல்லாததினால் அங்கேயே தொடர்ந்து தங்கிவிட்டு ஒரு கல்யாணத்தையும் பண்ணிக்கொண்டு குடும்பமாய் வாழ்ந்துவிட்டு கடைசியில் காஷ்மீரிலேயே மரித்தும் போய்விட்டாராம் என்று அள்ள அளவில்லாமல் கற்பனைகளை அள்ளித்தெளித்திருக்கிறது அந்த பர்னபாவின் சுவிசேஷத்தில்.
இதையொட்டி எழுதப்பட்ட புத்தகங்களுள் பேபர் கெய்சர் (Faber Kaiser) என்பவர் 1977ல் வெளியிட்ட "Jesus Christ Died in Kashmir' என்ற புத்தகத்தில் ""இயேசு உண்மையில் மரிக்கவில்லை. அவர் கோமா நிலையிலிருந்தார். அவர் மரித்துவிட்டார் என்று தவறாக கருதி அவரை கல்லறையில் வைத்து விட்டார்கள். இரண்டுநாள் மயக்கநிலையிலிருந்து விட்டு பின்னர் விழிப்புத்தட்ட, இயேசு எழுந்து பார்த்துவிட்டு கல்லறையின் கல்லை தாமாகவே புரட்டி வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி காஷ்மீருக்கு வந்துவிட்டார். அவர் கல்லறை இன்னமும் அங்கே இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். அப்படியா கல்லறையை காட்டுங்கள் என்று கேட்டால் மலைகளுக்கிடையில் இருக்கும் ஒரு நீண்ட கல்லறையை காட்டுகிறார். கொஞ்சம் நெருங்கிப் பார்க்கலாம் என்றால் தொந்தரவு பண்ணாதீர்கள் இயேசு தூங்கட்டும் என்கிறார். இவர்தவிர, பஞ்சாபில் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிர்சா குலாம் அகமது (Mirza Ghulam Ahmad) என்கிற இஸ்லாமிய அறிஞர் இயேசு இந்தியாவிற்கு வந்தார் என்று சொல்லுகிறார். விளக்கம் கேட்டால் மத்திய பஞ்சாபில் இயங்கிவந்த பழைய ஊழிய நிறுவனம் ஒன்றை காட்டுகிறார். விளக்கம் புரியாமல் நீங்கள் அவரைப் பார்த்தீர்களேயானால் உடனே ஆமாம் தம்பி... இயேசு இந்தியா வந்திருந்தபோது அவர் தான் இதை ஆரம்பித்து நடத்திக்கொண்டிருந்தார் என்பார். சரி, இவைகளுக்கான விளக்கம்தான் என்ன? பர்னபா ஏன் அப்படியொரு சுவிசேஷம் எழுதினார்? காஷ்மீரில் இவர்கள் காட்டும் கல்லறை யாருடையது? என்ற கேள்விகளுக்கு கொஞ்சம் பதில் பார்ப்போம்.
முதலில் பர்னபாவின் சுவிசேஷம். இது நீங்கள் நினைக்கிற மாதிரி பவுலுடன் ஊழியம் செய்த பர்னபா எழுதியதல்ல. வேறுயாரோ ஒரு டுபாக்கூர் பர்னபா. இது எழுதப்பட்ட காலம் கி.பி. 1349ல். அதாவது இயேசுவின் மரணத்திற்கு பின்பாக ஏறத்தாழ 1200 ஆண்டுகளுக்கு பிறகு. அப்படியானால் இது வேதத்தில் காட்டப்படும் பர்னபாவினுடையது அல்ல. எனவே இது நம்பகமானது அல்ல. இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு மரணம் பற்றி அவருடனே இருந்தவர்கள் அல்லது அவர்காலத்தில் வாழ்ந்தவர்களின் சாட்சிகளைத்தான் நம்பகமானதாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இயேசுவைப் பற்றி அவருடனே வாழ்ந்த அல்லது அவர்காலத்திலேயே வாழ்ந்த மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் போன்றவர்கள் எழுதிவைத்த சுவிசேஷங்கள் தான் நம்பகமானவை. காரணம், இவையாவும் முதல் நூற்றாண்டிலேயே அதாவது இயேசுவின் நினைவுகள் எல்லார் மனதிலும் பசுமையாக இருக்கும்போதே எழுதப்பட்டவை. மாத்திரமல்ல, இவைகளில் காணப்படும் நிகழ்ச்சிகளுக்கும், இயேசுவின் சிலுவை மரணத்திற்கும் ரோம சாம்ராஜ்யத்தின் ஆவணங்கள் மற்றும் குறிப்பேடுகளில் அக்காலத்தில் ஆண்ட ஆளுநர்களின் கையெழுத்துடன் ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பர்னபாவின் சுவிசேஷம் எழுதின பர்னபா யார் என்பதற்கே ஆதாரங்கள் இல்லை. இரண்டாவது மிர்சா குலாம் அகமதுவின் கூற்று பற்றியது. இந்த மீர்சா குலாம் துவக்கத்தில் இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்து கடைசியில் தன்னை இறுதிக்கால நபி என்று பிரகடனம் செய்து கொண்டார். பைபிள் மாத்திரமல்ல. குர் ஆனைப்பற்றியும் நிறைய தாறுமாறான கருத்துக்களை சொல்லியுள்ளார். இவரை இதனால் ஒரு கூட்டம் ஜனங்கள் தவிர யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்பற்றியவர்கள் அகமதியர்கள் (Ahmadiyya) எனப்பட்டனர். எனவே, இவரது சாட்சியும் நம்பகமானதல்ல. கெய்சன் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல இயேசு சரியாக மரிக்கவில்லை. கோமாவில் கிடந்தார் என்பதெல்லாம் கடைந்தெடுத்த கற்பனை ரகங்கள். ரோம வீரர்கள் சிலுவை தண்டனை நிறைவேற்றுவதில் மாஸ்டர் பட்டம் பெற்றவர்கள். ஒரு நாளைக்கு இது மாதிரி பலபேரை சிலுவையில் அறைந்து கொல்லும் புரபஷனல் கொலைகாரர்கள். அவர்கள் இயேசு மரித்ததை உறுதி செய்யத்தான் அவர் விலாவிலே குத்தினார்கள். சரியாக மரிக்கவில்லையென்றால் உடனடியாக கண்டுபிடித்துவிடுவார்கள். அதுவும் தவிர இயேசு கல்லறையில் வைக்கப்பட்ட போது இயேசுவின் சரீரத்தை அவர் சீடர்கள் ஒளித்து வைத்துவிட்டு அவர் உயிர்த்தெழுந்தார் என்று சொல்லிடுவார்கள் என்று மனுச்செய்துதான் யூதர்கள் அவர்கள் கல்லறையை காவல் செய்ய உத்தரவு பெற்றனர். அதன்படி ரோம அரசாங்கம் அவர் கல்லறையை காவல் செய்ய வீரர்களை நியமித்திருந்தது. இயேசு கோமா தெளிந்து எழுந்து தன்னிஷ்டப்படியெல்லாம் இந்த வீரர்களை தாண்டி வெளியே போய்விட முடியாது. அதுவும் தவிர, கோமாவில் கிடந்த ஒரு மனிதர் எழுந்தவுடன் அவர் நடக்க முடியாது. அப்படியே நடக்கவேண்டுமானாலும் நாலைந்து பேரின் உதவியுடன் தான் செய்ய முடியும். இங்கே கெய்சர் புத்தகத்தில் சிலுவையிலறையப்பட்டு கோமாவில் கிடந்த இயேசு எழுந்து பார்த்து கல்லைத் தாமே புரட்டிப்போட்டு விட்டு (கல்லறைக்கல் என்பது பெரிய பாறை) ஹாயாக நடந்து போயிருப்பது தமிழ் சினிமாக்களில் கூட பார்க்க முடியாத கற்பனை ரகம். சரி. இவர் காட்டும் காஷ்மீர் கல்லறை பின்னே யாருடையது? முதலாம் நூற்றாண்டில் கிரேக்க, ரோமானிய உலகில் பெரும்புகழ் பெற்றிருந்தவர் அபோலநிபஸ் என்பவர். இவர் நம்மூர் சித்தர்கள் மாதிரி பல அமானுஷ்ய செயல்களை நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்ததாக சொல்லப்படுகிறது. பின்வந்த, நூற்றாண்டுகளில் ஏகப்பட்ட கால இடைவெளியில் மக்கள் இயேசுவையும் அகோ லிநிபஸையும் ஒன்று என்று ஜனங்கள் கருதியிருக்கலாம். எனவே காஷ்மீரில் கெய்சர் காட்டுவது இயேசுவின் கல்லறையல்ல. மாத்திரமல்ல. இயேசுவுக்கு எங்குமே கல்லறை இல்லை. அவர் மரித்தபோது அவரை வைத்திருந்த இடம் தான் இருக்கிறது. கல்லறை என்றால் அதனுள்ளே மரித்தவர் இருக்கவேண்டும். இயேசு உயிர்த்ததினால் அவர் அங்கே இல்லை. பின்னர் இதுமாதிரி கதைகள் ஏன் கிளப்பிவிடப்படுகின்றன? இயேசுவின் மரணத்தை ஒத்துக் கொள்ள முடியாத சிலர் அவர் மீது வைத்திருந்த அழுத்தமான நம்பிக்கை காரணமாகத்தான் இறைவன் மனிதனாக அவதரித்து இவ்வளவு மோசமான மரணத்தை அடைந்திருக்க முடியாது என்று கருதி இதுபோல கற்பனை செய்துகொண்டு புத்தகம் எழுதிவிடுகிறார்கள்.(இயேசுவின் தொனி மார்ச் 08)
அப்போஸ்தலனாகிய யோவானை தவிர , மற்ற 12 அப்போஸ்தலர்களும், பவுல், மற்றும் யூதாசுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியாஸ் உட்பட அனைவருமே இரத்த சாட்சிகளாக கொலை செய்யப்பட்டு கிறிஸ்துவுக்காக மரித்தார்கள். ஒரு பொய்க்காக ஏன் இவர்கள் அனைவரும் தங்கள் உயிரை அப்படி மாய்த்திருக்க வேண்டும்? சிந்தித்துப் பாருங்கள். உண்மையில், எந்த புத்தகமும் இந்த அளவு ஆழமாய் ஆராயப்பட்டதில்லை. இந்த 2000 ஆண்டுகளில் பைபிளில் குறைகண்டு அதை எப்படியாவது அழிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஏராளம்.ஆனால் வேதாகமமோ இன்னமும் இருக்கின்றது. அநேகருடைய வாழ்க்கையை இன்னும் மாற்றிய படி இருக்கின்றது. இயேசு கிறிஸ்துவை பற்றிய நற்செய்தியை உலகுக்கு பறைசாற்றியபடி உள்ளது.
ஏசாயா:40:8. புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்
பதில்: இப்படியொரு கருத்து பல காலமாக சொல்லப்பட்டு வருவது உண்மை தான். இயேசு இந்தியாவிற்கு வந்தார். காஷ்மீரில் போய் சமாதியாகி விட்டார் என்று சொல்பவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதாரமாக கொள்வது பர்னபாவின் சுவிசேஷம் என்ற நூலைத்தான் (Gospel of Barnabas). இந்த பர்னபாவின் சுவிசேஷம் இயேசுவின் மரணம் பற்றி என்ன சொல்கிறது? ரோமவீரர்கள் இயேசுவைக்கைது செய்ய அனுப்பப்பட்டபோது கர்த்தர் குறுக்கிட்டு தேவ தூதர்களை அனுப்பி இயேசுவைத் தூக்கிக் கொண்டு வரச் சொல்லிவிடுகிறார். இயேசுவைக் கைது செய்ய வந்த வீரர்கள் இயேசுவை உருவத்தில் ஒத்திருந்த யூதாஸை இயேசு என்று கருதி கைது செய்து கொண்டு போய்விடுகிறார்கள். யூதாஸ், தான் அவனில்லை என்று எத்தனையோ மன்றாடியும் பாவம் அவனை சிலுவையிலறைந்து விடுகிறார்கள். நீர் அழைத்தீர் என்பதினாலே தானே ஊழியத்திற்கே வந்தேன். கடைசியில் இப்படி ஏன் கைவிட்டீர்' என்று கதறியதாக சொல்லப்பட்டுள்ளது. (பாவம் யூதாஸ்).சரி. தேவதூதர்களால் தூக்கிச் செல்லப்பட்ட இயேசு என்னவானாராம்? அவரை அவர்கள் பரலோகத்திற்கு கொண்டு செல்லாமல் எருசலேமுக்கு வெளியிலிருந்த வனாந்திரம் ஒன்றில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்களாம். தனக்கு விதிக்கப்பட்ட சிலுவை தண்டனை யூதாஸிடத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டதை அறிந்து கொண்ட இயேசு இரகசியமாக அவருடைய தாயாரையும், சீடர்களையும் காண வந்தாராம். அதைத்தான் அவர்கள் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டதாக சொன்னார்களாம். தொடர்ந்து தான் எருசலேமில் தங்க முடியாது என்ற முடிவுக்கு வந்த இயேசு அங்குமிங்கும் சுற்றித்திரிந்து கடைசியில் காஷ்மீருக்கு வந்து சேர்ந்துவிட்டாராம். அங்கே அந்த நாட்களில் தீவிரவாதிகள் இல்லாததினால் அங்கேயே தொடர்ந்து தங்கிவிட்டு ஒரு கல்யாணத்தையும் பண்ணிக்கொண்டு குடும்பமாய் வாழ்ந்துவிட்டு கடைசியில் காஷ்மீரிலேயே மரித்தும் போய்விட்டாராம் என்று அள்ள அளவில்லாமல் கற்பனைகளை அள்ளித்தெளித்திருக்கிறது அந்த பர்னபாவின் சுவிசேஷத்தில்.
இதையொட்டி எழுதப்பட்ட புத்தகங்களுள் பேபர் கெய்சர் (Faber Kaiser) என்பவர் 1977ல் வெளியிட்ட "Jesus Christ Died in Kashmir' என்ற புத்தகத்தில் ""இயேசு உண்மையில் மரிக்கவில்லை. அவர் கோமா நிலையிலிருந்தார். அவர் மரித்துவிட்டார் என்று தவறாக கருதி அவரை கல்லறையில் வைத்து விட்டார்கள். இரண்டுநாள் மயக்கநிலையிலிருந்து விட்டு பின்னர் விழிப்புத்தட்ட, இயேசு எழுந்து பார்த்துவிட்டு கல்லறையின் கல்லை தாமாகவே புரட்டி வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி காஷ்மீருக்கு வந்துவிட்டார். அவர் கல்லறை இன்னமும் அங்கே இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். அப்படியா கல்லறையை காட்டுங்கள் என்று கேட்டால் மலைகளுக்கிடையில் இருக்கும் ஒரு நீண்ட கல்லறையை காட்டுகிறார். கொஞ்சம் நெருங்கிப் பார்க்கலாம் என்றால் தொந்தரவு பண்ணாதீர்கள் இயேசு தூங்கட்டும் என்கிறார். இவர்தவிர, பஞ்சாபில் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிர்சா குலாம் அகமது (Mirza Ghulam Ahmad) என்கிற இஸ்லாமிய அறிஞர் இயேசு இந்தியாவிற்கு வந்தார் என்று சொல்லுகிறார். விளக்கம் கேட்டால் மத்திய பஞ்சாபில் இயங்கிவந்த பழைய ஊழிய நிறுவனம் ஒன்றை காட்டுகிறார். விளக்கம் புரியாமல் நீங்கள் அவரைப் பார்த்தீர்களேயானால் உடனே ஆமாம் தம்பி... இயேசு இந்தியா வந்திருந்தபோது அவர் தான் இதை ஆரம்பித்து நடத்திக்கொண்டிருந்தார் என்பார். சரி, இவைகளுக்கான விளக்கம்தான் என்ன? பர்னபா ஏன் அப்படியொரு சுவிசேஷம் எழுதினார்? காஷ்மீரில் இவர்கள் காட்டும் கல்லறை யாருடையது? என்ற கேள்விகளுக்கு கொஞ்சம் பதில் பார்ப்போம்.
முதலில் பர்னபாவின் சுவிசேஷம். இது நீங்கள் நினைக்கிற மாதிரி பவுலுடன் ஊழியம் செய்த பர்னபா எழுதியதல்ல. வேறுயாரோ ஒரு டுபாக்கூர் பர்னபா. இது எழுதப்பட்ட காலம் கி.பி. 1349ல். அதாவது இயேசுவின் மரணத்திற்கு பின்பாக ஏறத்தாழ 1200 ஆண்டுகளுக்கு பிறகு. அப்படியானால் இது வேதத்தில் காட்டப்படும் பர்னபாவினுடையது அல்ல. எனவே இது நம்பகமானது அல்ல. இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு மரணம் பற்றி அவருடனே இருந்தவர்கள் அல்லது அவர்காலத்தில் வாழ்ந்தவர்களின் சாட்சிகளைத்தான் நம்பகமானதாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இயேசுவைப் பற்றி அவருடனே வாழ்ந்த அல்லது அவர்காலத்திலேயே வாழ்ந்த மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் போன்றவர்கள் எழுதிவைத்த சுவிசேஷங்கள் தான் நம்பகமானவை. காரணம், இவையாவும் முதல் நூற்றாண்டிலேயே அதாவது இயேசுவின் நினைவுகள் எல்லார் மனதிலும் பசுமையாக இருக்கும்போதே எழுதப்பட்டவை. மாத்திரமல்ல, இவைகளில் காணப்படும் நிகழ்ச்சிகளுக்கும், இயேசுவின் சிலுவை மரணத்திற்கும் ரோம சாம்ராஜ்யத்தின் ஆவணங்கள் மற்றும் குறிப்பேடுகளில் அக்காலத்தில் ஆண்ட ஆளுநர்களின் கையெழுத்துடன் ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பர்னபாவின் சுவிசேஷம் எழுதின பர்னபா யார் என்பதற்கே ஆதாரங்கள் இல்லை. இரண்டாவது மிர்சா குலாம் அகமதுவின் கூற்று பற்றியது. இந்த மீர்சா குலாம் துவக்கத்தில் இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்து கடைசியில் தன்னை இறுதிக்கால நபி என்று பிரகடனம் செய்து கொண்டார். பைபிள் மாத்திரமல்ல. குர் ஆனைப்பற்றியும் நிறைய தாறுமாறான கருத்துக்களை சொல்லியுள்ளார். இவரை இதனால் ஒரு கூட்டம் ஜனங்கள் தவிர யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்பற்றியவர்கள் அகமதியர்கள் (Ahmadiyya) எனப்பட்டனர். எனவே, இவரது சாட்சியும் நம்பகமானதல்ல. கெய்சன் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல இயேசு சரியாக மரிக்கவில்லை. கோமாவில் கிடந்தார் என்பதெல்லாம் கடைந்தெடுத்த கற்பனை ரகங்கள். ரோம வீரர்கள் சிலுவை தண்டனை நிறைவேற்றுவதில் மாஸ்டர் பட்டம் பெற்றவர்கள். ஒரு நாளைக்கு இது மாதிரி பலபேரை சிலுவையில் அறைந்து கொல்லும் புரபஷனல் கொலைகாரர்கள். அவர்கள் இயேசு மரித்ததை உறுதி செய்யத்தான் அவர் விலாவிலே குத்தினார்கள். சரியாக மரிக்கவில்லையென்றால் உடனடியாக கண்டுபிடித்துவிடுவார்கள். அதுவும் தவிர இயேசு கல்லறையில் வைக்கப்பட்ட போது இயேசுவின் சரீரத்தை அவர் சீடர்கள் ஒளித்து வைத்துவிட்டு அவர் உயிர்த்தெழுந்தார் என்று சொல்லிடுவார்கள் என்று மனுச்செய்துதான் யூதர்கள் அவர்கள் கல்லறையை காவல் செய்ய உத்தரவு பெற்றனர். அதன்படி ரோம அரசாங்கம் அவர் கல்லறையை காவல் செய்ய வீரர்களை நியமித்திருந்தது. இயேசு கோமா தெளிந்து எழுந்து தன்னிஷ்டப்படியெல்லாம் இந்த வீரர்களை தாண்டி வெளியே போய்விட முடியாது. அதுவும் தவிர, கோமாவில் கிடந்த ஒரு மனிதர் எழுந்தவுடன் அவர் நடக்க முடியாது. அப்படியே நடக்கவேண்டுமானாலும் நாலைந்து பேரின் உதவியுடன் தான் செய்ய முடியும். இங்கே கெய்சர் புத்தகத்தில் சிலுவையிலறையப்பட்டு கோமாவில் கிடந்த இயேசு எழுந்து பார்த்து கல்லைத் தாமே புரட்டிப்போட்டு விட்டு (கல்லறைக்கல் என்பது பெரிய பாறை) ஹாயாக நடந்து போயிருப்பது தமிழ் சினிமாக்களில் கூட பார்க்க முடியாத கற்பனை ரகம். சரி. இவர் காட்டும் காஷ்மீர் கல்லறை பின்னே யாருடையது? முதலாம் நூற்றாண்டில் கிரேக்க, ரோமானிய உலகில் பெரும்புகழ் பெற்றிருந்தவர் அபோலநிபஸ் என்பவர். இவர் நம்மூர் சித்தர்கள் மாதிரி பல அமானுஷ்ய செயல்களை நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்ததாக சொல்லப்படுகிறது. பின்வந்த, நூற்றாண்டுகளில் ஏகப்பட்ட கால இடைவெளியில் மக்கள் இயேசுவையும் அகோ லிநிபஸையும் ஒன்று என்று ஜனங்கள் கருதியிருக்கலாம். எனவே காஷ்மீரில் கெய்சர் காட்டுவது இயேசுவின் கல்லறையல்ல. மாத்திரமல்ல. இயேசுவுக்கு எங்குமே கல்லறை இல்லை. அவர் மரித்தபோது அவரை வைத்திருந்த இடம் தான் இருக்கிறது. கல்லறை என்றால் அதனுள்ளே மரித்தவர் இருக்கவேண்டும். இயேசு உயிர்த்ததினால் அவர் அங்கே இல்லை. பின்னர் இதுமாதிரி கதைகள் ஏன் கிளப்பிவிடப்படுகின்றன? இயேசுவின் மரணத்தை ஒத்துக் கொள்ள முடியாத சிலர் அவர் மீது வைத்திருந்த அழுத்தமான நம்பிக்கை காரணமாகத்தான் இறைவன் மனிதனாக அவதரித்து இவ்வளவு மோசமான மரணத்தை அடைந்திருக்க முடியாது என்று கருதி இதுபோல கற்பனை செய்துகொண்டு புத்தகம் எழுதிவிடுகிறார்கள்.(இயேசுவின் தொனி மார்ச் 08)
அப்போஸ்தலனாகிய யோவானை தவிர , மற்ற 12 அப்போஸ்தலர்களும், பவுல், மற்றும் யூதாசுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியாஸ் உட்பட அனைவருமே இரத்த சாட்சிகளாக கொலை செய்யப்பட்டு கிறிஸ்துவுக்காக மரித்தார்கள். ஒரு பொய்க்காக ஏன் இவர்கள் அனைவரும் தங்கள் உயிரை அப்படி மாய்த்திருக்க வேண்டும்? சிந்தித்துப் பாருங்கள். உண்மையில், எந்த புத்தகமும் இந்த அளவு ஆழமாய் ஆராயப்பட்டதில்லை. இந்த 2000 ஆண்டுகளில் பைபிளில் குறைகண்டு அதை எப்படியாவது அழிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஏராளம்.ஆனால் வேதாகமமோ இன்னமும் இருக்கின்றது. அநேகருடைய வாழ்க்கையை இன்னும் மாற்றிய படி இருக்கின்றது. இயேசு கிறிஸ்துவை பற்றிய நற்செய்தியை உலகுக்கு பறைசாற்றியபடி உள்ளது.
ஏசாயா:40:8. புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்
Labels:
Bible,
Easter,
Good Friday,
History,
India,
Jesus,
Short Answers
Tuesday, July 17, 2012
பாஸ்டர் M.S.வசந்தகுமாருடன் ஒரு நேர்முக பேட்டி
l
http://www.youtube.com/watch?v=TajA7a3Kvlo
Pastor. M.S. Vasanthakumar Interview
Founder and president of Tamil Bible Research Center
Credit goes to Tamil Christian Media and
http://tamilbibleresearchcentre.com/
Telephone Number :
020 8374 4004
Mobile Number:
07814 252 077
Postal Address:
M.S Vasanthakumar
8 Broadlands Avenue,
Enfield,
London.
EN3 5AH
United Kingdom
E-Mail: msvtbrc@googlemail.com
Labels:
Bible Prophecy,
Bible Study,
End Time News,
Interview,
Rapture,
Revelation,
Testimony
Friday, July 13, 2012
ஆச்சரியமாய் உயிர்பெற்ற எபிரேய மொழி
உலக மொழிகளுக்கெல்லாம் தாயாக, மூல மொழிகளாக திகழும் செம்மொழியாகும் தகுதியை கீழ்கண்ட ஆறு மொழிகளே பெற்றிருக்கின்றன.
1.கிரேக்கமொழி
2.இலத்தின்மொழி
3.சீனமொழி
4.எபிரேயமொழி
5.சமஸ்கிருத மொழி
6.தமிழ்மொழி
இவற்றில் கிரேக்கமொழி, இலத்தின்மொழி, சமஸ்கிருதமொழி ஆகிய மூன்றும் இறந்து போன மொழிகளாகும். எபிரேயம் - கி பி 2ம் நூற்றாண்டில் இஸ்ரேல் ஜனங்களான யூதர்கள் உலகமெங்கும் சிதறடிக்கப் பட்டபோது வழக்கற்று ஒழிந்த மொழியாய் போனது. அப்படியே அந்த மொழி காணாமல் போயிருக்க வேண்டும்.பொதுவாக நமது நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகள் சென்ற அனேகர் தம் தாய் மொழியை சீக்கிரமாகவே மறந்து விடுகின்றனர் என்பது மிக உண்மை.அமெரிக்காவில் வாழும்,அங்கு பிறந்த இந்திய வம்சா வழி குழந்தைகளிடம் அவர்கள் தாய்மொழியை சுத்தமாக எதிர்பார்க்க முடியாது.
ஆனால் இஸ்ரேல் ஜனங்கள் ஆயிரம் ஆண்டுகளாக பிற நாடுகளில் சிதறடிக்கப்பட்டிருந்தும்,பல நூறு ஆண்டுகள் எபிரேயமொழி பேசப்படாமலே எழுதப்படாமலே இருந்தும், இம்மொழி மீண்டும் வந்து பைபிள் முன்னறிவிப்பு படி இன்று லட்சக்கணக்கான மக்களால் பேசப்படுகிறது என்பது மிகவும் ஆச்சர்யம். கி பி 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த எலியேசர் பென் யெஃகுடா (Eliezer Ben-Yehuda) என்ற மொழியியல் அறிஞர் எபிரேயு மொழியை மீண்டும் உயிர்பெற வைத்தார். இது இன்றைய இஸ்ரேலின் ஆட்சி மொழியாக வாழ்கிறது. 7 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பேசப்படுகிறது. பரிசுத்த வேதம் முழுக்க முழுக்க உண்மை என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?
செப்பனியா 3:9. அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.
1.கிரேக்கமொழி
2.இலத்தின்மொழி
3.சீனமொழி
4.எபிரேயமொழி
5.சமஸ்கிருத மொழி
6.தமிழ்மொழி
இவற்றில் கிரேக்கமொழி, இலத்தின்மொழி, சமஸ்கிருதமொழி ஆகிய மூன்றும் இறந்து போன மொழிகளாகும். எபிரேயம் - கி பி 2ம் நூற்றாண்டில் இஸ்ரேல் ஜனங்களான யூதர்கள் உலகமெங்கும் சிதறடிக்கப் பட்டபோது வழக்கற்று ஒழிந்த மொழியாய் போனது. அப்படியே அந்த மொழி காணாமல் போயிருக்க வேண்டும்.பொதுவாக நமது நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகள் சென்ற அனேகர் தம் தாய் மொழியை சீக்கிரமாகவே மறந்து விடுகின்றனர் என்பது மிக உண்மை.அமெரிக்காவில் வாழும்,அங்கு பிறந்த இந்திய வம்சா வழி குழந்தைகளிடம் அவர்கள் தாய்மொழியை சுத்தமாக எதிர்பார்க்க முடியாது.
ஆனால் இஸ்ரேல் ஜனங்கள் ஆயிரம் ஆண்டுகளாக பிற நாடுகளில் சிதறடிக்கப்பட்டிருந்தும்,பல நூறு ஆண்டுகள் எபிரேயமொழி பேசப்படாமலே எழுதப்படாமலே இருந்தும், இம்மொழி மீண்டும் வந்து பைபிள் முன்னறிவிப்பு படி இன்று லட்சக்கணக்கான மக்களால் பேசப்படுகிறது என்பது மிகவும் ஆச்சர்யம். கி பி 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த எலியேசர் பென் யெஃகுடா (Eliezer Ben-Yehuda) என்ற மொழியியல் அறிஞர் எபிரேயு மொழியை மீண்டும் உயிர்பெற வைத்தார். இது இன்றைய இஸ்ரேலின் ஆட்சி மொழியாக வாழ்கிறது. 7 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பேசப்படுகிறது. பரிசுத்த வேதம் முழுக்க முழுக்க உண்மை என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?
செப்பனியா 3:9. அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.
Labels:
Bible Prophecy,
End Time News,
History,
Israel,
Jews
Subscribe to:
Posts (Atom)
இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்



