

கூடவே பல தேசங்களும் பூமி அதிர்வுக்குள்ளாகின்றன.தமிழகம் ஒருகாலமும் பார்த்திராத நிலநடுக்கங்கள் இப்போது சகஜமாகியிருக்கின்றது.இன்றைக்கு அபூர்வமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க தலைநகரம் வாசிங்டன் முதல் நியூயார்க் நகரம் வரை இந்த அதிர்வை உணர்ந்திருக்கின்றன.


வாழ்நாட்களில் ஒரு நாள்கூட பூமிஅதிர்ச்சியை பார்த்திராத வயதான பெரியவர்களெல்லாம் இப்போது பூமிஅதிர்ச்சியை பார்க்கிறார்கள் உணர்கிறார்கள்.கேட்டால் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை ஒன்றும் கூடவில்லை.நிலநடுக்கத்தை பதிவுசெய்யும் தொழில்நுட்பங்கள் தான் அதிகரித்திருக்கின்றன.இதனால் தான் நமக்கு பூமிஅதிர்ச்சிகளின் எண்ணிக்கை கூடியிருப்பது போல தோன்றுகிறதுவென சப்பை கட்டு கட்டுவார்கள். வாழ்க அவர்களும் அவர்கள் விஞ்ஞானமும்.இன்னும் எவ்வளவு காலம் தான் கண்ணைமூடி வைத்துக்கொண்டே இருட்டாய் இருக்கிறதுவென சொல்லி சம்மாளிப்பார்களோ தெரியவில்லை. இந்த அசைவுகளும் அதிர்வுகளும் தூங்கிக்கொண்டிருக்கும் மற்றும் தூங்குவது போல நடித்துக் கொண்டிருக்கும் நம்மில் பல பேர்களை எழுப்பத்தான் என்பதை நம்மில் யார் அறிவார். காலத்தை அறிந்தவர்களாய் நாம் நித்திரையைவிட்டு எழும்ப கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக.
ரோமர் 13:11 நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.
God's great
ReplyDeleteJESUS name above all name
ReplyDelete