சிலருக்கு பாட்டன் பெயர் தெரியும். சிலருக்கு முப்பாட்டன் பெயர் தெரியும். சிலருக்கு கொள்ளுபாட்டன் பெயர் கூட தெரியும். ஆனால் எவருக்கும் இயேசுவின் வம்சவரலாறு போன்று ஆதி மனிதனிலிருந்து தான் வரையுள்ள வம்சவரலாறு தெரியாது. உலகின் எந்த மாபெரும் மகானுக்கும் அப்படி தெரியாது. அதுதான் இயேசு கிறிஸ்துவின் விசேஷம்.
Saturday, September 25, 2021
வற்றிப்போய்க் கொண்டிருக்கும் யூப்ரடீஸ் நதி.
பைபிளில் முன்னறிவித்தது போல தற்போது வற்றிப்போய்க் கொண்டிருக்கும் யூப்ரடீஸ் நதி. வீடியோ https://www.youtube.com/watch?v=Sok8bAcuuYk ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐப்பிராத்து என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்: அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்துவரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று. வெளி 16:12
வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி.
உலகின் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் வரிசையில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிக்கு இடம் கிடைத்துள்ளது நமக்கெல்லாம் பெருமையே (Vellore CMC Hospital).
"யெருபாகால்" பெயர் பொறிக்கப்பட்ட பானையோடுகள்.
"யெருபாகால்" என பைபிளில் நியாயாதிபதிகள் புத்தகத்தில் வரும் கிதியோனின் பெயர் பொறிக்கப்பட்ட பானையோடுகள் தற்போது இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 3100 ஆண்டுகள் பழமையானதாகும். இப்பெயரை பைபிளில் நியாயாதிபதிகள்:6:32 காணலாம். Excavations in Judean foothills uncover small jug with ‘Jerubbaal’ inscription inked 3,100 years ago may be name of biblical judge Gideon, mentioned in the Book of Judges:6:32
இயேசு யோவான் ஸ்நாபகனால் ஞானஸ்நானம் பெற்றதாக கருதப்படும் இடம்.
இயேசு யோவான் ஸ்நாபகனால் ஞானஸ்நானம் பெற்றதாக கருதப்படும் இடம் இது.ஜோர்தான் நாட்டிலுள்ள இந்த இடம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவு சின்னங்கள் பட்டியலில் வருகிறது.
சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்ட இடம்.
ஜோர்தானிலுள்ள நெபோ பர்வதம் (Mount Nebo in Jordan). சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். யோவான் 3:14,15
யூதர்கள் கண்களின் நடுவே Tefillin.
"கர்த்தரின் நியாயப்பிரமாணம்... உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாக இருக்கக்கடவது" யாத் 13:9 "உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது" உபா 6:8 என்கின்ற பைபிள் வசனங்களை அப்படியே பின்பற்ற ஒவ்வொரு நாளும் நான்கு வேத வசனங்களை கைப்பட எழுதி Tefillin எனப்படும் ஒரு தோல் பெட்டியில் எழுதியிட்டு நெற்றியில் அணிந்திருக்கும் சில யூதர்கள்.
"The Passion of the Christ" சினிமா வெற்றி.
"The Passion of the Christ" எனும் கிறிஸ்தவ சினிமா படத்தை தயாரிக்க மெல்கிப்சன் முற்பட்டபோது பெரும் சினிமா ஸ்டுடியோக்கள் தயாரிக்க மறுத்தன. ஆனால் அவர் தன் ஐகான் கம்பெனியிடமிருந்த 45 மில்லியன் டாலர்களையும் கொண்டு முழு படத்தையும் தயாரித்தார். படம் வெளியான போது 612 மில்லியன் டாலர் லாபத்துடம் முதல் மாபெரும் வெற்றி பெற்ற கிறிஸ்தவ சினிமா படமாகியது.
Follow Jesus - அட்டைப்பட செய்தி இட்ட நியூஸ்வீக்.
"கிறிஸ்தவ சபையையல்ல, கிறிஸ்து இயேசுவை பின்பற்றுங்கள்" என அட்டைப்பட செய்தி இட்ட நியூஸ்வீக் இதழ் ஏப்ரல் 2012.
பைபிள் குறிப்பிடும் காபூல்.
காபூல் என்கிற ஊர் பெயர் பைபிளில் இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஆனால் அந்த காபூலும் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலும் ஒன்றல்ல. பைபிள் குறிப்பிடும் காபூல் இஸ்ரேலில் இன்றும் உள்ளது.
கி.மு கி.பி His Story.
கிறிஸ்துவின் வாழ்க்கை கதையே (His story) வரலாற்றை கி.மு கி.பி என இரண்டாக பிரிப்பதால் வரலாற்றை History என்றார்கள்.
இன்றைக்கும் இருக்கும் பைபிள் லாசரு கல்லறை.
இயேசு உயிரோடு எழுப்பிய பைபிள் கால லாசரு என்பவரின் கல்லறை. இது இன்றைக்கும் ஜெருசலேம் நகருக்கு அருகே பெத்தானியா என்கின்ற ஊரில் இருக்கிறது.
யானை, குரங்கு, மயில் மாமல்லபுர சிற்பமும் பைபிள் வாக்கியமும்.
யானை, குரங்கு, மயில் இணைந்து காணப்படும் மாமல்லபுர சிற்பம். பைபிளில் ஒரு வாக்கியம் வரும், இஸ்ரேலின் "சாலோமோன் ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்" என்று. I இராஜாக்கள் 10:22. சாலோமோன் ராஜாவின் காலம் கிமு 970-931.
ஆதியாகமம் ஆபிரகாம் கால ஒட்டகங்கள்.
ஆதியாகமம் ஆபிரகாம் காலத்திலேயே ஒட்டகங்கள் வீட்டு உபயோகத்தில் இருந்திருக்கின்றன.ஆபிரகாமின் வாரிசான இஸ்மவேலும், இஸ்மவேலின் தாயான ஆகாரும் அவர் சந்ததிகளும் குடியேறிய இடம் இன்னாள் சவுதி அரேபியா.
https://www.bbc.com/tamil/global-58577309
இன்றைக்கும் இருக்கும் மார்ஸ் மேடை.
இன்றைக்கும் இருக்கும் பவுல் பிரசங்கம் செய்த ஏதென்ஸ் பட்டணத்தின் மார்ஸ் மேடை. அப்போஸ்தலர் நடபடிகள் 17.
"அறியப்படாத தேவனுக்கு" என்று எழுதியிருக்கிற பலிபீடம்.
"அறியப்படாத தேவனுக்கு" என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தை ஏதென்ஸ் நகரில் பவுல் கண்டதாக நாம் அப்போஸ்தலர் 17:23 ல் படிக்கிறோம். படத்தில் காணும் அந்த பலிபீடம் 1820 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது இப்போதும் ரோம்நகர அருங்காட்சியகத்தில் உள்ளது.
நவீன விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டது பைபிள் கால சோதோம் கொமாரோ நகர அழிவு
மீண்டும் நவீன விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டது பைபிள். சோதோம் கொமாரோ நகர அழிவுக்கு ஏறக்குறைய 3600 ஆண்டுகளுக்கு முன்பாக விண்ணிலிருந்து வீழ்ந்த அக்கினி காரணம். பல நூறு அணு குண்டுகளுக்கு சமானமான அழிவு நிரூபணம். 2000 டிகிரி செல்சியஸ் வரையான வெப்பம் பதிவான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு. மீண்டும் பைபிள் சம்பவங்கள் உண்மை என நிரூபணம் ஆகிறது. https://www.nature.com/articles/s41598-021-97778-3
Thursday, June 10, 2021
ஆகாய மார்க்கமாக வந்த யூதர்கள்.
ஆகாய மார்க்கமாக யூதர்கள் இஸ்ரேல் நாட்டிற்கு பல நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்க்கப்படுவார்களென்று
ரஷ்யாவிலிருந்து இஸ்ரேல் வந்த ‘யூதர்’களின் கதை
இஸ்ரேல் ஜனங்கள் திரும்பவும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டிலே வட தேசங்களாகிய ரஷ்யாவிலிருந்து குடியேற்றப்படுவார்கள் என்ற பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேறியது.
Friday, June 04, 2021
நிலங்கள் வாங்கப்பட்டு இஸ்ரேல் தேசம் உருவாகும் என்ற பைபிள்.
இஸ்ரேல் நாட்டில் நிலம் வாங்கப்படும் என்பதைப்பற்றிய தீர்க்கதரிசன நிறைவேறுதல். எரேமியா 32 :43,44 (கிமு 590)
மனுஷனும் மிருகமுமில்லாதபடிக்குப் பாழாய்ப்போயிற்று என்றும், கல்தேயரின் கையிலே ஒப்புக் கொடுக்கப்பட்டுப் போயிற்று என்றும், நீங்கள் சொல்லுகிற இந்த தேசத்திலே நிலங்கள்


இஸ்ரேல் மனுஷ சஞ்சாரமில்லாமல் பாழாய் கிடக்கும் என்ற பைபிள்.
இஸ்ரேல் மனுஷ சஞ்சாரமில்லாமல் பாழாய் கிடக்கும், யூதர்கள் உலகெங்கும் சிதறடிக்கப்படுவார்கள் என பைபிள் முன்னுரைத்த படி நடந்தது. லேவியராகமம் 26:31-33 (கிமு 1491)
எத்தியோப்பிய யூதர் இஸ்ரேல் திரும்புதல் பைபிள் நிறைவேறல்.
எத்தியோப்பியாவிலிருந்து யூதர்கள் இஸ்ரேல் திரும்புவார்கள் என்ற பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேறுதல்.ஏசாயா 11:11,12 (கிமு 713)
அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், சமுத்திரத் தீவுகளிலும், தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்விசை தமது கரத்தை நீட்டி, ஜாதிகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்.
இந்தியாவிலிருந்து இஸ்ரேல் நாட்டுக்கு திரும்பும் மனாசேயின் வம்சத்தார்கள்.
இந்தியாவிலிருந்து இஸ்ரேல் நாட்டுக்கு திரும்பும் பைபிள் கால மனாசேயின் வம்சத்தார்கள். இவர்கள் 2700 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேலிலிருந்து சிதறடிக்கப்பட்டு இந்தியா வந்தவர்கள். மீண்டும் இப்போது பைபிள் வாக்கு படி இஸ்ரேல் செல்கிறார்கள். பைபிள் சொல்லுகிறது "இதோ, நான் அவர்களை அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டிவருவேன். இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக் காப்பார்". எரேமியா 31:8,10
வெளியேறும் கடைசி யூதர்.
பைபிளில் முன்குறிப்பிட்டது போல, ஒரு நாட்டின் கடைசி யூதரும் அந்த நாட்டிலிருந்து வெளியேறி இஸ்ரேல் செல்லுகிறார். பைபிள் சொல்லுகிறது "என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்.இதோ, ஜல்லடையினால் சலித்தரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா ஜாதிகளுக்குள்ளும் சலித்தரிக்கும்படிக்கு நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமைமணியும் தரையிலே விழுவதில்லை" ஆமோஸ் 9:9,14 (கிமு 787).
Saturday, May 29, 2021
கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பெரிய ‘பைபிள்’
துபாயில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த குடும்பத்தினர் கையால் எழுதிய உலகின் மிகப்பெரிய பைபிளை உருவாக்கியுள்ளனர். அந்த பைபிளை துபாயில் உள்ள மார் தோமா தேவாலயத்திற்கு அவர்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
துபாயில் வசித்து வருபவர் மனோஜ் சாமுவேல். இவரது மனைவி சூசன் சாமுவேல். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர்களுக்கு கருண் என்ற மகனும், கிருபா சாரா என்ற மகளும் உள்ளனர்.
இவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து உலகின் மிகப்பெரிய பைபிள் புத்தகத்தை தயார் செய்துள்ளனர். இதற்காக 5 மாதங்கள் தினமும் 15 மணி நேரம் இந்த பைபிளை உருவாக்க செலவிட்டுள்ளனர்.
முழுவதும் கையால் எழுதப்பட்ட இந்த பைபிள் 1,500 பக்கங்களுக்கு மேல் உள்ளது. மொத்தம் 8 லட்சம் வார்த்தைகள் அதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 60 பேனாக்களை இந்த குடும்பத்தினர் பயன்படுத்தி எழுதியுள்ளனர். சாதாரண ஏ-4 அளவுள்ள காகிதத்தை விட 8 மடங்கு பெரிதான ஏ-1 அளவுள்ள காகிதங்களில் இந்த பைபிள் எழுதப்பட்டுள்ளது. தற்போது கின்னஸ் நிறுவனம் இதனை அங்கீகரித்து சான்றிதழ் தர உள்ளது என அந்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
துபாய் ஜெபல் அலி பகுதியில் உள்ள மார் தோமா தேவாலயத்தின் 50-வது ஆண்டு நிறைவு கடந்த 2019-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்த பொன்விழாவை முன்னிட்டு இதனை அங்கு வழங்குவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த பிரதியை அந்த தேவாலயத்தின் போதகர் ரெவரன்ட் ஜினு ஏப்பனிடம் குடும்பத்தினர் வழங்கினர்.
தோலினால் கட்டப்பட்ட இந்த புத்தகத்தை அழகிய வடிவமைப்புடன் கூடிய பிரத்யேக பேழையில் வைத்து அந்த தேவாலயத்திற்கு மனோஜ் சாமுவேல் குடும்பத்துடன் சென்று வழங்கியுள்ளார். தற்போது ஏ-2 அளவில் பைபிள் புத்தகத்தை மலையாள மொழியில் எழுதி வருவதாக மனோஜ் சாமுவேலின் மனைவி சூசன் சாமுவேல் தெரிவித்தார்
Wednesday, April 21, 2021
Wednesday, January 27, 2021
Tuesday, January 26, 2021
Friday, January 22, 2021
கவலைப்படாதிருங்கள்.
கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?. ஆகையால் கவலைப்படாதிருங்கள். மத்தேயு 6:27,31