
Tuesday, September 29, 2015
ஜிகாத் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஹிஜ்ரத் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாடு விட்டு நாடு சென்று உலகமுழுவதும் அவர்கள் மயமாக்கல் தான் ஹிஜ்ரத். குரான் சொல்லுகிறது... "எவர் அல்லாஹ்வின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார்; இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது" குரான் 4.100

Thursday, September 24, 2015
Monday, September 21, 2015
ஒவ்வொரு செப்டம்பர் 21 ஆம் தினமும் உலக அமைதி தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒலிவ (Olive) இலையானது அமைதி மற்றும் சமாதானத்தின் சின்னமாகக் கருதப்படுகின்றது.இதற்கான காரணம் நோவாகால வெள்ளப்பெருக்கின் போது ஒரு புறா ஆலிவ் இலை ஒன்றை சுமந்து சென்றதை நோவா கண்டார்.உடனே அவர் கடவுளின் கோபம் தணிந்து விட்டது என்பதை அறிந்தார். இதனால் ஒலிவ இலை சமாதானத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. அதாவது கடவுளின் கோபம் தணிந்து மழை நின்றிருந்தபடியால் தான் புறாவால் ஒரு ஆலிவ் இலையை கொத்தி பறந்து செல்ல முடிந்தது. "அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக் கொண்டு வந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான் (ஆதி:8:11). ஒரு பெரிய பிரளயத்தின் பின்பு பூமியில் அமைதி திரும்பியதை ஆலிவ் இலையுடன் கூடிய புறா சுட்டி காட்டியதால் இன்றும் அது உலக அமைதியின் சின்னமாக கருதப்படுகிறது.

Thursday, September 17, 2015
Wednesday, September 16, 2015
CERN ஐரோப்பாவிலுள்ள மிகப்பெரிய அணு ஆராய்ச்சி நிலையம். உலகின் மிகப்பெரிய மற்றும் மிக சக்தி வாய்ந்த துகள் முடுக்கி எனப்படும் Collider இங்கு தான் உள்ளது. இது நிலத்திற்கு அடியில், தரைக்கு கீழே, 50 முதல், 175 மீட்டர் ஆழத்தில், 17 மைல் நீளத்தில் (27 கிலோ மீட்டர்) மிகப்பெரிய வட்ட சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. இது சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் எல்லைகளின் கீழே உள்ளது. 100 நாடுகளில் இருந்து, 10 ஆயிரம் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள், இணைந்து இந்த திட்டத்தில் பணியாற்றுகின்றனர் எனினும் ஐரோப்பிய மூளையே இந்த திட்டத்தின் முக்கிய மூல காரணம் ஆகும். இதை கட்டியெழுப்ப 64 ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவாயிற்றாம். இது இப்போது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான சோதனை ஆராய்ச்சி மையம் ஆகும். இந்த மையம் தான் கடவுள் துகளை கண்டு பிடித்ததாக 2012-ல் அறிவித்தது. அணுத்துகள்களை மோதவிட்டு செய்யப்படும் இந்த ஆய்வு மிக ஆபத்தானது எனினும் பேரண்டம் உருவாகியது குறித்ததான மற்றும் அடிப்படை துகளின் பண்புகள் ஒழுக்கம் முதலியனதான தகவல்களை அறிய விஞ்ஞானிகள் துடிக்கின்றார்கள்.‘கடவுள் துகள்’ பிரபஞ்சத்தையே அழிக்கும் பயங்கர ஆற்றல் கொண்டது என்று பிரபல பௌதீக விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார். எனினும் கடவுள் துகள் (God particle), இருள் பொருள் (Dark matter),Ghost particle என பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அநேக surprise findings கிடைக்கின்றனவாம். வெளிப்படுத்துதல் 9 ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது போல பாதாளக்குழியை இவர்கள் திறந்து விடப் போகின்றார்களா? வேதம் சொல்லுகிறது "அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகைஎழும்பிற்று; அந்தக் குழியின் புகையில் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது" என. அதை தொடர்ந்து அந்த புகையினால் வந்த வாதைகளையும் படிக்கிறோம். இந்த கொலைடர் இருக்கும் இடம் செயின்ட் ஜெனிஸ் போலி (Saint-Genis-Pouilly) எனும் இடமாகும். படத்திலுள்ள் மேப்பில் நீங்கள் பார்க்கலாம். அதாவது போலி (அப்போலியோன்) எனும் கடவுளுக்கு கோயில் இருந்த இடம். வேதமும் 11ம் வசனத்தில் சொல்லுகிறது "அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்" என்று. அதுமட்டுமல்லாமல் இந்துத்துவத்தில் அழிக்கும் கடவுளாக கருதப்படும் சிவனுக்கும் இங்கே சிலைவைத்துள்ளார்கள். CERN-னின் நீல நிற லோகோவை கூர்ந்து கவனியுங்கள் 666 தெரியும். You think these all coincidence?

Tuesday, September 15, 2015
Monday, September 14, 2015
****மனந்திரும்பாமற்போனால்**** அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் - இயேசு லூக்கா 13:2-5

Friday, September 11, 2015
Thursday, September 10, 2015
Wednesday, September 09, 2015
இன்னும் 100 ஆண்டுகளுக்கு விண்கற்கள் பற்றிய கவலையே வேண்டாம் என்றவர்கள் இந்த செய்திக்கு என்ன சொல்லுவார்கள்.வேதம் சொல்லுகிறது. ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே?இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார். (Iகொரி 1:20, 3:19,யோபு 9:7)
