Thursday, October 06, 2011

இப்படியும் ஊழியம் செய்யலாம்

டெக்சாஸ் மாகாணத்தில் கிவிக் கார் எனும் ஆட்டோமொபைல் ஒர்க் ஸாப் வைத்திருப்பவர் சார்லி விட்டிங்டன். இவர் வொர்க் சாப்பில் யோவான்:3:16-ரை வாசித்து காண்பித்தால் போதும் ஆயில் சேஞ்ச் செய்யும் போது வழக்கமான விலையிலிருந்து 15 டாலர்கள் வரை தள்ளுபடி தருவதாக அறிவித்து கூப்பன்கள் வெளியிட்டு உள்ளார். வியாபாரத்துக்கு வியாபாரமும் ஆச்சுது, நற்செய்தியை மக்களுக்கு சொன்னதும் ஆச்சுது என்பது அவர் எண்ணம்.வழக்கம் போல சில எதிர்ப்புகள் வந்தன. ஆனாலும் அவர் விடுவதாக இல்லை “என் விசுவாசத்தில் நான் உறுதியாய் நிற்கிறேன் அவ்வளவுதான்” என்கிறார் சார்லி. எதாவது சட்டத்தை காட்டி பயமுறுத்தி அதற்கு தடைபோடலாமென முயற்சித்தார்கள். அதற்கான வழி ஒன்றும் இல்லை என அட்டர்னி ஒருவர் தெரிவித்து விட்டார். அந்த அட்டர்னி வேடிக்கையாக கூறும்போது “பைபிளை படித்தால் பல வெகுமானங்கள் கிடைக்கும் என கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் ஆயில் சேஞ்சின் போது டிஸ்கவுண்டும் கிடைக்கும் என்பதை கடவுள் அர்த்தப் படுத்தவில்லை என நம்புகிறேன்” எனக் கூறினார்.

யோவான்:3:16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

http://religion.blogs.cnn.com/2011/10/01/quote-john-316-for-an-oil-change/

Friday, September 30, 2011

இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாதிருக்கவேண்டும்


ஆர அமர இருந்து இந்த அழகான அகாபே கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நோட்டீசை உருவாக்கியவர்கள் மேலே ”கர்த்தருக்கு ஸ்தோத்திரம்”மோ அல்லது ”Praise the Lord”டோ அல்லது ஒரு வேத வசனமோ போட்டிருக்கலாம். தோதான வேத வசனம் கிடைக்கவில்லை போலிருக்கிறது. எட்டு பாஸ்டர்மார்களும் ஒரே மனதாக இந்த விசயத்திலாவது ஒன்று கூடுவது நல்ல விசயம். நல்ல நோக்கத்துக்காக நாலும் செய்யலாம் என்பார்கள். சிறார்களையும், இளைஞர்களையும் எளிதில் சென்றடைய இது ஒரு நல்ல வழி. ஆனாலும் அந்நோக்கம் இந்த கைப்பிரதியில் கூட தெரியவில்லை என்பது தான் சோகம். இளம் தலைமுறையினருக்கு அதுதான் பிடிக்கிறது வென இக்காலத்தில் பலதையும் ஏற்றுக்கொள்கிறார்கள். ராப் இசையும் பாப் இசையும் கிறிஸ்தவத்தில் வலிய புகுத்துவது எந்த அளவுக்கு நல்லதோ தெரியவில்லை. ஏதோ கத்தி பாடுகிறார்கள் ஆடுகிறார்கள் ஆனால் வார்த்தைகள் ஒன்றும் கேட்பதுமில்லை புரிவதும் இல்லை.சில இசைகள் பிசாசுக்கே உரியது நாம் அதில் தெய்வீகத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனால் விளையாட்டு நல்லது. சரீரத்துக்கும் நல்லது. மனதுக்கும் நல்லது. ஸ்போர்டிவ்வாக எடுத்துக்கொள்வதை கற்றுக்கொள்வார்கள். அப்படியே இப்படி கிரிக்கட் ஆடியாவது திருச்சபைகள் இடையே சகோதரத்துவம் வளர்ந்தால் ரொம்ப நல்லது.
ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.(I கொரிந்தியர் 10:31)
எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.(I கொரிந்தியர் 9:22 )
இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாதிருக்கவேண்டுமே.(லூக்கா 11:42)

Tuesday, September 27, 2011

எனக்கு எல்லாம் இயேசுவே MP3 பாடல்கள்

Yenakku Ellaam Yesuve Audio CD from Yesu Viduvikiraar (Jesus Redeems) Ministries.

MP3 பாடல்கள்ஐ பதிவிறக்கம் செய்ய, மவுஸினால் இங்கு வலது சொடுக்கி, “save target as” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

[mp3] Athikalai Thuthi.mp3 0 days old 0 4.9 MB

[mp3] Elluppum Deva Elluppum.mp3 0 days old 0 3.7 MB

[mp3] Jeyam Undu .mp3 0 days old 0 3.9 MB

[mp3] Maghimaiyodu Yesu.mp3 0 days old 0 4.7 MB

[mp3] Naan Ummai Maranthalum.mp3 0 days old 0 4.5 MB

[mp3] Neerthan Ayaa.mp3 0 days old 0 4.8 MB

[mp3] Viduvikkirar Yesu.mp3 0 days old 0 4.2 MB

[mp3] Yen Intha Padukal.mp3 0 days old 0 5.6 MB


ENNAKKU ELLAM YESUVAE
ATHIKALAI THUTHIhi.mp3 HEMA JOHN - ENNAKKU ELLAM YESUVAE 5:24 · 128 Kbit/s · 4.94 MB · MP3
JEYAM UNNDUu .mp3 JOLLEE ABRAHAM - ENNAKKU ELLAM YESUVAE 3.91 MB · MP3
NEERTHAN AYAAaa.mp3 SINDHU - ENNAKKU ELLAM YESUVAE 4.78 MB · MP3
MAGHIMAIYODUdu Yesu.mp3 JOHN PANNEER SELVAM - ENNAKKU ELLAM YESUVAE 4.67 MB · MP3
VIDUVIKKIRARar Yesu.mp3 HEMA JOHN - ENNAKKU ELLAM YESUVAE 4.22 MB · MP3
ELLUPPUM THEVA ELLUPPUMm.mp3 M. K. PAUL - ENNAKKU ELLAM 3.72 MB · MP3
YEN ENTHA PADUGALal.mp3 SINDHU - ENNAKKU ELLAM YESUVAE 5.58 MB · MP3
NAAN UMMAI MARANTHALUMum.mp3 JOHN PANNEER SELVAM - ENNAKKU ELLAM YESUVAE 4.46 MB · MP3

Friday, September 23, 2011

இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்

1.இஸ்ரவேலின் வம்சத்தினர் தேசத்தை மீண்டும் ஆண்டுகொள்வர் என ஆமோஸ் கிமு 750 வாக்கில் முன்னுரைத்தது அப்படியே கிபி.1948-ல் நிறைவேறியது.ஆமோசின் இறுதி வார்த்தைகளை கவனியுங்கள் “நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்” அப்படியே ஆகும்.ஆமேன்.
ஆமோஸ் 9
14. என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்.
15. அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.


2.மீண்டும் யூத இனம் புத்துயிர் பெற்றுவரும் என கிமு 593-571 இடையே எசேக்கியேல் உரைத்தது அப்படியே நடந்தது.நாசிக்களால் நடத்தப்பட்ட ஹோலோகோஸ்ட (Holocaust) எனப்படும் யூதப்படுகொலையின் போது ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது யாருமே யூதர்கள் இப்படி மீண்டும் புத்துயிர் பெற்று வருவார்கள் என நம்பவில்லை. இப்படி உலர்ந்து போன எலும்புகள் மீண்டும் உயிர் பெற்று வந்தது முழுக்க முழுக்க தெய்வச்செயலே.
எசேக்கியேல் 37
10. எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.
11. அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.
12. ஆகையால் நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்குவரவும்பண்ணுவேன்.
13. என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
14. என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.


3.ஒரே நாளில் இஸ்ரேல் தேசம் உருவாகும் என ஏசாயா தீர்க்கதரிசி கிமு 701-681 வாக்கில் உரைத்தது 1948 மே-14ல் நிறைவேறியது.
ஏசாயா 66
7. பிரசவவேதனைப்படுமுன் பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள்.
8. இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரேநாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்பட்டும் தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது.


4.யூதா,இஸ்ரேல் என முன்பு இராஜாக்கள் காலத்தில் இரண்டாக பிரிந்திருந்த தேசங்கள் ஒருங்கிணைந்து ஒரே தேசமாகும் என எசேக்கியேல் கிமு593-571-களில் முன்னுரைத்திருந்தார். அது அப்படியே நிறைவேறியது.
எசேக்கியேல் 37
21. நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் போயிருக்கும் ஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, சுற்றிலுமிருந்து அவர்களைச் சேர்த்து, அவர்களை அவர்கள் சுயதேசத்திலே வரப்பண்ணி,
22. அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே ஜாதியாக்குவேன்; ஒரே ராஜா அவர்கள் எல்லாருக்கும் ராஜாவாக இருப்பார்; அவர் இனி இரண்டு ஜாதிகளாக இருப்பதில்லை: அவர்கள் இனி இரண்டு ராஜ்யங்களாகப் பிரிவதுமில்லை.


5.பல தேசங்களிலிருந்து யூதர்கள் திரும்பி தங்கள் சொந்த தேசத்துக்கு வருவார்கள் என எரேமியா கிமு626-586 வருடங்களுக்கு இடையே உரைத்தது அப்படியே நடந்தது.
எரேமியா 16
14. ஆதலால், இதோ, நாட்கள்வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம்பண்ணாமல்,
15. இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும் தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

அதையே எசேக்கியேலும் 593-571 BC வாக்கில் தீர்க்கதரிசனமாக சொல்லியிருந்தார்.
எசேக்கியேல் 34
13. அவைகளை ஜனங்களிடத்திலிருந்து புறப்படவும் தேசங்களிலிருந்து சேரவும்பண்ணி, அவைகளுடைய சுயதேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல் மலைகளின் மேலும் ஆறுகள் அண்டையிலும் தேசத்தின் சகல வாசஸ்தலங்களிலும் அவைகளை மேய்ப்பேன்.


6.இஸ்ரேல் தேசத்தை தேவன் தன் மந்தையைக் காக்கும் வண்ணமாக அதைக் காப்பார் என எரேமியா முன்னுரைத்தது அப்படியே நடந்து கொண்டிருக்கிறது. சூழ்ந்திருக்கும் எல்லா தேசங்களும் அதற்கு எதிராக பல முறைவந்தும் அந்த சிறிய தேசத்தை யாராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆமேன். கர்த்தர் காக்கின்றார்.
எரேமியா 31
10. ஜாதிகளே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக் காப்பார் என்று சொல்லுங்கள்


7.மீண்டும் இஸ்ரேல் தேசத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பார் என ஏறத்தாழ கிமு 1400 -ல் எழுதப்பட்டது.அப்படியே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வறண்ட நிலமாக கிடந்த இந்நிலத்திலிருந்து பல நாடுகளுக்கும் இப்போது பல்வேறு பொருட்களும், தொழில்நுடபங்களும் ஏற்றுமதியாக்கிக்கொண்டிருக்கின்றது.
உபாகமம் 30
3. உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார்.
4. உன்னுடையவர்கள் வானத்தின் கடையான திசைமட்டும் துரத்துண்டிருந்தாலும், உன் தேவனாகிய கர்த்தர் அங்கே இருக்கிற உன்னைக் கூட்டி, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து,
5. உன் பிதாக்கள் சுதந்தரித்திருந்த தேசத்தை நீ சுதந்தரிக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தர் அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் பிதாக்களைப்பார்க்கிலும் உன்னைப் பெருகப்பண்ணுவார்.


இஸ்ரேலின் தேவன் இன்னும் ஜீவிக்கின்றார் என்பதற்கு இன்றைய இஸ்ரேல் தேசமே சாட்சி.

Wednesday, September 21, 2011

இஸ்ரவேலின் பேர் இனி...

கடந்த வருடம் ஏப்ரலில் பாலஸ்தீன பிரதமர் சலாம் பாயத் “கடவுளுக்கு சித்தமானால் அடுத்த வருடம் நாமெல்லாரும் பாலஸ்தீனத்தின் தலைநகரமாம் கிழக்கு ஜெருசலத்தில் தொழுகைக்காக ஒன்று கூடுவோம்” என அறைகூவல் விடுத்திருந்தார்.அவரது இந்த முழக்கம் உண்மையாவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிய தொடங்கிவிட்டன.இஸ்ரேல் நாடானது இரண்டாக பிரிக்கப்பட்டு பாலஸ்தீனம் உருவாகி, அதன் தலைநகரமாம் எருசலேமும் இரண்டாக்க பிரிக்கப்பட்டு கிழக்கு எருசலேமை பாலஸ்தீனாவுக்கு கொடுக்க உலகம் முழுவதிலிருமிருந்து இஸ்ரேலுக்கு அதிக பிரஷர். இது பற்றிய வாக்கெடுப்பு ஐநா சபையில் வரும் நாட்களில் நடக்கவிருக்கிறது.

வேதாகமம் இது பற்றி என்ன கூறுகிறது.
லூக்கா 24:21 புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.
வெளி 11:2 ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிறபிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.
யோவேல் 3:2 என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினிமித்தமும்,..அங்கே அவர்களோடு வழக்காடுவேன்.

எகிப்துக்கான ஈரானிய தூதர் மொஜ்டபா அமானி ஒரு அரேபிய பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஐநாவில் அங்கத்தினராகும் பாலஸ்தீனம் இஸ்ரேலின் அழிவுக்கான ஒரு படிக்கட்டு என வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

இப்படி சங்கீதம் 83:4 வசனமும் நிறைவேறுகிறது. “அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.”

இஸ்ரேலுக்காக ஜெபிப்பீர்களா?

ரோமர் 10:1 சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச்செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது.

PA Prime Minister Salam Fayyad: Next year J'lem will be our capital
"Next year, Inshallah (God willing), we shall celebrate in the Church of the Holy Sepulchre in east Jerusalem, the capital of the Palestinian state,"

Iranian Ambassador: U.N. Vote On Palestinian Statehood Is a ‘Step Towards Wiping Out Israel’
Mojtaba Amani, Iran’s ambassador to Egypt, openly conceded in an interview with Al-Watan al-Arabi, that the PA’s push for full membership as a UN member state “is a step towards wiping out Israel,“