உம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்



உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை
அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை
அம்மானும் கூப்பிடவா (2)

உம்மை அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானும் கூப்பிடவா

கருவில் என்னை காத்தத பார்த்தா
அம்மானு சொல்லனும்
உம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
அம்மானு சொல்லனும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
அப்பானு சொல்லனும்

என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா
அம்மானு சொல்லனும்
என் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா
அம்மானு சொல்லனும்
உம் இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
அப்பானு சொல்லனும்

-பாஸ்டர்.வெஸ்லி (அரியலூர்)

Sunday, August 26, 2007

எந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்


Enthan yesaiyah Tamil christian Song from yesu vidivikkiraar naalumaavadi Mohan C Lazarus Ministry

Saturday, August 25, 2007

இராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்

பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் இராஜாராம் மோகன் ராய்(May 22, 1772 – September 27, 1833). அவர் கிறிஸ்துவின் போதகத்தை பற்றி இவ்வாறு கூறுகிறார்.

"நான் அறிந்த சகல போதகங்களுக்குள்ளும் கிறிஸ்துவின் போதகமே மனுஷ வர்க்கத்துக்குள் அனந்தம் பேருக்கு நன்மை விளைவிக்கக் கூடியது.அது ஒன்றே அதிக நற்பலனைத் தருவது"

கிறிஸ்துவின் போதகம் என்ன?
யோவான்:15:12.
நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.

John:15:12
This is my commandment, That ye love one another, as I have loved you.

Friday, August 17, 2007

அல்லாவும் யாவேயும் தேவனும் ஒன்றா?

நெதர்லாந்தை சேர்ந்த ரோமன் கத்தோலிக்க பிஷப் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்.

"Allah is a very beautiful word for God. Shouldn't we all say that from now on we will name God Allah? ... What does God care what we call him? It is our problem,"

- Roman Catholic bishop Tiny Muskens, from Netherlands (Southern diocese of Breda) on Dutch television

அது நல்ல விஷயமே என பல இஸ்லாமிய நண்பர்களும் ஒத்துகொள்கின்றனர்.

"It reinforces the fact that Muslims, Christians and Jews all worship the same God,I don't think the name is as important as the belief in God and following God's moral principles. I think that's true for all faiths."

-Ibrahim Hooper the Council on American-Islamic Relations, Washington, D.C.

பெயரில் என்ன இருக்கிறது? ரோஜாவை ரோஜாவென அழைக்காவிட்டாலும் அது மணக்கவே செய்யும் என்ற ஷேக்ஸ்பியரின் வாக்கியம் கிறிஸ்தவர்களாகிய நமக்கு பொருந்துவதில்லை.ஏனெனில் பெயரில் என்னமோ இருக்கிறது.ஆதனாலேயே கடவுள் ஆபிராமின் பெயரை ஆபிரகாமென மாற்றி மகிழ்ந்தார்.(ஆதியாகமம் 17:5)யாக்கோபின் பெயரை இஸ்ரவேலென கூப்பிட்டு மகிழ்ந்தார்.(ஆதியாகமம் 32:28).சீமோனை பேதுரு என பெயர் மாற்றி மகிழ்ந்தார்.(மாற்கு 3:16)

உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.(யாத்திராகமம் 20:7.)

Exodus 20:7
Thou shalt not take the name of the LORD thy God in vain; for the LORD will not hold him guiltless that taketh his name in vain.

Tuesday, August 07, 2007

குயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்


Kuyavane Kuyavaney Padaippin Kaarananee Tamil video Song

குயவனே, குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே

வெறுமையான பாத்திரம் நான் வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமே

வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம்
இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே

இறைவனே இறைவனே இணையில்லாதவனே
குறை நிறைந்த என்னையுமே
கண்ணோக்கி பார்த்திடுமே

விலைபோகாத பாத்திரம் நான்
விரும்புவார் இல்லையே
விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே

தடைகள் யாவும் நீக்கி என்னைத்தம்மைப்போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே உடமையாக்கிடுமே

மேய்ப்பனே மேய்ப்பனே மந்தையை காப்பவனே
மார்க்கம் அகன்ற என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே

மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின்பற்றியே
கண்டேன் இல்லை இன்பமே
காணாமல் போன பாத்திரம் என்னைத்
தேடிவந்த தெய்வமே

வாழ்நாளெல்லாம் உம் பாதம்
செல்லும் பாதையில் நடத்திடுமே

Thursday, August 02, 2007

லேசான காரியம் உமக்கது லேசான காரியம்



Lesaana Kaariyam Umakkathu Leysaana Kariyam Tamil Christian Song

லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் [ 2 ]

பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் [2 ]
மண்ணான மனுவுக்கு மன்னாவை அழிப்பது லேசான காரியம் [2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் [ 2 ]
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் [ 2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

இடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது லேசான காரியம் [ 2 ]
இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் [ 2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
இயேசுவுக்கு லேசான காரியம்
என் இயேசுவுக்கு லேசான காரியம் [2]