Tuesday, September 29, 2015

ஜிகாத் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஹிஜ்ரத் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாடு விட்டு நாடு சென்று உலகமுழுவதும் அவர்கள் மயமாக்கல் தான் ஹிஜ்ரத். குரான் சொல்லுகிறது... "எவர் அல்லாஹ்வின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார்; இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது" குரான் 4.100


தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர். நன்றி தகப்பனே!! (சங்கீதம் 23:4)


Monday, September 21, 2015

முன்பெல்லாம் புத்தகங்களில் எங்கேயோ ஓரிடத்தில் கிறிஸ்துவுக்காக இரத்தசாட்சிகளாக மரித்தோரின் சரிதங்களை படித்து கண்ணீர் வடித்திருக்கிறோம். ஆனால் இன்றோ தினமும் நம் கண் முன்பாகவே கணக்கற்றோர் இரத்த சாட்சிகளாக மடிந்துகொண்டிருக்கிறார்கள் கிறிஸ்துவுக்காக‌. கண்ணீர் விட தான் கண்கள் இல்லை. நாம் அவ்ளோ பிசி.


ஒவ்வொரு செப்டம்பர் 21 ஆம் தினமும் உலக அமைதி தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒலிவ (Olive) இலையானது அமைதி மற்றும் சமாதானத்தின் சின்னமாகக் கருதப்படுகின்றது.இதற்கான காரணம் நோவாகால வெள்ளப்பெருக்கின் போது ஒரு புறா ஆலிவ் இலை ஒன்றை சுமந்து சென்றதை நோவா கண்டார்.உடனே அவர் கடவுளின் கோபம் தணிந்து விட்டது என்பதை அறிந்தார். இதனால் ஒலிவ இலை சமாதானத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. அதாவது கடவுளின் கோபம் தணிந்து மழை நின்றிருந்தபடியால் தான் புறாவால் ஒரு ஆலிவ் இலையை கொத்தி பறந்து செல்ல முடிந்தது. "அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக் கொண்டு வந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான் (ஆதி:8:11). ஒரு பெரிய பிரளயத்தின் பின்பு பூமியில் அமைதி திரும்பியதை ஆலிவ் இலையுடன் கூடிய புறா சுட்டி காட்டியதால் இன்றும் அது உலக அமைதியின் சின்னமாக கருதப்படுகிறது.