
http://english.peopledaily.com.cn/90001/90777/90852/6578029.html


http://www.timesonline.co.uk/tol/news/world/us_and_americas/article5567187.ece

அமெரிக்காவின் நாற்பத்து நான்காவது அதிபராக பதவியேற்ற பராக் உசேன் ஒபாமா தனது பதவியேற்பு விழாவில் ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய மிகப்பழமையான வேதாகமத்தின் மேல் தன் கையை வைத்து பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.ஆனால் அடுத்த நாளே முதல் நாள் செய்த பதவிப்பிரமாண வாக்குமூலத்தில் ஏதோ தவறுகள் இருந்ததாகக் கூறி இன்னொரு முறை பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் ஆனால் இந்த முறை எந்த வேதாகமமும் இன்றி.யாரையோ திருப்திபடுத்த அவர் அப்படி செய்திருக்கலாம்.
வேதம் சொல்கிறது
என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.(I சாமுவேல் 2:30).
மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணுவேன்.(மத்தேயு 10:32)
மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார்.(லூக்கா 12:8 )
தமிழக சட்டமன்றத்தில் கூட ஒரு அமைச்சர் பைபிளோடு பதவியேற்றிருக்கிறார். புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் தமிழகத்தில் நல்லாட்சி தந்திட நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டியது நம்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது.
Iதீமோ:2:1,2,3 எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.

No comments:
Post a Comment