நண்பனே!
புனித வேதம் சொல்வதெல்லாம் சத்தியம்.
உன் நித்தியத்தை எங்கே கழிக்கப்போகிறாய்?
Ref: http://sinhalaya.com/news/eng/2012/sri-lanka-red-rain-is-having-a-cosmic-connection/
Wednesday, December 19, 2012
Monday, December 17, 2012
அழுகிறவர்களுடனே அழுங்கள்
துக்கத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலும் தேறுதலும் அளிப்பது தேவ வசனங்களே என்றால் அது மிகையாகாது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூட நேற்று கனேட்டிகட்டில் தங்கள் சிறுமலர்களை துப்பாக்கி சூட்டில் இழந்து தவிக்கும் குடும்பங்களின் மத்தியில் பேசும் போது வேத வசனங்களை மேற்கோள்காட்டி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர் கூறும் போது....
சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.ரோமர் 12:15
Source: http://global.christianpost.com/news/obama-sandy-hook-prayer-vigil-speech-transcript-newtown-full-text-video-86758/
"நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.மேலும் காணப்படுகிற வைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்."....(11கொரி:4:16-18,11கொரி:5:1) ....
"சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது" என்று இயேசு சொன்னார்."....(மத்:19:14) ..."
தேவன் தமது வீட்டுக்கு அவர்களையெல்லாம் அழைத்துக்கொண்டார்.மீந்திருக்கும் நாமும் நம்மை பெலப்படுத்திக்கொண்டு அவர்கள் நினைவில் நம் தேசத்தை தகுதிப்படுத்துவோம். நம்மை பிரிந்தவர்களை கடவுள் ஆசீர்வதித்து அவர்களை உன்னதத்தில் சேர்த்துக் கொள்வாராக.அவர் தமது இரக்கத்தால் இங்கிருக்கும் நம்மை பரிசுத்தமாய் அரவணைத்துக் கொள்வாராக.இப் பகுதியையும் நம் தேசத்தையும் பாதுகாத்து நம்மை ஆசீர்வதித்தருள்வாராக"என்று பேசினார்.
சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.ரோமர் 12:15
Source: http://global.christianpost.com/news/obama-sandy-hook-prayer-vigil-speech-transcript-newtown-full-text-video-86758/
Tuesday, December 11, 2012
தலாய் லாமாவுக்கு கூட தெரியாத இரகசியம்.
இன்றைக்கும் யூத சமுதாயம் பூமியில் பிழைத்திருப்பது வரலாற்று அறிஞர்கள் பலருக்கும் ஆச்சரியமான ஒரு விசயம்.பல்வேறு போராட்டங்கள் கலகங்கள் எதிர்ப்புகள் சிறைபிடிப்புகள் சிதறடித்தல்கள் படுகொலைகள் மத்தியிலும் இன்னும் அந்த சமுதாயம் தனி கலாச்சாரம் பண்பாடு மதம் மொழியென வாழ்ந்து கொண்டிருப்பது வியக்க தகு காரியம்.ஆனால் அவர்களின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் இரகசியம் பலருக்கும் தெரியாது. 1986ம் வருடத்திய சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்றவர் எலியேசர் வீசல் (Eliezer Wiesel) .இவர் ஒரு யூதர். நாசிக்களின் யூத படுகொலையிலிருந்து (Holocaust) தப்பியரும் பிரபல விரியுரையாளரும் ஆவார். ஒரு முறை திபத்திய மத தலைவரான தலாய்லாமா வீசலை சந்திக்க ஆர்வம் தெரிவித்தார். வியந்து போன வீசல் காரணம் அறிய முற்பட்டபோது, தலாய் லாமா சொன்ன பதில் இது தான்."உங்கள் இனத்தார் படாத பாடுகள் இல்லை இன்னல்கள் இல்லை.2000 ஆண்டுகளுக்கு முன் சிறைபிடிக்கபட்டு போனார்கள். ஆனாலும் இன்றைக்கு பிழைத்திருக்கிறார்கள். நாங்கள் எங்கள் தேசத்தை விட்டு வெளியே வந்தோம். ஆனால் இன்றும் அகதிகளாகவே இருக்கிறோம்.கற்றுத்தாருங்கள் நீங்கள் எப்படி பிழைத்தீர்களென". (Spector,S.A;2011)
யூத குலம் இன்னும் வாழ்வதின் இரகசியம் இது தான். அது தலாய் லாமாவுக்கு கூட தெரியாத இரகசியம்.
"உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே." யாத் 20:2.
"நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்." எசேக்கியேல் 36:24
"அவர்களை அழைத்துக்கொண்டுவருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." சகரியா 8 :8
இந்த ஜீவனுள்ள தேவனை நீயும் அண்டிக் கொள்வாயா?
Reference: Romanticism/Judaica: A Convergence of Cultures.By Sheila A. Spector (2011) Pg 13
Tuesday, December 04, 2012
Sunday, November 11, 2012
என் ஜனங்கள் என்னை விட்டுவிட்டார்கள்
அமெரிக்காவில் அதிபர் தேர்தலும் முடிந்து முடிவுகளும் வெளியாகிவிட்டது. இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு தங்களுக்கு யார் வேண்டும் என மக்களே தீர்ப்பளித்து விட்டார்கள். மேலும் மெய்னே,மெரிலேண்ட், வாசி்ங்டன் மற்றும் மின்னசோட்டா மாகாணங்கள் கூட முழு மனதாக ஒருபால் திருமணத்துக்கு (Same sex marriage) ஏக ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள். அருமையான முன்னேற்றம். மன்னன் எவ்வழியோ அப்படியே மக்கள் வழியும். நாட்டு அதிபரே அதற்கு வெளிப்படையாக ஆதரவை தெரிவித்து விட இனியும் யோசிக்க என்ன இருக்கிறது. எங்கேயோ போய்கொண்டிருக்கிறது தேசங்கள். தான் பேசப் போன பல்கலைகழகத்தில் இருந்த கிறிஸ்தவ அடையாளங்களையெல்லாம் டிவியில் தெரியாதபடி திரை போட்டு மறைக்க சொன்னவர் தானே அவர். இயேசு கிறிஸ்துவை குறிக்கும் I.H.S.அதாவது இலத்தீன் மொழியில் Iesus Hominum Salvator பொருள் இயேசு, மனிதரின் இரட்சகர் என்ற அடையாளத்தையும் சிலுவையும் வேண்டுமென்றே மறைத்தார்களே. மற்றதெல்லாம் இனிக்க கிறிஸ்து மட்டும் ஏனோ பயங்கர கசப்பு. அதிபருக்காக தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள்.
அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக பகவத்கீதையை வைத்து பதவிப்பிரமாணம் எடுக்க இருக்கிறார் ஹவாயிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் பெண் துளசி கப்பர்ட். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேச தலைவர்கள் பொறுப்பாய் செயல்பட்டு தங்கள் பணிகளை இறை பயத்தோடு செய்ய நம் ஜெபங்களில் இவர்களை கருத்தாய் நினைத்துக்கொள்ளுங்கள்.
எரேமியா:2:13. என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்.
அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக பகவத்கீதையை வைத்து பதவிப்பிரமாணம் எடுக்க இருக்கிறார் ஹவாயிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் பெண் துளசி கப்பர்ட். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேச தலைவர்கள் பொறுப்பாய் செயல்பட்டு தங்கள் பணிகளை இறை பயத்தோடு செய்ய நம் ஜெபங்களில் இவர்களை கருத்தாய் நினைத்துக்கொள்ளுங்கள்.
எரேமியா:2:13. என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்.
Tuesday, October 23, 2012
பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்போம்
படத்தில் நீங்கள் காணும் இந்த புகழ்பெற்ற “பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்போம்” சிற்பமானது ("Let us beat swords into plowshares") நியூயார்க் மாநகரத்திலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ளது. மனிதனை அழிக்கும் போர்க்கருவியான பட்டயங்களையெல்லாம் மனிதனுக்கு பயனாகும் கருவியான மண்வெட்டிகளாக மாற்றுவோம் என்பது தான் இந்த சிற்பம் சொல்லும் நீதி. இந்த அற்புதமான கருத்து எதிலிருந்து எடுக்கப்பட்டது தெரியுமா? நமது வேதத்தின் ஏசாயா:2:2-டிலிருந்து தான். “அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்குவிரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” என்பது தான் அந்த வசனம். இந்த சிலையை ஐநாவுக்கு பரிசாக 1959-ல் வழங்கியது சோவியத் யூனியன் என்பது இன்னொரு ஆச்சரியமான உண்மை. யுத்தங்களே இல்லாத இப்படியான ஒரு பொற்காலம் இயேசுகிறிஸ்துவின் ஆயிரவருட அரசாட்சியின் காலத்தில் மட்டுமே சாத்தியமாகும் என்பது யாருமே ஒத்துக்கொள்ளாத ஆனால் நிச்சயம் நடைபெறப்போகும் ஒரு சம்பவமாகும்.
ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.(சங்:72:8 ) தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள். (வெளி 20:6) சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.(சங்:72:11.)
ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.(சங்:72:8 ) தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள். (வெளி 20:6) சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.(சங்:72:11.)
Friday, September 21, 2012
காத்துக்கிடக்கும் கிழக்கு வாசல்
இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக நீங்கள் காத்திருக்கிறீர்களோ இல்லையோ, ஆனால் இந்த கிழக்கு வாசல் ரொம்பநாட்களாக காத்து கிடக்கிற கதை தெரியுமோ உங்களுக்கு. இந்த வாசல் வழியாகத் தான் யூதருக்கு ராஜாவாக அந்த முதல் குருத்தோலை திருநாளில் கடைசியாக எருசலேமுக்குள் இயேசுகிறிஸ்து நுழைந்தார். இப்போது மீண்டும் அவர் மட்டுமே இந்த வாசல் வழியாக ராஜாவாக நுழையவேண்டும் என்பதற்காக இந்த வாசல் இன்னும் பூட்டப்பட்டிருக்கிறது ஒரு அதிசயகரமான சம்பவம்.அதை பூட்டி வைத்தது ஒரு முகமதிய மன்னனான சுல்தான் சுலைமான் மன்னன்.
வேதம் சொல்லுகிறது”இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப் பட்டிருக்கவேண்டும்.” எசேக்கியேல்:44:2 அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பே எசேக்கியேல் தீர்க்கதரிசி இங்கே ஓசன்னா திருநாளை முன்னுரைத்தான்.
கிறிஸ்துவுக்கு பின் 1543-ல் எகிப்தையும் சிரியாவையும் ஆண்ட சுல்தான் சுலைமான் ஒரு காரணமும் இல்லாமல் இவ்வாசலைக் கற்களால் கட்டி அடைத்தான் என்கிறார்கள். இன்றும் இது மூடப்பட்டிருக்கிறது. “ஒரு கிறிஸ்தவ அரசன் இவ்வழியாய் நுழைந்து எருசலேமைப் பிடித்து அப்புறம் தன் எதிரிகளையெல்லாம் ஜெயித்துவிடுவான்” என்கின்ற பாரம்பரியப் பேச்சு ஒன்று முகமதியருக்குள் வெகுவாக பரவி இருந்தது. அந்நிகழ்வை தடைசெய்ய இவ்வாறு அவன் செய்து இருக்கலாம் என்கிறார்கள்.ஆனால் சுல்தான் சுலைமானோ அவனை அறியாமலே வேதவாக்கியத்தை நிறைவேற்றியிருக்கிறான்.
அப்புறம் எப்போது தான் இந்த வாசல் திறக்கப்படும்? மூன்றாவது வசனத்தை கவனியுங்கள். ”இது அதிபதிக்கே உரியது, அதிபதி கர்த்தருடைய சந்நிதியில் போஜனம்பண்ணும்படி இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, மறுபடியும் அதின் வழியாய்ப் புறப்படுவான்.” எசேக்கியேல் 44:3.
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இந்த இரண்டாவது வாக்கியம் நிறைவேறும். ஆமேன். வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா.(சங்கீதம் 24:9,10)
வேதம் சொல்லுகிறது”இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப் பட்டிருக்கவேண்டும்.” எசேக்கியேல்:44:2 அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பே எசேக்கியேல் தீர்க்கதரிசி இங்கே ஓசன்னா திருநாளை முன்னுரைத்தான்.
கிறிஸ்துவுக்கு பின் 1543-ல் எகிப்தையும் சிரியாவையும் ஆண்ட சுல்தான் சுலைமான் ஒரு காரணமும் இல்லாமல் இவ்வாசலைக் கற்களால் கட்டி அடைத்தான் என்கிறார்கள். இன்றும் இது மூடப்பட்டிருக்கிறது. “ஒரு கிறிஸ்தவ அரசன் இவ்வழியாய் நுழைந்து எருசலேமைப் பிடித்து அப்புறம் தன் எதிரிகளையெல்லாம் ஜெயித்துவிடுவான்” என்கின்ற பாரம்பரியப் பேச்சு ஒன்று முகமதியருக்குள் வெகுவாக பரவி இருந்தது. அந்நிகழ்வை தடைசெய்ய இவ்வாறு அவன் செய்து இருக்கலாம் என்கிறார்கள்.ஆனால் சுல்தான் சுலைமானோ அவனை அறியாமலே வேதவாக்கியத்தை நிறைவேற்றியிருக்கிறான்.
அப்புறம் எப்போது தான் இந்த வாசல் திறக்கப்படும்? மூன்றாவது வசனத்தை கவனியுங்கள். ”இது அதிபதிக்கே உரியது, அதிபதி கர்த்தருடைய சந்நிதியில் போஜனம்பண்ணும்படி இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, மறுபடியும் அதின் வழியாய்ப் புறப்படுவான்.” எசேக்கியேல் 44:3.
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இந்த இரண்டாவது வாக்கியம் நிறைவேறும். ஆமேன். வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா.(சங்கீதம் 24:9,10)
Thursday, September 13, 2012
கிறிஸ்து பற்றி நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை (1888-1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”, ”தமிழன் என்றோர் இனமுன்று தனியே அதற்கோர் குணமுண்டு' 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' 'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' போன்ற இவரது மேற்கோள்கள் பிரபலமானவை.
இவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி பாடிய பாடல்
தூயஞான தேவன்தந்தை பரமன்விட்ட தூதனாய்த்
துன்பம்மிக்க உலகினுக்கே அன்புமார்க்க போதனாய்
மாயமாக வந்துதித்து மறிகள்சேரும் பட்டியில்
மானிடக் குழந்தையாக மேரிகண்ணில் பட்டவன்
ஆயனாக மனிதர்தம்மை அறிவுகாட்டி மேய்த்தவன்
அன்புஎன்ற அமிர்தநீரின் அருவிகாண வாய்த்தவன்
மாயமாக மாந்தர்வாழ நெறிகொடுத்த ஐயனாம்
நித்தமந்த ஏசுநாதன் பக்திசெய்தே உய்குவோம்.
நல்லஆயன்; மந்தைபோக நல்லபாதை காட்டினான்;
நரிசிறுத்தை புலிகளான கோபதாபம் ஓட்டினான்;
கல்லடர்ந்து முள்நிறைந்து கால்நடக்க நொந்திடும்
காடுமேடு யாவும்விட்டுக் கண்கவர்ச்சி தந்திடும்
புல்லடர்ந்து பசுமைமிக்க பூமிகாட்டி மேய்த்தவன்
புத்திசொல்லி மெத்தமெத்தப் பொறுமையோடு காத்தவன்
கொல்லவந்த வேங்கைசிங்கம்கூசநின்ற சாந்தனாம்
குணமலைக்குச் சிகரமான ஏசுதேவ வேந்தனே.
ஏசுநாதன் என்றபேரை எங்கிருந்தே எண்ணினும்
ஏழைமக்கள் தோழனாக அங்குநம்மை நண்ணுமே.
தேசுமிக்க த்யாகமேனி தெய்வதீப ஜோதியாய்த்
தீமையான இருளைநீக்கி வாய்மைஅன்பு நீதியாய்ப்
பாகமாகப் பரிவுகூறிப் பக்கம்வந்து நிற்குமே
பகைவருக்கும் அருள்சுரக்கும் பரமஞானம் ஒக்குமே.
ஈசனோடு வாழவைக்கும் ஏசுபோத இச்சையை
இடைவிடாத யாவருக்கும் எதிலும்வெற்றி நிச்சயம்!
யோவான் 10:11 நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
Reference:
Namakkal kavinjar V. Ramalingam Pillai about Jesus Christ
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0079.html
இவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி பாடிய பாடல்
தூயஞான தேவன்தந்தை பரமன்விட்ட தூதனாய்த்
துன்பம்மிக்க உலகினுக்கே அன்புமார்க்க போதனாய்
மாயமாக வந்துதித்து மறிகள்சேரும் பட்டியில்
மானிடக் குழந்தையாக மேரிகண்ணில் பட்டவன்
ஆயனாக மனிதர்தம்மை அறிவுகாட்டி மேய்த்தவன்
அன்புஎன்ற அமிர்தநீரின் அருவிகாண வாய்த்தவன்
மாயமாக மாந்தர்வாழ நெறிகொடுத்த ஐயனாம்
நித்தமந்த ஏசுநாதன் பக்திசெய்தே உய்குவோம்.
நல்லஆயன்; மந்தைபோக நல்லபாதை காட்டினான்;
நரிசிறுத்தை புலிகளான கோபதாபம் ஓட்டினான்;
கல்லடர்ந்து முள்நிறைந்து கால்நடக்க நொந்திடும்
காடுமேடு யாவும்விட்டுக் கண்கவர்ச்சி தந்திடும்
புல்லடர்ந்து பசுமைமிக்க பூமிகாட்டி மேய்த்தவன்
புத்திசொல்லி மெத்தமெத்தப் பொறுமையோடு காத்தவன்
கொல்லவந்த வேங்கைசிங்கம்கூசநின்ற சாந்தனாம்
குணமலைக்குச் சிகரமான ஏசுதேவ வேந்தனே.
ஏசுநாதன் என்றபேரை எங்கிருந்தே எண்ணினும்
ஏழைமக்கள் தோழனாக அங்குநம்மை நண்ணுமே.
தேசுமிக்க த்யாகமேனி தெய்வதீப ஜோதியாய்த்
தீமையான இருளைநீக்கி வாய்மைஅன்பு நீதியாய்ப்
பாகமாகப் பரிவுகூறிப் பக்கம்வந்து நிற்குமே
பகைவருக்கும் அருள்சுரக்கும் பரமஞானம் ஒக்குமே.
ஈசனோடு வாழவைக்கும் ஏசுபோத இச்சையை
இடைவிடாத யாவருக்கும் எதிலும்வெற்றி நிச்சயம்!
யோவான் 10:11 நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
Reference:
Namakkal kavinjar V. Ramalingam Pillai about Jesus Christ
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0079.html
Tuesday, September 11, 2012
பாவமூட்டையுடன் செல்வேன் என்றார் பேரரசர் அவுரங்கசீப். அப்போ நீங்கள்?
பிரபல தாஜ்மகாலை கட்டிய ஷாஜகான் மன்னரின் வாரிசாக வந்தவர் பேரரசர் அவுரங்கசீப்.
ஆறாவது முகலாய மன்னராக அரியணைக்கு வந்த இவர் தனது அரசை மேலும் விரிவுபடுத்தி அக்கால பூமியின் மக்கள் தொகையில் நாலின் ஒருபங்கை அரசாண்டு வந்தார்.
ஆனால் பேரரசர் அவுரங்கசீப்பின் இறுதி காலங்களோ பெரும்பாலும் தனிமையிலேயே கழிந்தது. ”நான் என் பேரரசை பாதுகாக்க தவறிவிட்டேன். விலை மதிப்பற்ற என் வாழ்வை நான் வீணாக்கிவிட்டேன்” என சொல்லி தன் மூத்த மகன் அசாமிடம் அவர் புலம்பியிருக்கிறார்.
மரணம் அவரை நெருங்கும் வேளையில் அவுரங்கசீப் இவ்வாறாக தன் இளைய மகன் கம் பாக்ஷ்க்கு கடிதம் எழுதினார்:
ஆனால் கிறிஸ்துவை பின்பற்றுகிற நமக்கோ ஒரு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கின்றது மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என சொல்லுகிறது வேதம். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்தேயு 11:28) என்று சொல்லி இயேசு பாவிகளை அழைக்கிறார். பாவங்களை இயேசு கிறிஸ்து மன்னிக்கிறார். நீங்கள் அவரிடம் வேண்டும் போது உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்ல அவருக்கு அதிகாரம் உண்டு. நாம் சுமக்க வேண்டிய தேவையில்லை. எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள் (ரோமர் 4:7 ), என்ன அருமையான வேத வசனம் இது.
Reference:
http://www.srichinmoylibrary.com/books/1368/9/8/index.html
ஆனால் பேரரசர் அவுரங்கசீப்பின் இறுதி காலங்களோ பெரும்பாலும் தனிமையிலேயே கழிந்தது. ”நான் என் பேரரசை பாதுகாக்க தவறிவிட்டேன். விலை மதிப்பற்ற என் வாழ்வை நான் வீணாக்கிவிட்டேன்” என சொல்லி தன் மூத்த மகன் அசாமிடம் அவர் புலம்பியிருக்கிறார்.
மரணம் அவரை நெருங்கும் வேளையில் அவுரங்கசீப் இவ்வாறாக தன் இளைய மகன் கம் பாக்ஷ்க்கு கடிதம் எழுதினார்:
"நான் இழைத்த ஒவ்வொரு கொடுமையின், நான் செய்த ஒவ்வொரு பாவத்தின், தவறின் பலனை நான் சுமந்து செல்கிறேன். என்ன விசித்திரம் நான் பிறந்த போது உலகில் சுதந்திரமாக பிறந்தேன். இறக்கும் போதோ பாவமூட்டையுடன் செல்வேன். நான் பார்க்கும் இடமெல்லாம் அல்லா மட்டுமே தெரிகிறார். நான் ஒரு மிக மோசமான பாவி. எனக்கு என்ன தண்டனை காத்திருக்கிறதோ தெரியவில்லை.”என எந்த ஒரு நம்பிக்கையும் இன்றி எழுதியிருந்தார். 1707-ல் கிட்டத்தட்ட அவரது தொண்ணூறு வயதில் அவுரங்கசீப் காலமானார்.
ஆனால் கிறிஸ்துவை பின்பற்றுகிற நமக்கோ ஒரு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கின்றது மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என சொல்லுகிறது வேதம். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்தேயு 11:28) என்று சொல்லி இயேசு பாவிகளை அழைக்கிறார். பாவங்களை இயேசு கிறிஸ்து மன்னிக்கிறார். நீங்கள் அவரிடம் வேண்டும் போது உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்ல அவருக்கு அதிகாரம் உண்டு. நாம் சுமக்க வேண்டிய தேவையில்லை. எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள் (ரோமர் 4:7 ), என்ன அருமையான வேத வசனம் இது.
Reference:
http://www.srichinmoylibrary.com/books/1368/9/8/index.html
Monday, September 10, 2012
கிறிஸ்துவுக்கு ஒரு இரத்த சாட்சி
கிறிஸ்து முன்னுரைத்த வாக்கியங்கள் அப்படியே நூற்றுக்கு நூறு நிறை வேறிவருவதை நாம் கண்கூடாக பார்த்து கொண்டு வருகிறோம். நம் இயேசு சொல்லி சென்றிருக்கிறார் ”அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.” என்று (மத்தேயு 24:9).
கிறிஸ்தவர்கள் அதிக சதவீதம் உள்ள, பெரும்பாலான சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கிறிஸ்தவர்களாக கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்திலேயே ஒரு 29 வயது இளைஞர் கிறிஸ்தவர் என்ற ஒரே காரணத்துக்காக கொலை செய்யப்பட்டுள்ளார். 15 பேர் மட்டுமே கூடிய ஒரு வீட்டு ஜெபக்கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு கும்பல் அங்கு நின்றிருந்த வாகனங்களையும், சொத்துக்களையும் சேதப்படுத்திவிட்டு இந்த இளைஞரையும் அடித்து கொன்று போட்டு விட்டு சென்றுவிட்டது. அதை தொடர்ந்து குற்றவாளிகளை அரசு பிடிப்பதை விட்டு விட்டு, அமைதியாக இரங்கல் பேரணி சென்ற 13,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. என்ன கொடுமை.கர்த்தர் தாமே இரத்தசாட்சியாக மரித்துப்போன சகோதரன் எட்வின் ராஜ் குடும்பத்துக்கு ஆறுதலும் தேறுதலும் அளிப்பாராக.
I தெசலோனிக்கேயர் 4:16,17,18 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.
கிறிஸ்தவர்கள் அதிக சதவீதம் உள்ள, பெரும்பாலான சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கிறிஸ்தவர்களாக கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்திலேயே ஒரு 29 வயது இளைஞர் கிறிஸ்தவர் என்ற ஒரே காரணத்துக்காக கொலை செய்யப்பட்டுள்ளார். 15 பேர் மட்டுமே கூடிய ஒரு வீட்டு ஜெபக்கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு கும்பல் அங்கு நின்றிருந்த வாகனங்களையும், சொத்துக்களையும் சேதப்படுத்திவிட்டு இந்த இளைஞரையும் அடித்து கொன்று போட்டு விட்டு சென்றுவிட்டது. அதை தொடர்ந்து குற்றவாளிகளை அரசு பிடிப்பதை விட்டு விட்டு, அமைதியாக இரங்கல் பேரணி சென்ற 13,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. என்ன கொடுமை.கர்த்தர் தாமே இரத்தசாட்சியாக மரித்துப்போன சகோதரன் எட்வின் ராஜ் குடும்பத்துக்கு ஆறுதலும் தேறுதலும் அளிப்பாராக.
I தெசலோனிக்கேயர் 4:16,17,18 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.
Thursday, September 06, 2012
Saturday, September 01, 2012
2000 ஆண்டுகால திருச்சபை வரலாறு




















வீடியோ செய்தி
மேலும் விவரங்கள்
பல பெயர்களில் சபைகள் எப்படி தோன்றின?
கத்தோலிக்க சபை ஆரம்பமானது எப்படி?
ஆங்கிலிக்கன் (எபிஸ்கோபல்) சபையின் ஆரம்பம்
மெத்தடிஸ்ட் சபை- முரண்பாடுகள்
பாப்டிஸ்ட்களின் வரலாறு
மத்தேயு 16:18 இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
Wednesday, August 29, 2012
வில்லியம் கோல்கேட் கண்ட ஆசீர்வாதம்
இனிமேலும் என்னால் உன்னை கவனித்துக் கொள்ள முடியாது. நீ தான் சொந்தமாக காலில் நின்றுகொள்ள வேண்டும் என அந்த ஏழை தந்தை கேட்டுக்கொள்ள இந்த பதினாறு வயது சிறுவன் தனக்குள்ள எல்லாவற்றையும் ஒரு மூட்டையாக கட்டிக்கொண்டு பட்டணம் நோக்கி பிரயாணம் புறப்பட்டான்.அவன் வந்து சேர்ந்த இடம் நியூயார்க் மாநகரம். சோப்பு செய்து விற்று பிழைக்க வேண்டும் என்பது தான் அவன் எண்ணம்.
நாட்டுபுற பையனுக்கு நகரத்தில் வேலை கிடைப்பதென்பது மிகவும் கடினமாக காரியமாக இருந்தது. அவனது தாயாரின் இறுதி வார்த்தைகளும் தான் பயணித்து வந்த படகின் கேப்டனும் அவனுக்கு கொடுத்த தெய்வீக ஆலோசனைகள் அவனுக்கு நினைவுக்கு வந்தன. தனது வாழ்க்கையை தேவனிடத்தில் ஒப்புவித்து தனது வருமானத்தின் ஒவ்வொரு டாலரிலும் பத்தில் ஒரு பங்கை தசமபாகமாக தேவனுக்கு கொடுக்க முடிவெடுத்தான். முதல் டாலர் வருமானம் வந்ததும் அதில் பத்தில் ஒரு பங்கான பத்து செண்டை தேவனுக்கு கொடுத்தான். தொடர்ந்து அவன் அதை செய்ய ஆரம்பித்தான். டாலர்கள் கொட்ட ஆரம்பித்தன. சீக்கிரத்தில் இவன் ஒரு சோப்பு செய்யும் நிறுவனத்தின் பங்குதாரர் ஆனான். சில வருடங்கள் கழித்து இவன் உடன் பங்குதாரர் மரித்து போகவே மொத்த நிறுவனத்தின் பொறுப்பும் இவன் கையில் வந்தது. இவன் இப்போது ஒரு மிகப்பெரிய தொழில் அதிபர். ஆனாலும் பத்தில் ஒரு பங்கை தேவனுக்கு கராராக செலுத்த தன் கணக்குப்பிள்ளைக்கு உத்தரவிட்டிருந்தார். அதிசயகரமாக இவரது தொழில் வளர்ந்தது.நேர்மையான இந்த மனிதர் பின் தேவனுக்கு பத்தில் இரண்டு பங்கை வழங்க தொடங்கினார்.பின் பத்தில் மூன்று பங்கு, பின் பத்தில் நான்கு பங்கு, பின் பத்தில் ஐந்து பங்கு என இறைவனுக்கு தாராளமாக வழங்கினார். விரைவில் உலகமெங்கும் வீடுகள் தோறும் உச்சரிக்கப்படும் பொருளாகி விட்டது இவர் தயாரிப்புகள்.
அவர் தான் மறைந்து போன வில்லியம் கோல்கேட்(1783–1857).William Colgate கோல்கேட் பிராண்டு தயாரிப்புகளின் நிறுவனர், சொந்தக்காரர். தேவன் மீது கொண்ட அவரது விசுவாசத்துக்கும் நம்பிக்கைக்கும் ஏற்ப அவரது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்ப்பட்டது.கோல்கேட் நிறுவனத்தின் இன்றைய நிர்வாகம் பற்றி நமக்கு அதிகமாய் தெரியாவிட்டாலும் அந்நிறுவனம் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கான இரகசியத்தை நாம் இங்கே கூறியிருக்கிறோம். இக்கதை இங்கே கோல்கேட் பொருட்களை விளம்பரப்படுத்த எழுதப்படாமல் கடவுள் மீது விசுவாசம் கொண்டு அவருக்கு கொடுக்க வேண்டியதை நேர்மையாக கொடுத்து வந்தால் அதை தொடர்ந்து வரும் ஆசீர்வாதத்தை விளம்பரப்படுத்துகிறதாய் இருக்கிறது.
ஆதாரம்
God`s Tenth and Man`s Mite - By Ashley G. Emmer,Signs of the Times, August 2, 1938.
மல்கியா 3:10 என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
நாட்டுபுற பையனுக்கு நகரத்தில் வேலை கிடைப்பதென்பது மிகவும் கடினமாக காரியமாக இருந்தது. அவனது தாயாரின் இறுதி வார்த்தைகளும் தான் பயணித்து வந்த படகின் கேப்டனும் அவனுக்கு கொடுத்த தெய்வீக ஆலோசனைகள் அவனுக்கு நினைவுக்கு வந்தன. தனது வாழ்க்கையை தேவனிடத்தில் ஒப்புவித்து தனது வருமானத்தின் ஒவ்வொரு டாலரிலும் பத்தில் ஒரு பங்கை தசமபாகமாக தேவனுக்கு கொடுக்க முடிவெடுத்தான். முதல் டாலர் வருமானம் வந்ததும் அதில் பத்தில் ஒரு பங்கான பத்து செண்டை தேவனுக்கு கொடுத்தான். தொடர்ந்து அவன் அதை செய்ய ஆரம்பித்தான். டாலர்கள் கொட்ட ஆரம்பித்தன. சீக்கிரத்தில் இவன் ஒரு சோப்பு செய்யும் நிறுவனத்தின் பங்குதாரர் ஆனான். சில வருடங்கள் கழித்து இவன் உடன் பங்குதாரர் மரித்து போகவே மொத்த நிறுவனத்தின் பொறுப்பும் இவன் கையில் வந்தது. இவன் இப்போது ஒரு மிகப்பெரிய தொழில் அதிபர். ஆனாலும் பத்தில் ஒரு பங்கை தேவனுக்கு கராராக செலுத்த தன் கணக்குப்பிள்ளைக்கு உத்தரவிட்டிருந்தார். அதிசயகரமாக இவரது தொழில் வளர்ந்தது.நேர்மையான இந்த மனிதர் பின் தேவனுக்கு பத்தில் இரண்டு பங்கை வழங்க தொடங்கினார்.பின் பத்தில் மூன்று பங்கு, பின் பத்தில் நான்கு பங்கு, பின் பத்தில் ஐந்து பங்கு என இறைவனுக்கு தாராளமாக வழங்கினார். விரைவில் உலகமெங்கும் வீடுகள் தோறும் உச்சரிக்கப்படும் பொருளாகி விட்டது இவர் தயாரிப்புகள்.
அவர் தான் மறைந்து போன வில்லியம் கோல்கேட்(1783–1857).William Colgate கோல்கேட் பிராண்டு தயாரிப்புகளின் நிறுவனர், சொந்தக்காரர். தேவன் மீது கொண்ட அவரது விசுவாசத்துக்கும் நம்பிக்கைக்கும் ஏற்ப அவரது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்ப்பட்டது.கோல்கேட் நிறுவனத்தின் இன்றைய நிர்வாகம் பற்றி நமக்கு அதிகமாய் தெரியாவிட்டாலும் அந்நிறுவனம் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கான இரகசியத்தை நாம் இங்கே கூறியிருக்கிறோம். இக்கதை இங்கே கோல்கேட் பொருட்களை விளம்பரப்படுத்த எழுதப்படாமல் கடவுள் மீது விசுவாசம் கொண்டு அவருக்கு கொடுக்க வேண்டியதை நேர்மையாக கொடுத்து வந்தால் அதை தொடர்ந்து வரும் ஆசீர்வாதத்தை விளம்பரப்படுத்துகிறதாய் இருக்கிறது.
ஆதாரம்
God`s Tenth and Man`s Mite - By Ashley G. Emmer,Signs of the Times, August 2, 1938.
மல்கியா 3:10 என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Monday, August 27, 2012
ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்
முழு நீள ஆடியோ பாடல்
http://www.youtube.com/watch?v=FeADe7mxcxA
உம்மால் கூடும் என்ற ஆல்பத்தில் சகோ.ராபர்ட் ராய் அவர்கள் பாடிய அருமையான பாடல். பாடல் இயற்றியவர் சகோ.வெஸ்லி மேக்ஸ்வெல்
ஒருவரும் சேரக்கூடாத ஒளியில்
வாசம் செய்பவரே (2)
நீரே பரிசுத்த தெய்வம்
நீரே பரிசுத்த தெய்வம்
நீரே நீர் மாத்திரமே
நீரே நீர் மாத்திரமே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
நீரே நீர் மாத்திரமே
எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வ வல்லவரே
உம்மை போல் வேறோரு தேவன் இல்லை
நீரே நீர் மாத்திரமே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
நீரே நீர் மாத்திரமே
Oruvarum Sera Koodaatha Oliyil Vaasam Seypavarey Song Lyrics Written by Bro.Wesley Maxwell and sung by Bro.Robert Roy in Ummaal Koodum album
Saturday, August 25, 2012
மற்ற ஒன்பது பேர் எங்கே?
நம் தேவன் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார் (சங்கீதம் 113:7). ஆனால் அதில் எத்தனை பேர் இறுதி வரைக்கும் இறைவனில் நிலைத்திருக்கிறார்கள் என்றால் மிகவும் சொற்பமே. அன்றொரு நாள் இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பது பேர் எங்கே? (லூக்கா 17:17) என்று கேட்டது போலவே இன்றைக்கும் கேட்க கூடிய நிலை. வல்லமையாக நான் பயன்படுத்திய ஊழியக்காரர்கள் பல பேர் உண்டே. அவர்களையெல்லாம் எங்கே என்று நியாயதீர்ப்பு நாளில் தேவன் தன் சிம்மாசனத்தில் அமர்ந்து கேட்டாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. அன்றைய கால பாலாசீர் லாரி முதல் சமீபத்திய கே.ஏ.பால் வரை அநேக அசரவைக்கும் பின்மாற்றங்கள்.
நம்மில் அநேகருக்கு கே.ஏ.பாலை தெரிந்திருக்க நியாயமில்லை. சகோதரன் தினகரன் அவர்களைப் பற்றி பேசும் போது ஒருநாள் ஒரு இந்து தெலுங்கு நண்பர் கே.ஏ.பாலை பற்றியும் பெரிதாக கூறினார். அப்போது அவரைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. ஆந்திராவிலேயே ஏதோ ஒரு மிகப் பெரிய சபையின் போதகராக இருக்கலாம் என எண்ணம். சொந்தமாக போயிங் 747 விமானம் வைத்திருக்கும் ஒரே இந்திய பிரசங்கியார் என்கிற விபரம் கூட தெரியாதிருந்தது. ஆனால் சமீபத்திய செய்தி விவரங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆரம்ப காலங்களில் மிக வல்லமையாக பயன்படுத்த பட்ட இந்த சகோதரனின் இன்றைய நிலை மிகவும் பரிதாபம். இவரது Global Peace Initiative எனும் இணைய தளம் போனால், தான் பிரபலங்களுடன் (அன்னை தெரசா முதல் லிபிய கடாபி வரை) எடுத்துக்கொண்ட படங்களால் நிறைந்திருக்கிறது. எல்லாம் சுயதம்பட்டம். இவரது Gospel to the Unreached Millions என்ற பணியை நம்பி கோடிக்கணக்கான பணங்கள் நன்கொடைகளாக கொடுக்கப்பட்டன. ஆனால் இப்பணிக்கென ஒரு வெப்சைட் கூட இருப்பதாக தெரியவில்லை. சுவிசேசத்தை விட்டு விட்டு Global Peace Initiative எனும் நிறுவனத்தை பிரதானமாக Non-profit,non-religious என அறிவித்துக் கொண்டு கோடிக்கணக்கில் பணம் சேகரமாக பின் இவர் அரசியலில் புகுந்ததால் அரசியல் விளையாட்டில் இந்நிறுவனத்தின் பணங்கள் ஆந்திர அரசால் முடக்கப்பட்டன. இவரைப் பின் தொடர்ந்து ஆறு வாரங்களை செலவிட்ட ஒரு நிரூபர் கூறும் போது “he only quotes one or two sentences from the Bible, and rarely mentions it” என்றார். இப்போது எல்லாவற்றிற்கும் மேலாக காயீனைப்போல தன் சொந்த சகோதரனையே ஆள் வைத்து கொன்ற கொலைப்பழியில் கையும் மெய்யுமாக போலீசில் சிக்கியிருப்பது மிகவும் வேதனையான விசயம்.சிம்சோனைப் போல இப்போதாவது மீண்டும் தேவனிடம் வந்து சரணடைந்தால் இவருக்கு நலமாயிருக்கும்.
பிரியமானவர்களே! பிரபலமான தேவ ஊழியர்களுக்கு வரும் சோதனைகளும் பயங்கரமானவைகள். இவைகளிலிருந்தெல்லாம் தேவன் அவர்களை தப்புவித்து கடைசி வரைக்கும் போராடி ஜெயிக்க பெலன் கொடுக்க தேவ பிள்ளைகள் நாமெல்லாரும் ஜெபிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
மேலும் விவரங்கள்.
தானியேல் 12:3 ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
வெளி 12:4 அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று;
நம்மில் அநேகருக்கு கே.ஏ.பாலை தெரிந்திருக்க நியாயமில்லை. சகோதரன் தினகரன் அவர்களைப் பற்றி பேசும் போது ஒருநாள் ஒரு இந்து தெலுங்கு நண்பர் கே.ஏ.பாலை பற்றியும் பெரிதாக கூறினார். அப்போது அவரைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. ஆந்திராவிலேயே ஏதோ ஒரு மிகப் பெரிய சபையின் போதகராக இருக்கலாம் என எண்ணம். சொந்தமாக போயிங் 747 விமானம் வைத்திருக்கும் ஒரே இந்திய பிரசங்கியார் என்கிற விபரம் கூட தெரியாதிருந்தது. ஆனால் சமீபத்திய செய்தி விவரங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆரம்ப காலங்களில் மிக வல்லமையாக பயன்படுத்த பட்ட இந்த சகோதரனின் இன்றைய நிலை மிகவும் பரிதாபம். இவரது Global Peace Initiative எனும் இணைய தளம் போனால், தான் பிரபலங்களுடன் (அன்னை தெரசா முதல் லிபிய கடாபி வரை) எடுத்துக்கொண்ட படங்களால் நிறைந்திருக்கிறது. எல்லாம் சுயதம்பட்டம். இவரது Gospel to the Unreached Millions என்ற பணியை நம்பி கோடிக்கணக்கான பணங்கள் நன்கொடைகளாக கொடுக்கப்பட்டன. ஆனால் இப்பணிக்கென ஒரு வெப்சைட் கூட இருப்பதாக தெரியவில்லை. சுவிசேசத்தை விட்டு விட்டு Global Peace Initiative எனும் நிறுவனத்தை பிரதானமாக Non-profit,non-religious என அறிவித்துக் கொண்டு கோடிக்கணக்கில் பணம் சேகரமாக பின் இவர் அரசியலில் புகுந்ததால் அரசியல் விளையாட்டில் இந்நிறுவனத்தின் பணங்கள் ஆந்திர அரசால் முடக்கப்பட்டன. இவரைப் பின் தொடர்ந்து ஆறு வாரங்களை செலவிட்ட ஒரு நிரூபர் கூறும் போது “he only quotes one or two sentences from the Bible, and rarely mentions it” என்றார். இப்போது எல்லாவற்றிற்கும் மேலாக காயீனைப்போல தன் சொந்த சகோதரனையே ஆள் வைத்து கொன்ற கொலைப்பழியில் கையும் மெய்யுமாக போலீசில் சிக்கியிருப்பது மிகவும் வேதனையான விசயம்.சிம்சோனைப் போல இப்போதாவது மீண்டும் தேவனிடம் வந்து சரணடைந்தால் இவருக்கு நலமாயிருக்கும்.
பிரியமானவர்களே! பிரபலமான தேவ ஊழியர்களுக்கு வரும் சோதனைகளும் பயங்கரமானவைகள். இவைகளிலிருந்தெல்லாம் தேவன் அவர்களை தப்புவித்து கடைசி வரைக்கும் போராடி ஜெயிக்க பெலன் கொடுக்க தேவ பிள்ளைகள் நாமெல்லாரும் ஜெபிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
மேலும் விவரங்கள்.
தானியேல் 12:3 ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
வெளி 12:4 அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று;
Tuesday, August 21, 2012
பிற மதத்தவருடன் வாக்குவாதம் செய்யலாமா? - குறும்பதில்கள்
விளக்கம் கொடுப்பது என்பது வேறு, வாக்குவாதம் செய்வது என்பது வேறு.
எனவே இரு விதமான ஜனங்கள் இருக்கிறார்கள். சிலர் உண்மையாகவே ஆத்துமாவில் தாகம் கொண்டு சில பல கேள்விகளை கேட்டு விளக்கம் கேட்பார்கள். இவர்கள் கேள்விகளிலும் குரலிலும் அவர்கள் தாகமும் ஏக்கமும் தெரியும். இது போன்றவர்களுக்கு ஜெபத்துடன் பதில் அளிப்பதில் தவறேதும் இல்லை. அதை விட்டு விட்டு நேருக்கு நேர் வருகிறாயா? ஒரே மேடையில் விவாதிக்கலாமா என சவாலிடும் நபர்களிடமிருந்து விலகியிருப்பதே நல்லது. ஏனென்றால் வேதம் சொல்லுகிறது பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.(மத்தேயு 7:6) இப்படி உங்களையும் பீறிப்போடும் அபாயம் இருப்பதால் நீங்கள் நீங்கி இருப்பதே உத்தமம்.
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர் (சங்கீதம் 51:17) இளகிய மனதும் நொறுங்குண்ட மனதும் உள்ளவர்கள் தேவனைத் தேடி கண்டு கொள்வார்கள். வாக்குவாதம் செய்பவர்கள் மனது ஏற்கனவே கடினப்பட்டு இருப்பதால் எத்தனை தான் மழைபெய்தாலும் அவர்கள் இதயம் நீர்த்துபோவதில்லை. மேலும் வேதம் சொல்லுகிறது ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன் (I கொரிந்தியர்:11:16) என்று.
தெரியாதவன் கேள்வி கேட்டால் அவனுக்கு பதில் அளிக்கலாம். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதவன் கேள்வி கேட்டால் நாமும் முட்டளாக்கப்படுவோம். வாக்குவாதம் செய்பவனுக்கு பதில் கூறக்கூடாது. காரணம், ஒத்துக் கொள்ள மனதில்லாததால்தான் அவன் வாக்குவாதத்தில் இறங்குகிறான் நாம் அவனிடம் பேசி பிரயோஜனமில்லை.எனவே கிறிஸ்தவர்கள் வாக்குவாதம் செய்யக்கூடாது.
1 கொரி 1:18.சிலுவைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது. இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது.
மேலும் விவரங்கள்
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர் (சங்கீதம் 51:17) இளகிய மனதும் நொறுங்குண்ட மனதும் உள்ளவர்கள் தேவனைத் தேடி கண்டு கொள்வார்கள். வாக்குவாதம் செய்பவர்கள் மனது ஏற்கனவே கடினப்பட்டு இருப்பதால் எத்தனை தான் மழைபெய்தாலும் அவர்கள் இதயம் நீர்த்துபோவதில்லை. மேலும் வேதம் சொல்லுகிறது ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன் (I கொரிந்தியர்:11:16) என்று.
தெரியாதவன் கேள்வி கேட்டால் அவனுக்கு பதில் அளிக்கலாம். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதவன் கேள்வி கேட்டால் நாமும் முட்டளாக்கப்படுவோம். வாக்குவாதம் செய்பவனுக்கு பதில் கூறக்கூடாது. காரணம், ஒத்துக் கொள்ள மனதில்லாததால்தான் அவன் வாக்குவாதத்தில் இறங்குகிறான் நாம் அவனிடம் பேசி பிரயோஜனமில்லை.எனவே கிறிஸ்தவர்கள் வாக்குவாதம் செய்யக்கூடாது.
1 கொரி 1:18.சிலுவைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது. இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது.
மேலும் விவரங்கள்
Saturday, August 18, 2012
உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும்
அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் வரும் 2014-ஆம் ஆண்டில் மிகப்பெரிய நிகழ்வுவொன்று நடக்கவிருக்கின்றதாம். மிசிசிபி ஆறும் மிசவுரி ஆறும் கூடும் இவ்விடத்தில் இந்தியாவிலிருந்து 350,000 நிர்வாண சாமியார்கள் (naga sadhu) பறந்துவர மாபெரும் கும்பமேளாவுக்கு திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் ஸ்பான்சர் செய்பவர்கள் ரெடிமேட் ஆடைகளில் புகழ்பெற்ற Gap மற்றும் Banana Republic நிறுவனங்கள். அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் கூட இந்நிகழ்வைத்தொடந்து விபூதி-வெண்மை ஐபோன் ஒன்றை அறிமுகப்படுத்தவும் iBathed என்றொரு அப்பிளிகேஷனை அறிமுகப்படுத்தவும் முன்வந்துள்ளதாம்.செயிண்ட் லூயிஸ் நகராட்சி ஒரு பெரிய இடத்தை இந்நிகழ்வுக்காக ஒதுக்க அனுமதித்துள்ளது.
http://www.hinduismtoday.com/blogs-news/hindu-press-international/major-retailer-sponsors-2014-kumbha-mela-in-america/10962.html
ஆனால் இந்நகரின் இன்றைய நிலை மிக பரிதாபம் மிசிசிபி ஆறு கடும் வறட்சியினால் வற்றிக்கொண்டிருக்கிறதாம். வழக்கத்துக்குமாறாக 13 அடி தாழ்வாக நீர்மட்டம். இது இப்படியே தொடந்தால் கப்பல் மற்றும் படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டு தினமும் மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது இப்படியிருக்க வறட்சியின் ஆரம்பகட்டத்திலேயே ஒரு மனம் வருந்தும் சம்பவம் செயிண்ட் லூயிஸ் நகரில் நடந்துள்ளது. செயிண்ட் லூயிஸ் நகரின் ஒரு சர்ச் இலவசமாக உணவு வழங்குவதாக ஒரு செய்தி பரவ எல்லோரும் அதிசயிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான ஜனங்கள் அங்கு கட்டுக்கடங்காமல் கூடி விட்டதால் மிகப்பெரிய குழப்பம் கொந்தளிப்பே அங்கு உருவாகிவிட்டது. போலீசார் வந்து ஜனங்களை கலைத்துவிட்டிருக்கிறார்கள். ஆப்ரிக்காவில் அல்ல. அமெரிக்காவின் நிலமை இது.ஜெபமே ஜெயம்.பிரியமானவர்களே நீங்கள் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் (ஜெபத்தில்) அழுங்கள்.(லூக்கா 23:28)
எரேமியா:50:38. வறட்சி அதின் தண்ணீர்கள்மேல் வரும் அவைகள் வறண்டுபோம்; அது விக்கிரக தேசம்; அருக்களிப்பான சிலைகளின்மேல் மனமயங்கியிருக்கிறார்கள்.
http://www.hinduismtoday.com/blogs-news/hindu-press-international/major-retailer-sponsors-2014-kumbha-mela-in-america/10962.html
ஆனால் இந்நகரின் இன்றைய நிலை மிக பரிதாபம் மிசிசிபி ஆறு கடும் வறட்சியினால் வற்றிக்கொண்டிருக்கிறதாம். வழக்கத்துக்குமாறாக 13 அடி தாழ்வாக நீர்மட்டம். இது இப்படியே தொடந்தால் கப்பல் மற்றும் படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டு தினமும் மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது இப்படியிருக்க வறட்சியின் ஆரம்பகட்டத்திலேயே ஒரு மனம் வருந்தும் சம்பவம் செயிண்ட் லூயிஸ் நகரில் நடந்துள்ளது. செயிண்ட் லூயிஸ் நகரின் ஒரு சர்ச் இலவசமாக உணவு வழங்குவதாக ஒரு செய்தி பரவ எல்லோரும் அதிசயிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான ஜனங்கள் அங்கு கட்டுக்கடங்காமல் கூடி விட்டதால் மிகப்பெரிய குழப்பம் கொந்தளிப்பே அங்கு உருவாகிவிட்டது. போலீசார் வந்து ஜனங்களை கலைத்துவிட்டிருக்கிறார்கள். ஆப்ரிக்காவில் அல்ல. அமெரிக்காவின் நிலமை இது.ஜெபமே ஜெயம்.பிரியமானவர்களே நீங்கள் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் (ஜெபத்தில்) அழுங்கள்.(லூக்கா 23:28)
எரேமியா:50:38. வறட்சி அதின் தண்ணீர்கள்மேல் வரும் அவைகள் வறண்டுபோம்; அது விக்கிரக தேசம்; அருக்களிப்பான சிலைகளின்மேல் மனமயங்கியிருக்கிறார்கள்.
Thursday, August 16, 2012
வெளிப்படுத்தின விஷேசத்தின் ஆழ்ந்த சத்தியங்கள்
அன்றன்றுள்ள அப்பம் ஊழியங்கள் வழங்கும் வெளிப்படுத்தின விஷேசத்தின் ஆழ்ந்த சத்தியங்கள்-வீடியோ செய்திகள் தொகுப்பு.தேவ செய்திகள் வழங்குபவர்: சகோ.J.சாம் ஜெபத்துரை
Antantulla Appam Ministries, Elim Glorious Revival Church - Revelation bible study by Bro.J.Sam Jebadurai
Antantulla Appam Ministries, Elim Glorious Revival Church - Revelation bible study by Bro.J.Sam Jebadurai