தானியேல் 2-ம் அதிகாரம் 41. பாதங்களும் கால்விரல்களும் பாதிகுயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும்; ஆனாலும் களிமண் இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும்.42. கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால் அந்த ராஜ்யம் ஒருபங்கு உயரமும் ஒருபங்கு நெரிசலுமாயிருக்கும். 43. நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங்கலப்பார்கள்; ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.
மேதிய பெர்சிய அரசுக்குப் பிறகு, நேபுகாத்நேச்சார் கண்ட சிலையின் வெண்கலதினாலான வயிறு தொடை இவற்றிற்கு ஒப்பான இன்னொரு வல்லரசு எழும்பும் என்ற தானியேலின் கூற்றின்படி கிரேக்க சாம்ராஜ்யம் உலகில் ஸ்தாபிக்கபடுகிறது. அதற்கு பிறகு சிலையின் இரும்பிலான கால்களுக்கு ஒப்பாக நான்காவதாய் ஒரு வல்லரசு எழும்பும், என்று தானியேல் முன்னறிவித்தபடி ரோமப்பேரரசு கிரேக்க சாம்ராஜ்யத்தின் முடிவில் எழும்புகிறது.இரும்பைப்போல உரம் வாய்ந்ததாய் எழும்பின ரோமப்பேரரசு , சிலையின் இரு கால்களுக்கு ஏற்ப கிழக்கு,மேற்கு என்று இரண்டாக பிரிகிறது. இவையாவும் சரித்திரமாகும். இவ்வாறு தீர்க்கதரிசனங்கள் சரித்திரப்பூர்வமாய் நிறைவேறுவது கிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகளில் முக்கியமானதாகும்.
நேபுகாத்நேச்சார் கண்ட சிலையின் பத்துவிரல்கள் இரும்பும் களிமண்ணுமாய் இருந்தன என்று வேதத்தில் வாசிக்கிறோம். இந்த பத்துவிரல்களும் ஒரு புதிய சாம்ராஜ்யம் என்று தானியேல் கூறவில்லை.அவை ரோம சாம்ராஜ்யத்திலிருந்து எழும்பும் பல நாடுகளின் ஒரு கூட்டமைப்பையே குறிக்கின்றன என்று நாம் நிதானிக்கலாம். தானியேலின் தீர்க்கதரிசனத்தின் படி பாபிலோனிய, மேதிய பெர்சிய, கிரேக்க, ரோமப் பேரரசுகள் உலகின் வல்லரசுகளாய் இருந்து முடிந்துவிட்டன. சிலையின் பத்து விரல்களுக்கு ஒப்பான ரோமப்பேரரசிலிருந்து எழும்பும் சில நாடுகள் சேர்ந்த அமைப்பின் காலத்திற்கு இப்போது உலகம் வந்துள்ளது. அதன்படி 1957 ஆம் ஆண்டு பழைய ரோம சாம்ராஜ்யம் எந்தெந்த நாடுகளில் வியாபித்திருந்ததோ அந்தந்த இடங்களைச் சேர்ந்த ஆறு ஐரோப்பிய நாடுகள் ரோமில் கூடி ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு "European Economic Community"என்ற அமைப்பை ஏற்படுத்தின. இது "ஐரோப்பிய பொதுச்சந்தை" (European Common Market) என்று அழைக்கப்படுகிறது. இது 1958ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி செயல்படத் துவங்கியது. இந்த ஒப்பந்தம் "Treaty of Rome"என்று அழைக்கப்பட்டது. இதனுடைய ஆரம்ப விழா பெல்ஜியத்திலுள்ள பிரசல்சில் கொண்டாடப்பட்டது. ஆறு நாடுகள் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் சேர்ந்திருந்தும் பத்து கொடிக்கம்பங்களுடன் இந்த ஆரம்பவிழா நடந்தது.(இப்போது இதில் 27 ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன) இந்த E.E.C தான் நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனத்தில் தோன்றிய சிலையின் பத்துவிரல்களுக்கு ஒப்பான வல்லரசாகும். இந்த E.E.C ஓரு பொருளாதார அல்லது வாணிப அமைப்புத்தானே. அது எவ்வாறு ஒரு வல்லரசாகலாம் என்ற கேள்வி எழலாம்.இந்த E.E.C நிறைவேற்றிவருகிற தீர்மானங்கள் E.E.C ஒரு வல்லரசாக மாறிவருகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றது.கீழ்கண்டவை E.E.C யின் தீர்மானங்களில் ஒரு சிலவாகும்:
ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் (United states of Europe) என்ற அமைப்பை ஏற்படுத்துதல்.(இது இன்று EU அதாவது European Union என்று ஆகியிருக்கின்றது.)
E.E.C யில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கிடையே பாஸ்போர்ட் முறையை நீக்கிவிடுதல் (ஏற்கனவே European standard passport என்ற பெயரில் அனைத்து அங்கத்தின நாட்டு குடிமக்களுக்கும் burgundy நிறத்தில் பொது பாஸ்போர்ட் இப்போது வழங்கப்படுகிறது.இவர்கள் அங்கத்தின நாடுகளிடையே விசா இன்றி சென்றுவரலாம்)
E.E.C நாடுகளுக்கு ஒரு பொது நாணய முறையைக் கொண்டு வருதல் (Common currency) (ஏற்கனவே வந்தாயிற்று. இன்றைக்கு இதன் 15 அங்கத்தினர்களிடையே யூரோ(Euro)எனும் பொது கரன்சி புழக்கத்திலுள்ளது)
E.E.C நாடுகளுக்கென்று ஒரு தனி பொது ராணுவத்தை நிறுவுதல் (European Union battlegroups (EU BGs) என்ற பெயரில் ஒரு கூட்டுப்படை 2007 முதல் செயல்படத்துவங்கியுள்ளது)

(தொடரும்)
No comments:
Post a Comment