
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டபின் அவன் உடலையோ அல்லது அடக்கத்தையோ யாரும் லைவ் டெலிகாஸ்ட் செய்யவில்லை. ஆனால் அவன் மரணத்தை பலரும் குறிப்பாக அமெரிக்க இளைஞர்கள் கொண்டாடினார்கள். உங்களுக்குத் தெரியுமா இன்னொரு படுகொலை நடக்கவிருக்கிறது. அதில் இருவர் கொல்லப்படுவார்கள். அப்போது உலக ஜனங்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள். நீங்கள் அந்த சம்பவம் குறித்து கேள்வி பட்டிருக்கிறீர்களா? வெளிப்படுத்தின விசேசம் 11ம் அதிகாரம் நடைபெறப்போகும் அந்த சம்பவத்தை விவரிக்கிறது. இச்சம்பவமானது அந்திகிறிஸ்துவின் காலத்தில் அதாவது உபத்திரவகாலத்தில் நடைபெறும். இரண்டு சாட்சிகள் தோன்றி ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள். அக்காலத்தில் அவர்களால் மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்கவும், தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச்சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களால் முடியும்.இறுயில் அவர்கள் கொல்லப்பட அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் (எருசலேமின்) விசாலமான வீதியிலே கிடக்கும்.
ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள் வரைக்கும் பார்ப்பார்கள் என்பதாக வேதம் விவரிக்கிறது. இதற்கு தோதாக இன்றைக்கு விஞ்ஞான வசதிகள் வந்திருக்கிறது. டெலிவிசனிலும் இண்டர்நெட்டிலும் லைவ் டெலிகாஸ்டுகள், லைவ் ஸ்டிறீம்கள் என உலகமெங்கும் ஒரு சம்பவத்தை ஒரே நேரத்தில் பார்க்கலாம்.

கத்தே,வில்லியம் ராயல் திருமணத்தை உலகம் முழுவதும் 200 கோடி பேர் பார்த்து ரசித்தனராம். இந்தியா-இலங்கை மோதிய உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை 6.8 கோடி பேர் பார்த்து ரசித்தனராம்.அது போலவே ஜனங்கள் வெகுமதிகளை அனுப்ப பெற Fedex,DHL,UPS கூரியர் கம்பெனிகள் ரெடி, கிரீட்டிங் கார்டுகள், ஆன்லைன் கிரீட்டிங் கார்டுகள்,ஹால்மார்க் கார்டுகளென அந்த சம்பவத்துக்கு மொத்த உலகமே ரெடி.
http://www.dinamani.com/edition/story.aspx?&artid=412856http://www.dinamalar.com/News_Detail.asp?Id=233396http://www.maalaimalar.com/2011/04/04114723/world-cup-cricket-india-vs-sri.html
No comments:
Post a Comment