Tuesday, March 29, 2011

இக்கல்லில் மோதுபவன் அவன் நொறுங்கிப்போய்விடுவான்

சமீபத்தில் டுனீசியா மற்றும் எகிப்து நாடுகளில் மக்கள் புரட்சி ஏற்பட்டு அதனால் ஆட்சி மாற்றங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து கடந்த பெப்ரவரி மாதம் 13-ம் தியதி பேசிய லிபிய அதிபர் கடாபி இது பிரபல புரட்சிகள் நடைபெறும் காலம். இந்த சமயத்தை பயன் படுத்தி பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும். நாம் உலகத்துக்கு ஒரு பிரச்சனையை உருவாக்க வேண்டும்.இது போர் பிரகடனமல்ல. சமாதானத்துக்கான ஒரு அழைப்பே. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை வெள்ளை நிறமாக குறிப்பிட்ட அவர் வெள்ளை நிறம் பச்சை நிறத்தை ஒழிக்க நினைக்கின்றது.இஸ்ரேல் தேசத்தோடு நல்லுறவு கொண்டுள்ள அரபு தேசங்களெல்லாம் மோசமான தேசங்கள் என அவர் குறிப்பிட்டார். இஸ்ரேலில் குழப்பத்தை உண்டாக்க ஆலோசனை சொன்ன கடாபிக்கு சில நாட்களிலேயே அவர் சொந்த தேசமான லிபியாவிலேயே மக்கள் புரட்சி ஏற்பட்டது. இன்றைய செய்தி இவ்வாறாக சொல்கிறது “கடாபியின் சொந்த ஊரில் மோதல் : ஓரிரு நாளில் கதைமுடியும்”

மத்தேயு 21:44 இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன் மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

லூக்கா 20:18 அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்றார்.

சங்கீதம் 7:15 குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.

சங்கீதம் 9:15 ஜாதிகள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்;

எஸ்தர் 7:10 அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்

சகரியா 12:3 அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்

References
http://www.msnbc.msn.com/id/41564012/ns/world_news-mideast/n_africa/
http://af.reuters.com/article/tunisiaNews/idAFLDE71C0KP20110213

No comments:

Post a Comment