இது உண்மையா இல்லையா என கணவன்மார்கள் தான் சொல்லவேண்டும்.ஓயாமல் வழ வழ என சண்டையிடும் மனைவி, விடாத மாலை வேளை மழை போலவாம்...கணவன்மார்களுக்கு எங்காவது ஓடிவிடத்தோன்றும் போலும்....ஆபீஸிலிருந்து லேட்டாக வர அதுவும் ஒரு காரணம்.
சாக்ரடீஸ் வாழ்வில் நடந்தது என்பார்கள்.ஒருமுறை அவருக்கும் அவர் மனைவிக்கும் வீட்டில் பெரிய சண்டை.இவரோ தன் சீடர்களுக்கு போதித்து கொண்டிருந்தார்.வழ வழ என பேசி சண்டையிட்டுகொண்டிருந்த அவர் மனைவி ஒருகட்டத்தில் ஒரு பாத்திரம் முழுவதும் தண்ணீர் கொண்டுவந்து அவர் மேல் ஊற்றி விட்டார்.சாக்ரடீஸ் தன் சீடர்களை பார்த்து சொன்னாராம் "இவ்வளவு நேரமும் இடிஇடித்தது...இப்போது மழை பொழிகிறது"என்று.
இனிமேல் சில Interesting bible words உங்களுக்காக அவ்வப்போது...
நீதிமொழிகள்:25:24. சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும் வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.
நீதிமொழிகள்:27:15. அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.
Interesting bible words
Proverbs 25 : 24 It is better to dwell in the corner of the housetop, than with a brawling woman and in a wide house.
Proverbs 25 :15 A continual dropping in a very rainy day and a contentious woman are alike.
No comments:
Post a Comment