இன்றைக்கும் யூத சமுதாயம் பூமியில் பிழைத்திருப்பது வரலாற்று அறிஞர்கள் பலருக்கும் ஆச்சரியமான ஒரு விசயம்.பல்வேறு போராட்டங்கள் கலகங்கள் எதிர்ப்புகள் சிறைபிடிப்புகள் சிதறடித்தல்கள் படுகொலைகள் மத்தியிலும் இன்னும் அந்த சமுதாயம் தனி கலாச்சாரம் பண்பாடு மதம் மொழியென வாழ்ந்து கொண்டிருப்பது வியக்க தகு காரியம்.ஆனால் அவர்களின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் இரகசியம் பலருக்கும் தெரியாது. 1986ம் வருடத்திய சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்றவர் எலியேசர் வீசல் (Eliezer Wiesel) .இவர் ஒரு யூதர். நாசிக்களின் யூத படுகொலையிலிருந்து (Holocaust) தப்பியரும் பிரபல விரியுரையாளரும் ஆவார். ஒரு முறை திபத்திய மத தலைவரான தலாய்லாமா வீசலை சந்திக்க ஆர்வம் தெரிவித்தார். வியந்து போன வீசல் காரணம் அறிய முற்பட்டபோது, தலாய் லாமா சொன்ன பதில் இது தான்."உங்கள் இனத்தார் படாத பாடுகள் இல்லை இன்னல்கள் இல்லை.2000 ஆண்டுகளுக்கு முன் சிறைபிடிக்கபட்டு போனார்கள். ஆனாலும் இன்றைக்கு பிழைத்திருக்கிறார்கள். நாங்கள் எங்கள் தேசத்தை விட்டு வெளியே வந்தோம். ஆனால் இன்றும் அகதிகளாகவே இருக்கிறோம்.கற்றுத்தாருங்கள் நீங்கள் எப்படி பிழைத்தீர்களென". (Spector,S.A;2011)
யூத குலம் இன்னும் வாழ்வதின் இரகசியம் இது தான். அது தலாய் லாமாவுக்கு கூட தெரியாத இரகசியம்.
"உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே." யாத் 20:2.
"நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்." எசேக்கியேல் 36:24
"அவர்களை அழைத்துக்கொண்டுவருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." சகரியா 8 :8
இந்த ஜீவனுள்ள தேவனை நீயும் அண்டிக் கொள்வாயா?
Reference: Romanticism/Judaica: A Convergence of Cultures.By Sheila A. Spector (2011) Pg 13
No comments:
Post a Comment