
Wednesday, September 28, 2016
மக்களுக்கு செய்யும் சேவையே மகேசனுக்கு செய்யும் #சேவை என்பதையே "மிகவும் சிறியவராகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்" என்ற கிறிஸ்துவின் வாக்கியம் (மத் 25:40) பிரதிபலிக்கிறது. கண்ணுடையர் என்பவர் கற்றோர், முகத்து இரண்டு புண்ணுடையர் கல்லாதவர் என்றது #திருக்குறள். மூடநம்பிக்கைகள் நிறைந்திருந்த அக்காலங்களில் #கல்விப்பணி என்பது கண்ணில்லாதவர்களுக்கு கண்களை அளிப்பது போன்றிருந்தது. அப்படியே கல்விக் கண்கள் திறந்ததால் இருளில் இருந்த ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள் (மத் 4:15). கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்கு என்றுமே #தமிழகம் நன்றிகடன் பட்டிருக்கிறது.

Tuesday, September 27, 2016
குறைந்த நீர்வளமிருந்தும் மிகுந்த பலனை கண்டடையும் #இஸ்ரேல், "நாம் செய்கிறது நியாயமல்ல" (2இராஜா:7:9) என உணர்ந்து தாங்கள் பெற்ற தொழில் நுட்பத்தையும் வளத்தையும் உலகத்தோடு பகிர்ந்து கொள்ள எப்போதுமே திறந்த மனதோடு வந்திருக்கிறார்கள். #யெகோவா தேவனின் அவர்களுக்கான வாக்குத்தத்தமும் நீங்கள் புறஜாதிகளுக்குள் சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன் என்பதல்லவா.(சகரியா:8:13) God’s people are blessed to bless others.

இதோ, கிழக்குதேசத்திலும் மற்ற தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் இரட்சித்து,. அவர்களை அழைத்துக் கொண்டுவருவேன்; அவர்கள் #எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன். சகரியா 8:7,8 I will save my people from the countries of the east and the west. I will bring them back to live in #Jerusalem; they will be my people, and I will be faithful and righteous to them as their God. Zechariah 8:7,8

ஏலியன்கள் என்றும் வேற்றுகிரகவாசிகள் என்றும் இவர்கள் கூறுவதும் எச்சரிப்பதும் எல்லாம் கடவுளைத்தான். முதல் முதலாக ஏலியன் கடத்திப்போனது (First documented alien abduction) ஏனோக்கைத்தான் என்கிறார்கள். இரகசிய வருகையையும் வேற்றுகிரகவாசிகள் வந்து நம்மில் பலரை கடத்திச்சென்று விட்டார்கள் (Mass alien abduction) என்று சொல்லி உலகத்தாரை நம்பவைப்பார்கள். கடவுள் என்றோ இயேசு கிறிஸ்துவின் வருகை என்றோ சொல்லமாட்டார்கள். ஏலியன்கள் படையெடுப்பு என சொல்லி ஏமாற்றுவார்கள். அதற்கான ஆரம்பங்கள் தான் இது. வேற்றுகிரகவாசிகள் பற்றி மிக அதிகமாக செய்திகள் இப்போது பேசப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. ரோமர் 1:21

Monday, September 26, 2016
Friday, September 23, 2016
மண் உழுது வளமாக்கி விதையிட்ட பிறகு அது வளர்வதுவரை ஒன்றும் செய்யாமல் இருப்பதே நல்லது. ஆனால் நாம் அந்த மண்ணிடமும் விதைகளிடமும் கனி தா ! கனி தா ! என்று இறைவன் செய்யும் வேலையில் குறுக்கிடுகிறோம். சங்கீதக்காரன் சொல்லுகிறான்.கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார் என்று.(சங்கீதம் 40:1) ஆமென் பொறுமையோடு காத்திருப்போம்.

Wednesday, September 21, 2016
Tuesday, September 20, 2016
Tuesday, September 13, 2016
Monday, September 12, 2016
This is what happens when you magnify sand 250 times... O LORD, what a variety of things you have made! In wisdom you have made them all.Psalm 104:24 250 தடவைக்கு மேற் பெருப்பிக்கப்பட்ட கடற்கரை மணல் இவ்வாறு தான் தோற்றமளிக்கும்... கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர். சங்கீதம் 104:24

Sunday, September 11, 2016
Friday, September 09, 2016
கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார். உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று. தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். நீதிமொழிகள் 20:12, சங்கீதம் 119:73 சங்கீதம் 14:1 Ears that hear and eyes that see-- the LORD has made them both.Your hands made me and formed me.Only fools say in their hearts, "There is no God." Proverbs 20:12, Psalm 119:73 ,Psalm 14:1
