ஆதி மனிதர்கள்
அப்படியான ஒரு நம்பிக்கை ஆனது வேற்றுகிரக வாசிகள் எனப்படும் ஏலியன்கள் மீதும், அவைகள் பூமிக்கு வந்து போக உதவிய யூஎப்ஓ எனப்படும் பறக்கும் தட்டுகளும் மீதும் உள்ளன. ஆதி மனிதர்கள் தங்களின் குகை ஓவியங்களில் பறக்கும் தட்டுகளை வரைந்து வைத்துள்ளது தொடங்கி அதி நவீன கேமராக்களில் சிக்கியது வரையிலாக, பறக்கும் தட்டுகள் மீதான ஆதாரங்கள் ஏகப்பட்டது உள்ளன. ஆனால், இது சார்ந்த ஒரு ஆதாரம் புனித நூலான பைபிளில் உள்ளது என்கிற விவரம் உங்களுக்கு தெரியுமா?
கி.மு 6 ஆம் நூற்றாண்டில்
ஆம், கி.மு 6 ஆம் நூற்றாண்டில், எபிரெயர் தீர்க்கதரிசியான எசேக்கியேலுக்கு 30 வயது எட்டி இருந்தது. கெபாரார் ஆற்றின் குறுக்கே நடந்து கொண்டு இருந்தார், (தற்போது அது ஈராக் ஆக இருக்கலாம்), அப்போது வடக்கில் இருந்து வரும் மகத்தான புயல் மேகத்தையும், மின்னலின் சூழல்களையும் காண்கிறார். அதற்கு நடுவில் ஒளிரும் உலோகம் ஒன்றை அவர் பார்க்கிறார். அதனுள் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் முகங்களை கொண்டிருந்த நான்கு இறக்கை கொண்ட உயிரினங்களை பார்க்கிறார். என்கிறது எசேக்கியேல் 1: 1-28.
வேற்று கிரகவாசிகள்
பூமிக்கு வந்த அந்த பார்வையாளர்கள் தரை இறங்கியபோது, எசேக்கியேல், அந்த உலோகங்கள் ஆனது "ஒரு சக்கரம், இன்னொரு சக்கரத்தை குறுக்கிடுவது போல் இருப்பதை காண்கிறார். அந்த வாகனங்கள் கூறப்படும் உயிரினங்களை தரையில் இருந்து மேல் எழும்ப உதவுகிறது. எசேக்கியேல் அதை தேவதூதர்களோடு சேர்ந்த கடவுளின் தரிசனமாக எடுத்துக் கொண்டார், ஆனால் நவீன கால பறக்கும் தட்டு ஆய்வாளர்களை பொறுத்தவரை (UFOologists), அந்த உயிரினங்கள் ஆனது வேற்றுகிரக வாசிகளாக இருக்கலாம் என்றும், அவர்களை பறக்க வைக்க உதவிய சக்கரங்கள் ஆனது பறக்கும் தட்டுகளாக இருக்கலாம் என்றும், இது வேற்று கிரகவாசிகள் பூமிக்கு விஜயம் செய்து உள்ளதற்கான ஆகப்பெரும் ஆதாரம் ஆகும்.
எசேக்கியேலின்
வலிமைமிக்க தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலின் விஷயத்தில், அவர் ஒரு அற்புதமான அனுபவத்தை கண்டு உள்ளார். அது வேறு எவரும் காணாத ஒன்றை விளக்குகிறது. அதை உரை நிகழ்வுகளும் விவரிக்கிறது. இது நிஜமா, இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது?
அற்புதமான ஒளித் தோற்றம்
எசேக்கியேல் பார்த்த அந்த யுஎப்ஒ ஆனது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதாவது சக்கரங்கள், இறக்கைகள், உயிருள்ள ஜீவராசிகள் மற்றும் மின்னல் வேக பயணம் ஆகிய அனைத்தையும் அவர் விவரிக்கிறார். இந்த விசித்திரமான காட்சியில் ஒரு சிம்மாசனமும், அதில் அமர்ந்து உள்ளவரை சுற்றி ஒரு அற்புதமான ஒளித் தோற்றம் இருப்பதையும் அவர் விவரிக்கிறார். ஆனால் பத்தியின் தொடக்கத்தில் (Vs. 1) மற்றும் இறுதியில் (Vs. 28), எசேக்கியேல் மிகவும் தெளிவாக அது கடவுளின் தரிசனம் என்று கூறுகிறார்.
சர்வ வல்லமையுடையவர்
இந்த இடத்தில 'வாகனம்' என்று கூறப்படும் பொருள் ஆனது ஒரே நேரத்தில் அனைத்து திசைகளிலும் சென்றது என்று (அதாவது ஒரு உண்மையான வாகனத்தினால் செய்ய முடியாத ஒன்றை செய்ததாக) குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவரிப்பு ஆனது கடவுள் எல்லா இடங்களிலும் ஒரே சமயத்தில் (சர்வ வல்லமையுடையவர்) இருப்பதையும், அவர் நம் புரிதலுக்குக் கட்டுப்படுவது இல்லை என்பதே அர்த்தம் ஆகிறது.
'கிராஃப்ட்'
சில யூ எப் ஓ நம்பிக்கையாளர்கள், இந்த பைபிள் குறிப்பை, கடவுளை பற்றிய விவரிப்பு என்றே நம்புகினறனர். ஆனால் மறு சிலரோ, எசேக்கியேல் எந்த ஒரு இடத்திலும், அவர் விவரிக்க விரும்பிய வாகனத்தை 'ஷிப்' என்றோ, 'கிராஃப்ட்' என்றோ கூறவில்லை, வேற்று கிரகம் என்கிற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்றாலும் கூட அது இன்னமும் ஒரு யுஎஃப்ஒ வை பற்றியது தான் என்று நம்புகின்றனர்.
பறக்கும் தட்டு
பொதுவான ஆய்வாளர்களிடம் சென்று கருத்து கேட்டால் "பறக்கும் தட்டுகளையும், வேற்றுகிரக வாசிகளை பற்றியும் ஆராயும் மக்களால், புனித நூலான பைபிள் தவறாக புரிந்துகொள்ளப்படுவது ஒன்றும் புதிது அல்ல" என்று கூறுகின்றனர். இந்த இடத்தில் யார் கருத்தை ஏற்றுக்கொள்வது என்பது நாம் ஆரம்பத்தில் பேசிய நம்பிக்கையை பொறுத்தது.
No comments:
Post a Comment